Pages - Menu

மருத்துவர்கள் மற்றும் நோய்த்தடுப்பு ‌பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை- தமிழ்நாடு ‌அரசு ஆணை!

 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு


ஆங்கில முறை மருத்துவர்களுக்கு ரூ.30,000, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை


பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை



தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு



 தமிழகத்தில் பொது முடக்கம்!

31.05.21 முதல் 07.06.21

வரை தளர்வுகளற்ற‌ ஊரடங்கு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தியாகச் செம்மல் பெரியவர் அய்யா டி.எம்.காளியண்ணன்‌ அவர்களுக்கு புகழ் வணக்கம்.



 தியாகச் செம்மல் பெரியவர் அய்யா டி.எம்.காளியண்ணன்‌ அவர்களுக்கு புகழ் வணக்கம்.

*********************************


பாபு ராஜேந்திரபிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசனசபையில் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகித்தார்கள். சட்டவிதிகளை, டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வல்லுநர்கள் குழு வரையறை செய்தது. அரசியல் சாசனம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று ஏற்கப்பட்டது. 

இது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று அமலுக்கு வந்தது.


1950ம் ஆண்டுமுதல் 1962ம் வருடம்வரை 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்த பெருமை பாபு ராஜேந்திர பிரசாத்துக்கே உரியது. வேறு எந்த குடியரசுத் தலைவரும் 5 ஆண்டுகளுக்குமேல் இப்பதவியை வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேச விடுதலைக்காக, மகாத்மா காந்தி ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற மகத்தான தலைவர்களின் அடிச்சுவட்டில் பயணித்த எண்ணற்ற தொண்டர்களில் ‘டி.எம்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.காளியண்ணன் கவுண்டரும் ஒருவர் ஆவார்.


சென்னை ராஜதானி சார்பில் அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்தவர்களில், சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் மட்டுமே, 99 வயதான நிலையிலும், உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல் இப்போது இயங்கி வருகிறார் என்பது சிலாகிக்கத்தக்க சிறப்பம்சமாகும்.


சுதந்திரப் போராட்ட வீரரான அவர் தமிழ்நாடு காங்கிரஸ்  துணைத்  தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1952ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும் 1957 மற்றும் 1962ல் திருச்செங்கோடு தொகுதியிலிருந்தும் அவர் சென்னை மாகாண சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டமேலவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


காளியண்ண கவுண்டர் – பார்வதி அம்மாள் தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். வாரிசுகள் அனைவரும் உயர்ந்தோங்கியுள்ளனர்.


‘இந்தியன் வங்கி’ இயக்குநராகவும் திருச்சி ‘பெல்’ இயக்குநராகவும் காளியண்ண கவுண்டர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பும் லயோலா கல்லூரியில் எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) பட்டமேற்படிப்பும் படித்த காளியண்ண கவுண்டர் கல்வித் துறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட அவர் உறுதுணையாகச் செயல்பட்டார்.


தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு விழிகளாகக் கருதிய காளியண்ண கவுண்டர் அறச் சிந்தனை கொண்டவர். எண்ணற்ற கோவில்கள் கட்டவும் திருவிழாக்கள் நடத்தவும் அவர் நிதியை வாரி வழங்கியுள்ளார். இதனால், கொங்குவேள் என்ற கௌரவப் பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பாலங்கள் கட்டவும் சாலைகள் அமைக்கவும், அவர் முனைப்பு காட்டினார். ஈரோடு அருகேயுள்ள பள்ளிப்பாளையம் பாலம் அவரது பெருமையை இப்போதும் பறைசாற்றுகிறது. இதைப்போல கொல்லிமலைச் சாலையும் அவரது கீர்த்தியை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

(நன்றி:ஒரே நாடு இதழ்)


தியாகச் செம்மல் பெரியவர் அய்யா அவர்களின் மறைவு 

ஈடு செய்ய‌ முடியாத பேரிழப்பாகும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌ நாமக்கல் மாவட்ட‌ அமைப்பு மறைந்த பெரியவர் அய்யா‌ டி.எம்.கே.,அவர்களுக்கு புகழ்வணக்கம்‌ செலுத்துகிறது.

G.O Collections...

பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் சார்ந்து...

தற்போது GPF மற்றும் CPS ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம் உடன் கூடிய அரசாணை...

மற்றும் கருணை அடிப்படை பணி நியமனம் சார்ந்த ஒட்டுமொத்த அரசாணைகளின் தொகுப்பு...