ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ISRO - ISCOPE SUMMER COURSE-2018 REGISTRATION FOR SUMMER COURSE...

என் அருமை ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் பாலமோகன் ராமசாமியின் வணக்கங்கள்...

வரும் 15-04-2018 முதல் துவங்கி 14-05-2018 வரை 30 நாட்களுக்கு ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி ISRO -ISCOPE Program சார்பில் ஆன்லைன் கோடை கால படிப்பு தமிழ் வழியில் நடைபெற உள்ளது.

இது முற்றிலும் ஒரு .புதுமையான, முயற்சி கட்செவி, முகநூல், மின் அஞ்சல் மூலம் மட்டுமே இந்த பயிற்சி நடைபெறும்.

ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பு ISCOPE ஒரு ஆண்டு அறிவியல் தொடர்பாற்றல் மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதழ் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பை முழுவதும் கட்டணம் ஏதும் செலுத்தாமல் படிக்கலாம்.

படிப்பை சிறப்பாக முடிப்போருக்கு Material , சான்றிதழ் வழங்கப்படும். மற்றோர்களும் கட்டணமில்லாமல் படிக்கலாம் அவர்களுக்கு Material, சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

Syllabus for summer course .

1.கோடை கால பயிற்சி என்பதன் வரலாறு என்ன?நோக்கம்பயன்பாடுயார் யாருக்கு அடுத்த தலைமுறைக்கான தேவையின் முக்கியத்துவம்

2.வாழ்க்கைத் திறன் மற்றும் திறன் தூண்டல்கள் என்பது என்ன?

3. வாழ்க்கைத் திறன்களின் அடிப்படைத் தேவைகள்

4. கற்றல் , திறன் மேம்பாடு

5. சுய திறன் என்பது என்ன? அதை கண்டறியும் உளவியல் முறைகள்

6. தேவை கோட்பாடுNeed - Demand - Supply

7. வாழ்க்கைக்கான தேடல், அறிவுத் தேடல், நிதர்சனம் , உண்மை தேடல்

8. திறனை மேம்படுத்தும் யுக்திகள்

9. மனித ஆற்றல் - உண்மை - பயன்பாடு- விரயம் - காலக்கோடுHuman potential - Performance _truth_Timeline

10. எது உண்மை Reality

இந்த படிப்பில் சேர விரும்புவோர் தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.06-04-2018 அன்று முதல் 13-04-2018 வரை Google form பூர்த்தி செய்து online ல் அனுப்பி வையுங்கள்.

IMPORTANT DATES:

REGISTRATION STARTS FROM 06-04-2018 AND CLOSES ON 13-04-2018

SELECTED PARTICIPANTS LIST WILL PUBLISH ON 14-04-2018

COURSE STARTS ON : 15-04-2018

First Come First Serve

முதலில் form பதிவு செய்யும் 100 ஆசிரியர்கள் மற்றும் 100 மாணவர்களுக்கு மட்டும் இந்த படிப்பு முழுவதும் கட்டணம் ஏதும் பெறாமல் நடத்தப்படும்.

கற்றலானது interactive participation , Group Discussion, Play way , Activity based, Case Study, ....... முறைகளில் நடைபெறும். ஒரு புதுமையான சான்றிதழ் படிப்புக்கு விருப்பமானோரை வரவேற்கிறோம்.


GOOGLE FORM LINK AND ONLINE REGISTRATION LINK https://goo.gl/forms/RNbwXDOWvzpV09ow1

திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணத்தின் போது ரயிலில் முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றுவது எப்படி?


ரயிலில் கிடைக்கும் சவுகரியங்களை கருத்தில் கொண்டு பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். இதனால், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பொங்கல், 
தீபாவளி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறை போன்ற காலங்களில் ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து பயணிப்பது என்பது தற்போது குதிரை கொம்பாக மாறி வருகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் முன்று மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பயணம் நெருங்கும் போது முன்பதிவு செய்த நபருக்கு பதில் அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு ஒரு நபர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை  ஏற்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்?. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்து புதிய நபரால் பயணிக்க முடியாது.

சரி, இந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு புது டிக்கெட் எடுக்கலாம் என்றால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காது. ஆனால், தற்போது முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றும் விதத்தில் ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதியின் படி முன்பதிவு செய்யப்பட்ட பயணி தன் இருக்கையை வேறு ஒரு நபருக்கு மாற்றித்தர முடியும். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முதன்மை முன்பதிவு  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மட்டுமே இந்த வசதியை பயணிகள் செய்ய முடியும். அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அரசு பணி நிமித்தம் ரயிலில் பயணம் செய்தால் முன்பதிவு இருக்கையை மாற்றம் செய்ய முடியும்.

