வியாழன், 5 நவம்பர், 2020

திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) பிற்பகல் சந்திப்பு.

🍁🍁🍁🍁🍁🍁🍁
*திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*


திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) பிற்பகல் சந்தித்தனர்

சந்திப்பின் போது ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. தீபாவளி முன்பணம் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்க பெறும் வகையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும்,  
கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதும் விரைந்து தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டது.


இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,  மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் 
திரு.இரா.ரவிக்குமார்,    
திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு.சி.கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்திப்பு..

*நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்தித்தனர் .
விலையில்லா பாடநூல்களை பள்ளிகளுக்கே கொண்டு சேர்த்திட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கியும்,
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் ஈடிஎஸ் கோரிக்கை, நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின்  கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்கு மாவட்ட அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,  மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் 
திரு.இரா.ரவிக்குமார்,  மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

*📘புதுசா பழசா? ஓய்வூதியத் திட்டகுளறுபடி ஓயவில்லை மவுனம் காக்கும் வல்லுநர் குழு- தத்தளிக்கும் அரசு ஊழியர்கள்!*

*📘புதுசா பழசா? ஓய்வூதியத் திட்டகுளறுபடி ஓயவில்லை மவுனம் காக்கும் வல்லுநர் குழு- தத்தளிக்கும் அரசு ஊழியர்கள்!*

*☀️தேர்வுநிலை/சிறப்புநிலை கோரும் விண்ணப்பங்கள்,பதிவுத்தாள் மற்றும் கருத்துரு விண்ணப்பங்கள்..புதியது*

*☀️தேர்வுநிலை/சிறப்புநிலை  கோரும் விண்ணப்பங்கள்,பதிவுத்தாள் மற்றும் கருத்துரு விண்ணப்பங்கள்..புதியது*
விண்ணப்பங்களை படிக்க மற்றும் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க.

*📘✍️பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உத்தரவு.

*📘✍️பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உத்தரவு.

 
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3,000 உயர்நிலைப்பள்ளிகள், 3,000 மேல்நிலை பள்ளிகள், 6,000 தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்துக்கேட்கப்படுகிறது. 

 
பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு முடிவுகளை அன்று மாலையே அறிக்கையாக தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.