திங்கள், 4 நவம்பர், 2019

புதிய எல்லையுடன் இந்திய வரைபடம் ~ மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு…

*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் நினைவு தினம் இன்று.*

*'தமிழ்த் தாத்தா' உ.வே.சாவின் மாணவரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு நூல்களை எழுதியவர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர்.  இவர் எழுதிய வீரர் உலகம் எனும் நூலுக்கு 1967 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.*
*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *இயற்கையை நேசித்த பேராசிரியர் ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று.*


*ஜானகி அம்மாள்* *(நவம்பர் 4, 1897 - பிப்ரவரி 1984)*
*கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்தவர்.*

 *சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர்.*

 *கோயம்புத்தூரில் 1930இல் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது.*

 *1935இல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இளம் மாணவர்களையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்த 1999இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது.*
*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்ட தினம் இன்று (1869).*


*நேச்சர் (Nature) என்பது 1869ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தொடங்கி இன்றும் தொடர்ந்து ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கும் உயர்தரமான ஓர் அறிவியல் ஆய்விதழ்.*

 *இது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் இதழ்.*

 *உலகின் மிக உயர்ந்த உள்ளொழுக்கமுள்ள அறிவியல் ஆய்விதழ்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.*

 *பெரும்பாலான அறிவியல் சார்ந்த ஆய்விதழ்கள் தற்காலத்தில் தனிச்சிறப்பு பெற்றுள்ளன.*

 *அவற்றுள் நேச்சர் போன்ற சில ஆய்விதழ்களான, சயன்சு மற்றும் த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு போன்ற, மற்ற கிழமை (வார) ஆய்விதழ்களையும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இவை இன்றளவும் அறிவியல் சார்ந்த துறைகளில் நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகளைப் பெருமளவில் வெளியிட்டு வருகின்றன. பல்வேறு அறிவியல் சார்ந்த ஆய்வுத்துறைகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய வளர்ச்சி மற்றும் நேர்த்தியான ஆய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நேச்சர் ஆய்விதழில் கட்டுரையாகவோ அல்லது கடிதம் (மடல்) அல்லது செய்திக்குறிப்பு வடிவிலோ வெளியிடப்படுகிறது.*