Pages - Menu

செவ்வாய், 29 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவு தினம் இன்று(1911).*

*17 வயதில் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்வதே அவரது கனவாக இருந்தது.*
 *ஆனால் அதற்கான உடல் கட்டு இல்லை மற்றும் கண் பார்வை குறைவு. அதனால் நிராகரிக்கப்பட்டார். பின்பு அமெரிக்க இராணுவத்தில் ஏஜன்ட் ஆக பணியாற்றினார். பின்னர் 3 ஆண்டுக்கு பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். அவர் செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச் என்ற பத்திரிகை மூலமாக அரசியல்வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் பின்னால் உள்ள திரைமறைவு நிகழ்வுகளையும்,போர்கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்து காட்டினார்.*

*புலிட்சர்,  1911 ஆம் ஆண்டில் அவர் இறக்குமுன்னர் பத்திரிகையாளர்களுக்கு விருது அளிக்க குறிப்பிட்ட தொகைப் பணத்தைக் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார்.*
*இத்தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.*