சனி, 20 அக்டோபர், 2018

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஒரு வாரத்தில் தொடக்கம் வானிலை மையம்


மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு பள்ளிகளில் நடத்த அரசு உத்தரவு

🔥🔥🔥மூளை காய்ச்சல் விழிப்புணர்வு : பள்ளிகளில் நடத்த உத்தரவு


💥💥தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில்,
மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த
பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர
சிக் ஷா திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகளில், சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும், மூளை காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்த, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, வட்டார வாரியாக முகாம்களை நடத்த வேண்டும்.'தன் சுத்தம், சுகாதாரம், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உணவு முறை, மூளை காய்ச்சல் ஆகியவை குறித்து, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு தடை கோரிய வழக்கு அக் 26க்கு ஒத்திவைப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

அறிவியல் தொழில்நுட்புடன் டூப்ளிக்கெட் நிலாவை உருவாக்கும் - சீனா


சீனா: அங்க தொட்டு, இங்க தொட்டு, கடைசியில நிலாவையே டூப்ளிகேட் பண்ண ஆரம்பிக்க போகுது சீனா.
சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இயற்கையையும் விட்டு வைக்கவில்லை போலும். மின்சார செலவை குறைப்பதற்காகவும், தெரு விளக்குகளுக்கு பதிலாகவும் சீனா, ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாக நின்று ஒரு புது ஐடியாவை யோசித்தது.
வீண்செலவு
செயற்கை கோள்
அதன்படி, செயற்கை நிலவை உருவாக்கிவிட்டால் எந்த வீண் செலவும் வராது, நாடும் எப்பவுமே பளிச்னு இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது செயற்கை நிலாக்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி பெரும் வகையில் வடிவமைக்கப்படுமாம்.
நாடு பளிச்தான்
2022-க்குள் முடியும்
இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டதால், எப்படியாவது வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டம் முடிந்துவிடும் என்றும், அதற்குள் மேலும் மூன்று செயற்கை நிலாக்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செயற்கை நிலவுகள் வந்துவிட்டால் நாடு எப்போதுமே பளிச்சென்றுதான் இருக்கும்.
செயற்கை நிலா
8 மடங்கு ஒளி
மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளுக்கு இந்த செயற்கை நிலா வெளிச்சம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் நாடே இருளில் மூழ்கிவிட்டாலும் இருக்கவே இருக்கிறது செயற்கை நிலா. இது இயற்கையான நிலாவைவிட 8 மடங்குஒளி தரக்கூடியதாம். அதாவது இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம்.
வெளிச்சம்
புத்தம் புது முயற்சி
சூரியனிடமிருந்து வெளிச்சத்தை நிலா வாங்கினால், இந்த நிலாவிலிருந்து வெளிச்சத்தை சீனா வாங்கி இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நிலாவில் போய் வாழலாம் என்ற பேச்சு அடிபட்டதுபோய், இப்போது ஆஹா.. கடைசியில் நிலாவில் கை வைத்து விட்டதே.... 

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்

🔥🔥🔥அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் வரும் 22ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. சமூகநலத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்யுமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட்.! உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.!


கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.

ANDROID 9 PIE COMING TO 50 NEW SMARTPHONES: IS YOUR DEVICE ON THE LIST?

ஆண்ட்ராய்டு 9.0 .

இந்திய சந்தையில் கிடைக்கும் சில ஸ்மார்ட் போன்களுக்கு இந்த புதிய இயங்குதளத்தின் அப்டேட்கள் கிடைப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட் வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட் போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .

50 ஸ்மார்ட் போன் பட்டியல் ....

ஆனால் இந்த ஆண்ட்ராய்டு 9.0 இன் புதிய அப்டேட் வெறும் 50 ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் உங்களின் ஸ்மார்ட் போன் மாடலும் இடம்பெற்றுள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சாம்சங் :

- சாம்சங் கேலக்ஸி எஸ்9
- சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி நோட் 8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

எச்.எம்.டி குளோபல் :

- நோக்கியா 6.1 பிளஸ்
- நோக்கியா 6.1
- நோக்கியா 7.1
- நோக்கியா 7 பிளஸ்
- நோக்கியா 8
- நோக்கியா 8 சிராக்கோ
- நோக்கியா 3.1
- நோக்கியா 3
- நோக்கியா 1
- நோக்கியா 5
- நோக்கியா 5.1
- நோக்கியா6
- நோக்கியா 2.1
- நோக்கியா 2

ஒன்பிளஸ் :

- ஒன்பிளஸ் 3
- ஒன்பிளஸ் 3டி
- ஒன்பிளஸ் 5
- ஒன்பிளஸ் 5டி
- ஒன்பிளஸ் 6
- ஒன்பிளஸ் 6டி

ஹானர் :

- ஹானர் 8எக்ஸ்
- ஹானர் 10
- ஹானர் பிளே
- ஹானர் வியூ 10

எச்.டி.சி :

- எச்.டி.சி யு11 பிளஸ்
- எச்.டி.சி யு12 பிளஸ்
- எச்.டி.சி யு11

மோட்டோரோலா :

- மோட்டோ எக்ஸ்4
- மோட்டோ ஜி6
- மோட்டோ ஜி6 பிளஸ்
- மோட்டோ ஜி6 பிளே
- மோட்டோ இஜெட் 2 

போர்ஸ்

- மோட்டோ இஜெட் 2 பிளே
- மோட்டோ இஜெட் 3
- மோட்டோ இஜெட் 3 பிளே

சோனி :

- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2 அல்ட்ரா
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2 பிரீமியம்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1 காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் பிரீமியம்

Google Image search tips...

