வெள்ளி, 30 நவம்பர், 2018

Changes in Income Tax Rules...


1. No Change in Income Tax Slabs

2. 1% additional health cess taking total cess on income tax to 4% (2% education cess & 1% higher education cess continues). This will marginally increase income tax for every tax payer.

3. Standard Deduction of Rs 40,000 to Salaried and Pensioners. However transport allowance (Rs 19,200 per annum) and medical reimbursement of Rs 15,000 has been abolished. So the net benefit for salaried would be Rs 5,800 only bringing marginal relief. However Pensioners would gain as they did not have transport & medical allowance.

4. 10% Long Term Capital Gains Tax on Equity and Equity based Mutual Funds introduced.

5. Medical Insurance premium exemption for senior citizen increased from Rs 30,000 to Rs 50,000 u/s 80D

6. Medical expenses will see increased tax benefits for senior citizens. 100,000 on critical illness u/s 80DDB

7. Rs 50,000 exemption for interest income from Bank or Post Office Fixed/Recurring Deposits for Senior Citizens

டிசம்பர் 3 _உலக ஊனமுற்றோர் தினம் அன்று தகுதியுடையோர் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி..



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப பயிற்சி

 விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் ரோபோடிக் ப்ரோகிரமிங் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக கிராமப்புற மாணவர்கள் ரோபோட்டிக் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருங்காலத்தில் ரோபோட்டிக் எனப்படும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்த செயல் விளக்கம் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல்முறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் நகரங்களில் இருக்கும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திறன் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் டெக்னாலஜி பற்றி விளக்கி கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்களை இயக்கி காட்டியும், அதன் செயல்பாடு குறித்தும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.

நீர்வளநிலவள திட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை தேடும் அதிகாரிகள்: உலக வங்கி கடன் வட்டியாக குட்டிபோடும் சூழல்

பல்வேறு நிதியுதவின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நீர்வளநிலவள திட்ட மூன்றாம் கட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை அதிகாரிகள் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள,நிலவள திட்டம் இரண்டாம் பாகம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தன் மூலம் இந்த திட்டத்தின் மூலம், ரூ.2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைகட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக, ரூ.780 கோடி செலவில் 1,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 2,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் இருந்தால், அந்த ஏரிகளை கண்டறிந்து உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தின் முதல்பாகத்தில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.1,513 ஏரிகளும் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக 1511 ஏரிகளுக்கு புனரமைப்பு பணி நடந்து வருகிறது. மூன்றாவது கட்ட பணிகளுக்கான வேலைகளை தொடங்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் விருப்ப திட்டம் என்பதால் இப்பணிகளுக்கு பொறியாளர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தில் 2,200 ஏரிகளை தேட வேண்டிய நிலையில் பொறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் புனரமைப்பு பணிகள் முடிந்து 2 முதல் 3 ஆண்டுகள் ஆன ஏரிகளில் மீண்டும் புனரமைப்பு பணி மேற்கொள்ளலாமா என்று நீர்வளநிலவள திட்ட இயக்குனரகத்திடம் கேட்டுள்ளது. இந்த நிலையில், நீர்வளநிலவள திட்டத்தின் முதற்பாகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாத ஏரிகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீர்வள நிலவள திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த ஏரிகளில் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ேதவைப்படும் நிலையில், உல வங்கி கடனை வீணாக செலவு செய்து வருகிறது. இதற்கு வட்டிமேல் வட்டி செலுத்தியாக வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


நான்கு ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் : மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசனை

பிளஸ் 2 முடித்த பிறகு பட்டப்படிப்புடன் கூடிய ஓராண்டு பிஎட் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசித்து வருகிறது. பிளஸ் 2 படித்து முடித்த பிறகு உயர்நிலைக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் அதிக அளவில் தெரிவு செய்யும் படிப்பு கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத்தான். பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற விரும்புவோர் 3 ஆண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் பிஎட் பட்டப்படிப்பு முடிக்க  வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பிஎட் படிப்புகளை நேரடியாக நடத்துகிறது. இதுதவிர மற்ற பல்கலைக்கழகங்களும் பிஎட் பட்டப் படிப்புகளை நடத்துகிறது.


