வியாழன், 29 மார்ச், 2018

கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்...


கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நாட்டில் 8 சதவீத பள்ளிகள் மட்டுமே பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு கல்வி கற்கும் உரிமை சட்டம் குறித்த மாநாட்டை டில்லியில்  நடத்தியது. இதில் 20 மாநிலங்களில் இருந்து அரசு சாரா அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு விபரம்:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் மட்டுமே, கல்விக்காக செலவிடப்படுகிறது. ஆனால், 6 சதவீதம் செலவிடப்பட வேண்டும் என, உலக நாடுகள் கூறுகின்றன. உலகின் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, நான்கு மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம், இந்தியாவில் உள்ளது. பள்ளி ஆசிரியர்களில், 20 சதவீதம் பேர், முறையான பயிற்சி பெறாதோர். கல்வி மையங்களில், வளர்ச்சிக்கான கல்வியின் தேவை உள்ளது. இதற்காக, பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டபோதும், அவற்றை அமல்படுத்துவதில், அரசுகள் அலட்சியமாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேசிய, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் கூறியதாவது:

 இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 8 சதவீதம் மட்டுமே, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த சட்டம், மிகுந்த ஆலோசனைகளுக்கு பின் இயற்றப்பட்டது. ஆனால், இதை செயல்படுத்துவதில் மந்த போக்கு காணப்படுவதால், ஒரு தலைமுறை குழந்தைகள், அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம், மிக மோசமான நிலையில் உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கல்வியின் தரத்தை உயர்த்த முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

EMIS-Mobile App - New Version Published...


EMIS-Mobile Android Application-இல் புதிய Version வந்துள்ளது. Playstoreல் Update செய்து கொள்ளவும். 

Click here for update ...

மார்ச்~31ம் தேதி வேலை நாள்…


தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2017-18ம் நிதியாண்டு வரும் மார்ச்~31ல் முடிவுறுவதால் பட்டியல்களை நேர்செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது.

மதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் கல்வியாண்டில் வழங்கப்படுமா?


எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளம் மூலமாக, கடந்த 2012ல் இருந்து திரட்டப்படுகிறது. இதை ஒருங்கிணைத்து, ஆதார் எண் சேர்க்கும் பணிகள், 99 சதவீதம் முடிந்தது. மேலும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, மாணவர்களுக்கு அடையாள அட்டை உருவாக்கும் வகையில், பிரத்யேக செயலி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், மாணவர்களின் புகைப்படத்தை பதிவேற்றி, பெயர், வகுப்பு, பிரிவு, ரத்த வகை, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை வடிவமைக்கப்படும். இதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சீருடையும் மாறுவதால், அடையாள அட்டை வழங்கினால், அரசுப்பள்ளி மாணவர்களின் மீதான புறத்தோற்ற பிம்பம் மாறும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர். கல்வியாளர்கள் சிலர் கூறுகையில்,

'பள்ளிக்கல்வித்துறையில், வரும் கல்வியாண்டில் தான், பல அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டம் மாறுவதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, 'டேப்லெட்' மூலம், வகுப்பு நடத்தப்பட உள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட உள்ளதால், அரசுப்பள்ளிகள் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதோடு, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் நாளிலே, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதற்கான முன் ஆயத்த பணிகள் துவங்க, இயக்குனர் உத்தரவிட வேண்டும்' என்றனர்.

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு~மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் ~ நீதிமன்ற தீர்ப்பாணை...