இவ்வாறு மாற்றம் செய்ய ரயில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரியின் அத்தாட்சி கடிதத்தை கொடுத்து பயணசீட்டில் பெயரை மாற்றி வேறு நபர் பயணம் செய்ய முடியும். 

குடும்பத்தில் உள்ள நபர் முன்பதிவு செய்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ள ரத்த உறவுகள் அதாவது அப்பா, அம்மா, மகள், மகன், அண்ணன், தங்கை, கணவன், மனைவி ஆகிய நபர்களுக்கு முன்பதிவு செய்ய பயணசீட்டில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பெயரை மாற்ற முடியும். 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா போன்ற ரயில் பயணங்களுக்கு ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் இந்த இருக்கையை அதே கல்விநிறுவனத்தை சேர்ந்த மற்றொரு மாணவருக்கு மாற்றம் செய்ய முடியும்.

இதுவும் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக செய்ய வேண்டும். இந்த பெயர் மாற்றம் ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணம் போன்று குழு பயணத்தின் போது ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் அந்த பயணசீட்டை மற்றொரு பயணிக்கு ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அந்த குழுவின் தலைவரின் அத்தாட்சி கடிதத்தோடு மாற்றம் செய்ய முடியும். தேசிய மாணவர் படையின் உள்ள மாணவர்கள் குழு பயணத்தின் போது ஒரு மாணவனின் பயணசீட்டை மற்றொரு மாணவனின் பெயருக்கு அந்த குழுவில் உள்ள அதிகாரியின் கோரிக்கை கடிதத்தின் மூலமாக ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக மாற்றம் செய்ய முடியும்.

சிறிய நிலையங்களில் வசதியில்லை.

ரயில் டிக்கெட் யார் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர் சென்றால் தான் டிக்கெட்டை மாற்ற முடியும். டிக்கெட்டை கொண்டு வேறு நபர்கள் சென்றால் மாற்றம் செய்ய முடியாது. சிறிய ரயில் நிலையங்களில் இந்த வசதியை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு  உள்ளதால் அவர்கள் கணிப்பொறியில் இந்த பெயர் மாற்றும் வசதி  ரயில்வேத்துறையால் மறுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் சொத்து வாங்கும்போது துறைக்கு தெரியபடுத்த வேண்டும்-அரசாணை...

சிறப்பாசிரியர் தேர்வு முடிவை வெளியிடும் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிட பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்...

ELECTION CANCELLATION SOCIETY LIST...

பிளஸ் 1 மாணவர்களுக்கும், 'நீட்' இலவச பயிற்சி ...


பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து உள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவசமாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள், நாளை துவங்குகின்றன.மாநிலம் முழுவதும், 412 மையங்களில், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 72 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இவர்களில், 70 ஆயிரம் பேர் பயிற்சிக்கு வந்தனர். அவர்களிலும், நீட் தேர்வுக்காக, 9,000 மாணவர்கள் மட்டுமே, ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.இந்த, 9,000 மாணவர்களுக்கு மட்டும், நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், நாளை முதல் சிறப்பு வகுப்பு கள் துவங்க உள்ளன.
அதுமட்டுமின்றி, இந்த மாணவர்களில், 4,000 பேருக்கு, வரும், 9 முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள, எட்டு கல்லுாரிகளில், உண்டு, உறைவிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதனால், 9ம் தேதிக்கு பின், 412 மையங்களில், நீட் தேர்வு பயிற்சிக்கு, ஒரு வகுப்புக்கு சராசரியாக, 10 மாணவர்கள் மட்டுமே இடம் பெறுவர். எனவே, இந்த மையங்களை பயன் உள்ளதாக மாற்றும் வகையில், பிளஸ் 1 மாணவர்களையும், நீட் தேர்வு பயிற்சியில் பங்கேற்க வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள், விருப்பப்பட்டு நீட் பயிற்சி மையத்திற்கு வந்தால், அவர்களையும் பயிற்சி வகுப்பில் அனுமதிக்கும்படி, மைய பொறுப்பாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும்...


சென்னை:மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில், ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், எஸ்.எஸ்.ஏ., என்ற, அனை வருக்கும் கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன. இரு திட்டங்களுக்கும், தனியாக இயக்குனர்கள், இணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளர்கள், தனி அலுவலகம் என, பல கோடி ரூபாய் நிர்வாக பணிகளுக்காக செலவிடப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் செலவுகளை குறைக்கும் வகையில், இந்த இரு திட்டங்களையும் இணைத்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, அனைத்து மாநில அரசுகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில், இரு திட்ட இயக்குனரகங் களும் இணைக்கப்பட்டு, ஒரே திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இரு திட்டங்களின் இணைப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விபரங்களை திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல் 2018- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்ககுழு இயக்குநர்கள் பதவியேற்றல் சார்பு...