சனி, 13 அக்டோபர், 2018

பிரமாண்டமாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு - சேலம்
















Easy English SSA - SALM Words

பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடித்து அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்



ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் குப்பம்பாளையம் தொடக்கப் பள்ளியில் 55 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருவரும் பயன்படுத்துவதில்லை. எவர்சில்வர் கேன் வாங்க முடியாத சூழல் உள்ள குழந்தைகளுக்கு தலைமையாசிரியர் திருமதி த. சக்தி அவர்கள் தமது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சேலம் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் நவம்பர் 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தலைவர்கள் அறிவிப்பு



சேலம் ஜவகர்மில் அருகே உள்ள மண்டபத்தில் இன்று பிற்பகல்2:00 மணிக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
1)-  1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,
2)சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
3)21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,
4) 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.
5) இடைநிலை ஆசிரியர்கள்,முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.
இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.
 இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடத்தப்பட்டது.

மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கும் பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..? மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..? மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது. பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே....

பள்ளிகல்விதுறையில் எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவர அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, பெற்றோர்களின் மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னை போரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.




பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக அடையாள அட்டை அணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகி விடும்.

குறுஞ்செய்தி

இதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும் இணைக்கப்பட்டு உள்ளதால், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும் போது உடனடியாக மெசேஜ் சென்று விடும். அதே போன்று பள்ளி விட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவே ஒரு மெசேஜ்   பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்று விடும்.

இதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும். இதை விட மேலானது, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.

இதன் மூலம் மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...என்ற நிலை உருவாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்

அக்டோபர் 15 - உலக கை கழுவும் நாள் விழா - அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் - CEO உத்தரவு...

இன்சுரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தரவேண்டும் தேசிய ஆணையம் அதிரடி உத்தரவு...

DGE - +1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச் /ஏப்ரல் 2019 மாணவர்கள் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் - பதிவேற்றப்பட்ட விவரங்கள் சரிபார்த்தல்- இயக்குநர் செயல்முறைகள்