புதன், 10 ஜூன், 2020

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

மாஸிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்!
(Alexander the Great)

தோற்றம் : கி.மு 20 ஜூலை 356
மறைவு : கி.மு 10 ஜூன் 323 (33 வயது)
அப்பா : பிலிப்ஸ்
ஆசிரியர் : அரிஸ்டாடில்
குதிரை : ஃபுஸிபேலஸ்

மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாஸிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர்.

பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர் தன் நாடு திரும்புகையில் கடும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்த அலெக்சாண்டர் தம் படைத் தலைவர்களை அழைத்து, "நான் இறந்தவுடன், திறந்து இருக்கும் எனது கைகள் வெளியே தெரியுமாறு சவப்பெட்டி செய்யுங்கள் என்றார். எல்லோரும் என்னை அந்தக் கோலத்தில் பார்த்தபிறகு அடக்கம் செய்யுங்கள்" என்றார். வியப்படைந்த படைத்தலைவர்களில் ஒருவர், "அரசே... எதற்காக இப்படி செய்யச் சொல்கிறீர்கள்?"என்று கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், "உலகையே வென்ற பேரரசனாகிய அலெக்சாண்டர், வெறுங்கையுடன்தான் மேலுலகம் சென்றுள்ளான் என்பதை மக்கள் உணர்வதற்காகத்தான்" என்று பதில் சொன்னார்.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று*

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

 நூலகத்துறையின் முன்னோடி
வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று.

✍ தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.

✍ இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.

✍ ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

✍ இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்" என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

✍ தமிழில் 'வேதியம் 1008" உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை.

✍ தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 87ஆவது வயதில் (2013) காலமானார்.

செவ்வாய், 9 ஜூன், 2020

பள்ளிக்கூடங்கள் திறப்பை இப்போது பேசுவதே அபத்தம்- முன்னாள் கல்வி அமைச்சர்

 நாளிதழின்   
நடுபக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்களின் குறிப்புரையோடு,
தமிழகத்தின் மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் நேர்காணல்...

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*


*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை ஏற்பு ! பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட பொதுத்தேர்வுகள் இரத்து! பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த  கோரிக்கை ஏற்பு !*

பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட
பொதுத்தேர்வுகள்  இரத்து!
பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.


இராமச்சந்திர காந்தி (ஜூன் 9, 1937—சூன் 13 2007)  ஒரு மெய்யியல் அறிஞர் ஆவார்.

 இவருடைய தந்தையார் தேவதாஸ் காந்தி (மகாத்மா காந்தியின் மகன்). தாயார் இலட்சுமி (இராஜாஜியின் மகள்)

 இராஜமோகன் காந்தி, கோபால்கிருஷ்ண காந்தி, தாரா காந்தி பட்டாசார்சி ஆகியோர் இராமச்சந்திர காந்தியின் உடன் பிறந்தவர்கள். இவரது மகள் லீலா காந்தி ஆவார்.


இராமச்சந்திர காந்தி ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மெய்யியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். விசுவ பாரதி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், கலிபோர்னியா ஒன்றிணைந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் இவருடைய முயற்சியால் தத்துவத்துறை ஏற்படுத்தப்பட்டது.


காந்தி அடிகளையும் இரமண மகரிசியையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார். பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் முயன்றபோதும் பரப்புரை செய்தபோதும் தம் இந்து மத ஆராய்ச்சி அறிவு கொண்டு அதற்கு எதிராக கருத்துகளை எழுதினார். அது போலவே 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நடந்த இனக் கலவரத்தில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தார்.

எழுதிய முக்கிய நூல்கள்

Moksha & Martyrdom: Reflections on Ramana Maharishi and Mahatma Gandhi
Sita's Kitchen: A Testimony of Faith and Inquiry
Svaraj: A Journey with Tyeb Mehta's Shantiniketan Triptych

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.


கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.


 இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார்.

 போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது.


ஆசிய விளையாட்டுப்
போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக செய்தார்.

பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,
கல்வி கற்க ,
உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார்.

டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

 தற்போது புதுவை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலில் சேர்ந்ததை தாண்டி 'நான் துணிந்தவள்' என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம்.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன(9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848) நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.

தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை, இன்றும் உலகத்தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).


ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?



