திங்கள், 20 மே, 2019

இணையதளத்தில் இருந்து அண்ணா பல்கலை சான்றிதழ் நகலை டவுன்லோடு செய்யலாம்...

இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் புதிய ஆப் ~ வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன்லோடு செய்ய ஏற்பாடு ~ பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்...

தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வு 3% GO_Ms_No_151




GO (Ms) No (262) __ 2019-2020 கல்வியாண்டு அரசு/உதவி பெறும் பள்ளிகளில் 1-5,6-8வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்க அரசாணை வெளியீடு



பள்ளிக்கல்வி துறையில் கல்வி சேனல் தொடங்குதல்- அனைத்து பள்ளிகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருத்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறை


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ~ மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்...

மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் நாமக்கல் மாவட்ட வாரியாக






*1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள்-தமிழக கல்வித்துறை*

*🌷1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் - தமிழக கல்வித்துறை*

*பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.*

*பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*


*மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.*

*இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த  முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த  பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி  ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின்  மூலம் நடத்தப்படுகிறது.*