முன்பெல்லாம், இந்த படிப்பு ஓராண்டு கால அளவில் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎட் படிப்புகள் இரண்டு ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்விக்கு வருவோர் ஆசிரியராக 5 ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அளவை குறைக்கும் வகையில் 4 ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் படிப்பும் படித்து முடிக்கும் வகையில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் பட்டப் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு படிப்பு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஓராண்டு குறையும். 

வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் துணைக்கருவியுடன் செல்லவேண்டும் -CEO உத்தரவு


மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வுத்துறை அலுவலகம்

மாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை  அலுவலகங்கள் திறக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

 தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கிறது. இதுதவிர 8ம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மணடல  அலுவலகங்களுக்கும் சென்று வருவதை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள்.


சிபிஎஸ்இ. (CBSE) பள்ளி மாணவர்களுக்கு 22 மொழிகள் கற்றுத் தர உத்தரவு

சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்தும் வகையில், 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாஷாசங்கம்’(மொழிக்கான சங்கம்) ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அட்டவணை 8ல் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளை, சிபிஎஸ்இ மாணவ, மாணவியர் அடிப்படை மொழியாக தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அந்த மொழிகளை  பிரபலப்படுத்துவது, அந்த மொழிகளில் தகவல் தொடர்பு செய்ய குறைந்தபட்சம் 5 வாக்கியங்களை தினமும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலாளர்களுக்கு பாஷா சங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதேபோல, சிபிஎஸ்இ தலைவருக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கும் அனுப்பியுள்ளது. இதன்படி மேற்கண்ட இந்திய மொழிகளாகிய 22 மொழிகளையும் தினமும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் கற்றுத் தர வேண்டும். இதுதொடர்பாக ஒரு திட்டத்தை பாஷாசங்கம் வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி, நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட மொழிகளை போதிக்க வேண்டும். இந்த மொழிகள் தவிர வேறு இந்திய மொழிகள் குறித்து கற்றுத் தர ஆசிரியர்களிடம் மாணவர்களோ, பொதுமக்களோ, பெற்றோரோ கேட்கும்பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மொழியில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து பள்ளி இறைவணக்க நேரத்தில் தினமும் 5 வாக்கியங்கள் சொல்லித் தரலாம். அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தேர்வு செய்து, அந்த பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்க உள்ளது.

01.12.2018 அன்று நடைபெற இருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கானத் தேர்வு (NMMS) 15.12.2018 (சனிக்கிழமை)அன்று நடைபெறும்~அரசுத் தேர்வுகள் இயக்ககம்...

SSA~Attendance App~ To monitor the marking of attendance by the Teachers in Schools - reg...

வியாழன், 29 நவம்பர், 2018

Karur District Court Recruitment 2018-09 Office Assistant Posts




Karur District Court Recruitment 2018 2019 | Karur District Court invites Application for the post of 09 Office Assistant, Gardener, Night Watchman, Sweeper, Masalchi Posts. Karur District Court Office Assistant Jobs Notification 2018 Released. Candidates are requested to Download Application through Official website https://districts. ecourts.gov.in/karur. Opening Date and time for Submission of Application is 26.11.2018 and end up by 10.12.2018. You can check here Karur District Court Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Karur District Court Selection Process, How to Apply, Karur District Court Syllabus, Karur District Court Question Paper, Karur District Court Admit Date Release Date, Karur District Court Exam Date, Karur District Court Result Release Date & other rules are given below.