ரோமானிய அரசை ஆண்ட Julio-Claudian வம்சத்தின் கடைசி வாரிசாக கிபி 54 இல் பதவியேற்கிறார் நீரோ.

இயற்கையிலேயே ரோமானிய கலாச்சாரத்திலும்,நுண்கலைகளிலும் ,
விளையாட்டிலும் ஆர்வங்கொண்ட நீரோ
அவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு அதற்கான பல தியேட்டர்களையும்
விளையாட்டு கூடங்களையும் கட்டினான்.
அவன் காலத்தில் ரோமானிய கலாச்சாரம் அனைத்திலும் சிறந்து விளங்கியது.

கிபி 64 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 தேதி இரவு ரோம் நகரத்தில் தீடீரென்று தீ பரவியது.
அகோரப் பசிகொண்ட அந்த தீ மொத்த ரோம் நகரையும் தின்று தீர்த்து சாம்பலாக்கியது.
மக்கள் பெரும் துயருக்குள்ளாகினர்.

ரோமப்பேரரசர் நீரோ கட்டாயத் தற்கொலைமூலம் இறந்தார். நீரோவுக்கு அப்போது வயது 30! கட்டாயத் தற்கொலை என்பது அக்காலத்தில் உயர்குடியினருக்கு மரண தண்டனை வழங்கும் முறையாக இருந்தது. 17 வயதில் ரோமப் பேரரசராகி, 13 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபின், நாட்டின் எதிரி என்று நீரோவை செனட் அறிவித்து, இத்தண்டனையை வழங்கியது.

 ரோம் எரியும்போது ஃபிடில் வாசித்தவருக்கு வேறென்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? உண்மை வேறு!

 தீப்பிடித்த கி.பி.64 ஜூலை 18 அன்று அவர் ரோம் நகரில் இல்லை. 50 கி.மீ. தொலைவிலுள்ள ஆண்ட்டியம் என்ற இடத்திலிருந்த அவரைச் செய்தி சென்றடைந்தவுடனே, ரோம் நகருக்குத் திரும்பிய நீரோ, எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக ஈடுபட்டதாக, நீரோ காலத்திய செனட்டரும், வரலாற்றாசிரியருமான டாசிட்டஸ் பதிவு செய்துள்ளார்.

 நிவாரணப் பணிகளுக்குத் தன் சொந்த நிதியை வழங்கியதுடன், பல நாட்கள் மெய்க்காவலர்கள்கூட இன்றி, இடிபாடுகளுக்கிடையே மக்களுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தீ விபத்தில் வீடிழந்தவர்கள் தங்க தன் அரண்மனைகளைத் திறந்துவிட்டதுடன், அவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவுகளையும் வழங்கினார்.

 தீ விபத்திற்குப்பின், நகரை மறுசீரமைப்பதற்கும், அதற்கு முன்பே வணிகம், கலை, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நீரோ விதித்த வரிகள் செல்வந்தர்களை கோபத்துக்கு
உள்ளாக்கின.
 அவர்களுக்கு ஆதரவாக கலகம் செய்த கிறித்தவ மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தயங்காமல் நீரோ கொன்றார். இவற்றாலேயே கிறித்தவ வரலாற்றாசிரியர்கள், பிற்காலத்தில், அவரைப் பற்றி மிக மோசமாக எழுதினர். ஒரு பேரரசர் என்ற எல்லைக்குள் நிற்காமல், அனைத்து நிலைகளுக்கும் நீரோ இறங்கிப் பழகியது, அக்காலத்தில் அவரை ஒரு கோமாளியாகப் பார்க்கச் செய்ததும் இவர்களுக்கு வசதியாகிப் போனது. நீரோவின் மறைவிற்குப்பின், ஒரே (கி.பி.69) ஆண்டில் 4 பேரரசர்கள் வருமளவுக்கு ரோமப் பேரரசில் பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 ஜூன், 2020

☀NHIS திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் கிளைம் தொகையினை அரசாணை 391 நாள்:20.12.2018 ன் படி பெறலாம்...




கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .

*இதில் நமது NHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


தலைமை காவலர் திரு.செல்வராஜ்
 அவர்கள்,
கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.

*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._

_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் NHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)

01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.

*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.
அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ளஅறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..
*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx

(NHIS Insurance Complaint number- 7373073730)