வெள்ளி, 17 ஏப்ரல், 2020

உங்களுடைய Whatsapp கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும்(Two-step Verification மூலமாக)...

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் (Whatsapp Verification Scam) என்ற பெயரில், வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கில் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாட்ஸ் -அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய, சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் மாறியிருக்கும் சூழலில், வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்...

வாட்ஸ்அப் கணக்கை தொடங்குவதற்கு, ஒன் டைம் பாஸ்வேர்ட் (one time password) எனப்படும் ஓடிபி (OTP) எண் கட்டாயத்தேவையாக இருக்கும் சூழலில், யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஓடிபி தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஓடிபி தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கானது எனச் சொல்லி அவர் உங்களிடம் அந்த 6 இலக்க ஓடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார். அவரை நம்பி நீங்கள் அதை அனுப்பிவிட்டால், அந்த நொடியே உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும்.

 அதன்பின்னர், உங்களுடைய வாட்ஸ்அப்பிற்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகள், புகைப்படங்களை நீங்கள் பார்ப்பதுபோல் நேரடியாக அவராலும் பார்க்க முடியும். அதேபோல் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு மூலம், தவறான செய்திகளையும் அவரால் பகிரமுடியும். எனவே எந்த ஓடிபி எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள். வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபுள் (enable) செய்துகொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறந்ததும் மேலே உள்ள 3 புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை (menu)க்ளிக் செய்யுங்கள். அதில் வரும் Account ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், அதில் டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன்-ஐ கிளிக் (click) செய்து எனேபுள் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு 6 இலக்க ரகசிய (PIN) எண்ணை அமைக்க வேண்டும். இதை எனேபுள் செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழையவேண்டும் என்றால், இந்த பின் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பாதுகாக்கலாம்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் ~ செய்தி வெளியீடு...

10ம் வகுப்பு பாடங்கள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு...

வியாழன், 16 ஏப்ரல், 2020

*ஆங்கில வழிக் கல்வி:*
*ஆந்திர அரசின் அரசாணை கள் ரத்து.உயர்நீதிமன்றம் உத்தரவு.*
மாத ஊதியம் வங்கித்தகவல்:
""""""""""""""""""""""""""""""
 * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத
சம்பள நாள்:28.04.2020.

* ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய  நாள்:29.04.2020

*பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...

மாத ஊதியம் வங்கித்தகவல்: """""""""""""""""""""""""""""" * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பள நாள்:28.04.2020. * ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய நாள்:29.04.2020 *பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...


மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபுதிய வருமான வரியைபின்பற்ற விருப்பமா?~ வரிகள் ஆணையம் வேண்டுகோள்...

கொரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்~ஆயுர்வேத முறைகளை பரிந்துரை செய்த ஆயுஷ் அமைச்சகம்…

புதன், 15 ஏப்ரல், 2020

*🌐மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- மத்திய உள்துறை அமைச்சகம்*

*(முழு விவரம்)*

*☀பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.*

*☀இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.*

*☀மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.*

*☀வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☀கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி*

*☀வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி*

*☀மீன் இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு*

*☀வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும்.*

*☀மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து*

*☀மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை*

*☀மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.*

*☀தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.*

*☀மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20க்கு பின்  ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க்  அணிவது கட்டாயம்*

*☀சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் 20ந் தேதி முதல் இயங்க மத்திய அரசு அனுமதி*

*☀அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை*

*☀அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி*

*☀நியாய விலைக்கடைகள் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி*

*☀விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை.*

*☀தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்*

*☀முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி*

“ஆரோக்கிய சேது” கைப்பேசி செயலி ~ கொரோனா பற்றிய எச்சரிக்கை நமது கையில்...