Karur District CourtRecruitment 2018 Notification Highlights – Apply Now

Organization Name: Karur District Court
Job Category: Tamilnadu Govt Jobs
Official Website: https://districts. ecourts.gov.in/karur
No. of Posts: 09 Vacancies
Name of the Posts: Office Assistant, Gardener, Night Watchman, Sweeper, Masalchi & Various Posts
Job Location: Karur
Selection Procedure: Merit List, Interview
Application Apply Mode: Offline
Starting Date: 26.11.2018
Last Date: 10.12.2018


Name of the Post & No of Vacancies:

Office Assistant – 02 Posts

Gardener – 01 Post

Night Watchman -01 Post

Sweeper -01 Post

Masalchi -04 Posts

Eligibility Criteria for Karur District Court Office Assistant:

Office Assistant – VIII Std Passed. Candidates having Light (or) Heavy – Vehicle Driving License in force will be given preference

Gardener – Candidate must be able to read and write in Tamil

Night Watchman – Candidate must be able to read and write in Tamil

Sweeper – Candidate must be able to read and write in Tamil

Masalchi – Candidate must be able to read and write in Tamil

Salary Details:

For All Posts – Rs.15700 – 50000 (Pay as per the Tamil Nadu 7th Pay Commission rules)

Karur District Court Office Assistant Selection Procedure:

For the post of Office Assistant oral interview or written examination and oral interview will be conducted as the number of applications received and the same will be communicated through website h ttps://districts. ecourts.gov.in/karur No communication will be sent to the applicants individually. The communication is only made in the website.

For the posts of Gardender, Watchman, Sweeper and Masalchi oral interview only will be conducted.

How to apply Karur District Court Office Assistant Vacancy?

Step 1: Log on to Karur District Court Careers Page at official website to https://districts. ecourts.gov.in/karur
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: All the applications with passport size photos affixed and duly self attested on the right margin of the application in the space provided, as mentioned should be submitted along with self attested copies of all the testimonials, certificates on or before 10.12.2018 till 5.45 P.M. to the under mentioned address through Registered post with Acknowledgment.

Address to send the application form:
The Chief Judicial Magistrate,
Chief Judicial Magistrate Court,
Combined Court Building,
Thanthonimalai, Karur – 639 007.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 26.11.2018
Last date for Submission of Application: 10.12.2018

Offline Application & Official Notification Links:




Apply Mode: Online


திருநெல்வேலி ஆவின் நிறுவனம் Recruitment 2018-07 Technician, Driver – Apply Online


Tirunelveli Aavin Recruitment 2018 2019 | Tirunelveli Aavin invites Application for the post of 07 Deputy Manager (Dairy), Technician (Electrical), Technician (Boilerman), Light Vehicle Driver Posts. Tirunelveli Aavin Technician, Driver Jobs Notification 2018 Released. Candidates are requested to Download Application through Official website http://www.aavinmilk.com. Opening Date and time for Submission of Application is 26.11.2018 and end up by 12.12.2018. You can check here Tirunelveli Aavin Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Tirunelveli Aavin Selection Process, How to Apply, Tirunelveli Aavin Syllabus, Tirunelveli Aavin Question Paper, Tirunelveli Aavin Admit Date Release Date, Tirunelveli Aavin Exam Date, Tirunelveli Aavin Result Release Date & other rules are given below… Aspirants are requested to go through the latest Tirunelveli Aavin job recruitment 2018 fully, before applying to this job.

Tirunelveli Aavin Recruitment 2018Notification Highlights – Apply Now

Organization Name: Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 07 Vacancies
Name of the Posts: Deputy Manager (Dairy), Technician (Electrical), Technician (Boilerman), Light Vehicle Driver & Various Posts
Job Location: Tirunelveli
Selection Procedure: Academic Qualification, Oral test
Application Apply Mode: Offline
Official Website: http://www.aavinmilk.com
Starting Date: 26.11.2018
Last Date: 12.12.2018



Name of the Post & No of Vacancies:

Deputy Manager (Dairy) – 02 Posts

Technician (Electrical) – 02 Posts

Technician (Boilerman) – 01 Post

Light Vehicle Driver – 02 Posts

Eligibility Criteria for Tirunelveli Aavin Technician, Driver:

Deputy Manager (Dairy) – Must possess degree and IDD/NDD or post graduate degree in Dairy Science/Dairying or B.Tech in Food Technology/Dairy Technology/Food Processing from any approved institutions.

