Pages - Menu

ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAM ன் முக்கிய செய்தி

 ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு:


அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் 

மேலே மெயில் MAILBOX என்பதை கிளிக் செய்தவுடன் 

உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் 


அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் 

CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்


இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன


அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில்

அது அவர்களுக்கான வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் 


எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து

அதை EMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது


 மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்


இனிவரும் காலங்களில் EMIS சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX) வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.





அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆணை

 நாமக்கல் மாவட்டம் - தமிழ் வளர்ச்சி - அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பு.


CLICK HERE TO DOWNLOAD

NHIS NEW FORMAT _ 2 அசல் படிவங்களை பூர்த்தி செய்து வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க ஆணை

 NHIS -அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 - புதிய விண்ணப்ப படிவத்தில் பணியாளர்கள் அனைவரும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் - தொடர்பாக நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஆணை...


CLICK HERE TO DOWNLOAD NEW FORMAT

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை-கோரிக்கை மனு இயக்கம்

 கோரிக்கை மனு இயக்கம்

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று (27/09/2021) கோரிக்கை மனு இயக்கம் - நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்றும், உயர் அலுவலர்களுக்கு அஞ்சலில் அனுப்புவது என்றும் முடிவாற்றியது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடமும், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.