3rd Std ~ Term 2 ~ Maths, Science, Social Worksheet with QR Code…

தொலைநிலை கல்வி நடத்த அழகப்பா பல்கலைக்கு சிறப்பு சலுகை - U.G.C


அங்கீகாரமற்ற CBSE பள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை - அரசு முடிவு

மாநில பாடத்திட்ட பள்ளிகளில், மாவட்ட வாரியாக, அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரம் அறியப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, மற்ற பாடத்திட்ட பள்ளிகளில், இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால், பல பள்ளிகள், எந்த வசதியுமின்றியும், உரிய அங்கீகாரம் இன்றியும் செயல்படுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலித்தும், விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கணக்கெடுக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக,சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.இதில், பல பள்ளிகள், எந்தவித அங்கீகாரமோ, சி.பி.எஸ்.இ., இணைப்பு உரிமமோ இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.பல பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் குழாய்கள், ஆய்வகம், நுாலகம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாவட்டங் களில் இருந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கைகள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் தருமாறு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட உள்ளது.பின், டில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து, அவற்றின் இணைப்பு உரிமத்தை ரத்து செய்யவும், அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.
சி.பி.எஸ்.இ.,யிடம் இணைப்பு பெறாமல், அந்த பெயரை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது, சி.பி.எஸ்.இ., வழியாக, கிரிமினல்நடவடிக்கை எடுக்கவும், பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

அரசுப் பள்ளி மாணவரும் சாதனையாளர் ஆகலாம்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்


அரசுப் பள்ளி மாணவரும் நன்றாகப் படித்து அறிவியல்அறிவை வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறினார்.
நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் தான் படித்த பள்ளியில் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்தைத் திறந்துவைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளித் துறையில் இஸ்ரோ அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு உதவும் வகையிலான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணிகளில் இஸ்ரோ இதுவரை ஈடுபடவில்லை.
மீனவர்கள் கடலில் மீன்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்பட இஸ்ரோ மீனவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது. மீனவர்களுக்கு கடல் எல்லைகளைக் கண்டறியும் கருவிகளை கொடுப்பதற்கு இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இது மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
இஸ்ரோ செயல்படுத்தும் டெலிமெடிசின் திட்டம் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே மருத்துவ வசதியைப் பெறும் திட்டமாகும். இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்படும்.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இத்திட்டத்தில் உலகின் நான்காவது நாடாக இந்தியா வெற்றியடையும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிய சாதனையாளர்களாக வர முடியாது என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நன்றாகப் படித்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டால், அரசுப் பள்ளி மாணவர்களும் சாதனையாளர்களாக வலம் வர முடியும் என்றார் அவர்.

தமிழ்நாடு காவல் சட்டங்கள்

Railway Recruitment Cell online examination results

அரசு பள்ளியில் இயற்கைமுறை காய்கறி தோட்டம் - மாணவிகள் அசத்தல்


OFF LINE மூலம் முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் - பிடிஏ ஆசிரியர்கள் அதிர்ச்சி


விதிகளைத் திருத்த சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்


BSNL தீபாவளி சிறப்பு தள்ளுபடிஅறிமுகம்


இந்திய கரன்சியை கண்காணிப்பு பட்டியலிருந்து நீக்க அமெரிக்கா முடிவு


பள்ளிக்கல்வி -மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் -தொடர்பாக -- DSE PROCEEDINGS




அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்க தமிழக அரசு முடிவு...


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .

சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .

தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு...

சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.

 மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் ஆய்வு:

இந்நிலையில் சத்துணவு மையங்களில்சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம்1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.

அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும். மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய அப்டேட்டில் கலக்க வரும் வாட்ஸ் ஆப்.! சிறப்பு அம்சங்கள்.!


தற்போது புதிய அப்பேட்டில் களமிறங்க வாட்ஸ் தயாராகி விட்டது. 

இந்தியாவில் அதிகமானனோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதை மையமாக வைத்து தான் பொழுது போக்கு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் நடக்கின்றது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் புதிய அப்பேட்டை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர்களும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். 

இதில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாமா .!

சமூக வலைத்தளங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கு அதிகமானோரும், இந்திய அளவில் 250 மில்லியனுக்கு அதிகமானோரும் பயன்படுத்தி வருகின்றனர். .

இதனை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகி வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மூன்று அப்டேட்கள் வாட்ஸ்-அப்பில் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* வாட்ஸ்-அப்பை, இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக Settings பகுதியில் மாற்றம் வரவுள்ளது. அதில் பயனாளர்களின் அனுமதி கேட்டு, பின்னர் இன்ஸ்டாகிராம் இணைப்பு நிகழும்.

* குறிப்பிட்ட Chatting Session பிடிக்கவில்லை எனில் Vacation Modeஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிறமொழி சொற்களுக்கான தூய தமிழ் சொற்கள் ...