Technician (Electrical) – 1. SSLC / X std Pass 2. Must possess ITI (Electrical) in the trade of Electrician with National Trade Certificate in Lineman / Wireman ‘B’ Licence (or) Diploma in Electrical and Electronics

Technician (Boilerman) – 1. Pass in VIII Std. 2. Must possess Boiler Attendant Certificate Gr.II/Gr.III issued by the Director of Boiler Chennai to operate boilers as per the norms prescribed by the authority.

Light Vehicle Driver – 1. Must have passed 8th Std 2. Must be in possession of valid driving license to drive Light vehicles. 3. Must possess a minimum 3 years experience as LVD.

Salary Details:

Deputy Manager (Dairy): Rs.35900 – 113500/-

Technician (Electrical): Rs.19500 – 62000/-

Technician (Boilerman): Rs.19500 – 62000/-

Light Vehicle Driver: Rs.19500 – 62000/-

Tirunelveli Aavin Technician, Driver Selection Procedure:

Academic Qualification

Oral test

Application Fee/Exam Fee:

For Deputy Manager (Dg) Posts: Payment of fee Rs.250/- should be made by way of demand draft only, drawn in favour of “The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,” and payable at Tirunelveli. No fees for SC/ST applicants Demand draft can be drawn in any one of the Nationalised Banks / Cooperative Banks and examination fees for each post should be remitted separately. Any other modes of payment like cheque, postal order and cash will not be accepted.
For Technician (Electrical)/ (Boilerman) Light Vehicle Driver Posts: No Examination Fees

How to apply Tirunelveli Aavin Technician, Driver Vacancy?

Step 1: Log on to Tirunelveli Aavin Careers Page at official website to http://www.aavinmilk.com
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “The General Manager , The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatty Road, Perumalpuram Post, Tirunelveli – 627 007” by post so as to reach us by 12.12.2018. Envelope must be super-scribed with APPLICATION FOR THE POST OF ………………….. Advertisement No. – …..’2018

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 26.11.2018
Last date for Submission of Application: 12.12.2018

Tirunelveli Aavin Important Links:

For Deputy Manager (Dg) Posts:


For Technician (Electrical)/ (Boilerman) Light Vehicle Driver Posts:


Apply Mode: Online


Electricity-Namakkal E.D.C-Tentative Approval for Total shutdown at Substations for routine maintenance Works for the month of DECEMBER 2018...

SMC - பள்ளி மேலாண்மை முன்னேற்றக்குழு - பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்துதல் BRC க்கு நிதி ஒதுக்குதல் சார்ந்து CEO செயல்முறைகள்



குரூப்4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 3ம் தேதி தொடக்கம்~ டிஎன்பிஎஸ்சி தகவல்...

யூ.பி.எஸ் மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தும் போது மெயின் பாக்சை ஆப் செய்ய வேண்டும்...

🌷🌷🌷CCRT - 10 Days TRAINING FOR Govt / Aided School TEACHER'S



உங்கள் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யுங்கள்...

கஜா புயல் பாதிப்பால் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்? தமிழக அரசு கோரிக்கை… மத்திய அரசு பரிசீலனை…

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் திசம்பர் மாத உத்தேச பயணத்திட்டம்


மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டிக்காததால் பள்ளியிலும் பயன்படுத்துகிறார்கள் - ஆசிரியர்கள் கவலை

பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் மதுபானம் அறுந்துவதும், பள்ளியில் வன்முறையில் இறங்குவதும், டூவீலரில் சாகசம் புரிவதும், செல்போனில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதை பெற்றோர் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சிறுவர்களின் போக்கு திசை மாறும் விதமாக உள்ளது. டூவீலரில் அதிவேகமாக செல்வது விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஒட்டுவது என தொடர்கிறது. இதனால் எதிரே வரும் வாகனத்தில் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. பெற்றோர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர். போலீசார் பல்வேறு காரணங்களால் கெடுபிடி குறைத்தாலும் அதிகமாக சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி வருகின்றனர்.


