சனி, 30 அக்டோபர், 2021
வெள்ளி, 29 அக்டோபர், 2021
கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
தடுப்பூசி, ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .
தடுப்பூசி,
ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .
கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது.
இதுவரை 1,03,53,25,577 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், புதிதாக உலகம் முழுவதும் ஏஒய் 4.2 வகை வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸின் வேற்றுருவாக்கம் தான் இந்த ஏஒய் 4.2 . இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் உயிர்ப்பலியை அதிகமாக ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், கரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரிக்குள் இன்னும் வேகமாக அதிகமாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வியாழன், 28 அக்டோபர், 2021
செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!மாணவரின் உயர்கல்வி செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கிறது!
செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!
மாணவரின் உயர்கல்வி செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கிறது!
எட்டாம்வகுப்பு தனித்தேர்வு:29.10.2021 முதல் ஹால்டிக்கெட்.
எட்டாம்வகுப்புத்
தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்
நாளை(29.10.2021) வெளியீடு
++++++++++++++++++++
நவம்பர் மாதம் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''08.11.2021 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்புத் தனித் தேர்வை எழுத அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் முறை:
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால்
ESLC - NOVEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது''.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கீடு தாள் கொடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)