Pages - Menu

சனி, 23 நவம்பர், 2019

நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.

அரியலூர் மாவட்டம் மீண்டும் உருவாக்கப் பட்ட தினம் இன்று (2007).

 ஜனவரி 1, 2001 ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.

ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மீண்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.