செவ்வாய், 23 ஜூன், 2020

DEE Proceeding- 2019-2020ம் ஆண்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு சார்ந்த செலவின அறிக்கையினை கருவூலக் கணக்குடன் ஒத்திசைவு செய்து அனுப்ப கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்: 22.6.2020



*🌐ஜூன் 23,* *வரலாற்றில் இன்று: 'கணினி அறிவியலின் தந்தை' என்று போற்றப்படும் அலன் டூரிங் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 23,
வரலாற்றில் இன்று.


 'கணினி அறிவியலின் தந்தை' என்று போற்றப்படும் அலன் டூரிங் பிறந்த தினம் இன்று.


அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 சூன் 1912 – 7 சூன் 1954) என்பவர் ஓர் ஆங்கிலேயக் கணினி விஞ்ஞானி, கணிதவியலாளர், தருக்கவியலாளர், மறைகுறியீட்டு பகுப்பாய்நர், தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் கோட்பாட்டு உயிரியல் வல்லுநர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.



செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தையாகக் கருதப்படும் இவர்,
டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்தார்.பொதுப் பயன்பாட்டு கணிப்பொறிக்கு ஒரு மாதிரி கருவியாக இவருடைய டூரிங் கருவியைக் கருதலாம்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பிளெச்லி பார்க்கில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் இரகசியக் குறியீடுகளை உடைத்து இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கான மீநுண்ணறிவு உற்பத்தி மையத்தில் அலன் டுரிங் பணி புரிந்தார். அப்போது சில காலம், செருமனியின் கடற்படை தொடர்பான இரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் இவர் இருந்தார். இரகசியக் குறியீடுகளை மறைக்கவும் மற்றும் மறைக்கப்பட்டிருக்கும் செய்திகளை விடுவிக்கவும் பயன்பட்ட போருக்கு முந்தைய போலந்து நாட்டு மின்விசையியல் இயந்திரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட செருமன் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கான பல நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார். அட்லாண்டிக் போர் உட்பட பல முக்கியமான போர்களில் நாசீக்களைத் தோற்கடிக்க கூட்டணிக் குழுக்களுக்குத் தேவையான குறியீட்டு செய்திகளை கண்டறிந்து கொடுத்ததில் டூரிங் ஒரு முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார். மேலும், இவருடைய பங்களிப்பு போரை வெல்லவும் உதவியது.

போருக்குப் பின்னர் இயந்திரங்களை உணர்வு உள்ளவையாகவும், சிந்திக்கக் கூடியவையாகவும் உருவாக்க முடியுமா என்பது குறித்த செயற்கை அறிவுத்திறன் தொடர்பான விவாதத்துக்கு டூரிங் சோதனை மூலம் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்தில் பணிபுரிந்த போது நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்புக்களை செய்தார். ஆனாலும் இவை அவற்றின் முழு வடிவில் அப்போது உருவாக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டில் இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மான்செஸ்டர் மார்க் I என்னும் உலகின் முதலாவது உண்மையான கணினிகளுள் ஒன்றை உருவாக்கும் பணியில் இணைந்து கொண்டார்.

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நினைவு தினம் இன்று.*

ஜூன் 23,  வரலாற்றில் இன்று.

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நினைவு தினம் இன்று.

 தியாகராயர்( ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925 ) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர் பெற்றிருந்தார்.

1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார்.

 சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர்.

1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் இன்று.*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் இன்று.

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம் இன்று (1900).*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம் இன்று (1900).

பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர் இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.

“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம்.

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:ஒலிம்பிக் தினம் இன்று.*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

ஒலிம்பிக் தினம் இன்று.

விளையாட்டு போட்டிகளின் சிகரம். பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதன்சில் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி, 1894 ஜூன் 23ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்ட பின்னர் தான் நவீன ஒலிம்பிக்காக பரிணாம வளர்ச்சி பெற்றது.

 பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்வியாளரும் வரலாற்று ஆர்வலருமான பியரி டி கூபர்டின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவிய தினமே தற்போது உலக ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1948ல் தான் முதலாவது ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் இணைந்து உலக ஒலிம்பிக் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான  நாடுகளில் இந்த தினத்தையொட்டி ஒலிம்பிக் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டி பற்றி இளைஞர்களிடம் விழிப்புனர்வு உண்டாக்குவதே இதன் நோக்கம். விளையாட்டு மட்டுமல்லாது இசை, நடனம் இணைந்த கலாசார திருவிழாவாகவும் ஒலிம்பிக் தினம் அமைந்துள்ளது.
இதில் பங்கேற்கும் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சிறுவர், சிறுமியரை சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன் தக்க ஆலோசனைகள் வழங்கி விளையாட்டுத் துறையில் உற்சாகமாக ஈடுபட ஊக்குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

🌐ஜூன் 23,வரலாற்றில் இன்று:கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) நினைவுதினம் இன்று.

ஜூன் 23,
வரலாற்றில் இன்று.

கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) நினைவுதினம் இன்று.

  சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை  அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923இல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.