மேலும் மாலை நேரங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட மதுபோதையில் திரிவதை காணமுடிகிறது. மறைவான இடங்களில் புகைப்பது, செல்போனில் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்ட செயல்களும் நடக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் சொல்வதை கேட்பது இல்லை எனவும், அவர்களுடன் தகராறு செய்வதாகவும் தெரிகிறது. இப்படி சிறுவர்கள் கெட்டு சீரழிவதால் வரும் கால சந்ததியினர் அழிவை நோக்கி செல்வதாகவும் இதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் எனவும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமுக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, இளைய சமுதாயம் கெடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போன். இதை தாராளமாக பயன்படுத்த பெற்றோர் அனுமதிப்பதால் இன்று யாரையும் மதிப்பது கிடையாது. ஆசிரியர்கள்முதல் அனைவரிடமும் ஒருவிதமனப்போக்குடன் செயல்படுகின்றனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் பெற்றோர், ஆசிரியர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் பிள்ளைகள் நல்ல வழியில் செல்வார்கள். மேலும் மாலை நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.

பள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடையா?

பள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளதுஎன்று செய்தி .

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,அனைத்து மாணவர்களும், மாணவியரும், பள்ளி நாட்களில் சீருடை மட்டுமே, அணிந்து செல்ல வேண்டும். சில பள்ளிகளில், காலணிகளும், பல பள்ளிகளில், 'ஷூ'அணிந்தும் செல்லவேண்டும் என்பது விதி.
அதேபோல்,நர்சரி பள்ளி குழந்தைகள்,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிந்து செல்லவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில அரசு பள்ளிகளில், மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில், பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வரு கின்றனர்.இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த பட்டு உள்ளனர்.அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும்,

தேவையற்ற அணிகலன்கள் அணிவதற் கும், மருதாணி வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில், ஏற்கனவே இந்த கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மாரடைப்பு நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும (app) செயலி கண்டுபிடிப்பு -மக்கள் வரவேற்பு

ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவரும், ஈ.சி.ஜி எனும் இயந்திரமும் தேவை. ஆனால், மாரடைப்பு ஏற்படும்போது இந்த இரு வசதியும் அருகில் இருப்பது கடினம்.

ஆனால், இப்போது தான் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறதே? அதை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்று கண்டறிய ஒரு செயலியை உருவாக்கியுள்ளது இன்டெர்மவுன்டெய்ன் ஹெல்த்கேர் என்ற நிறுவனம்.

கடந்த வாரம் அமெரிக்க இதய நலச் சங்கம் நடத்திய மாநாட்டில், இந்த செயலியின் துல்லியம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக மாற்றி, இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பும்.  உடனடியாக நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லாவிடில் நிம்மதியாக இருக்கலாம்.

இதய வலி உள்ள, 200 பேருக்கும் மேற்பட்ட வர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் இருப்பதை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் இதய மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

Rule amended GR published and now you can show your Driving License, Vehicular Insurance, RC, PUC etc. On your mobile. Latest circular for your ready Reference...

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்யும் பணியைத் துவங்கினார்..... நன்றிகளும், பாராட்டுகளும்...

கல்வி உதவித்தொகை வழங்குவதில்மெதுவாக செயல்பட்ட அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகை

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்காததை கண்டித்து  இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில்  கவரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  கும்மிடிப்பூண்டி அடுத்த  கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு  வழங்கப்படும் கல்வி  உதவித்தொகை ₹6 ஆயிரம்  கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.  தொடர்ந்து கல்வித்தொகை  வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்தநிலையில் நேற்று காலை இந்திய மாணவர்கள் சங்கம்  சார்பில் ஏராளமான மாணவர்கள் பள்ளி நுழைவாயிலில் திரண்டனர். திடீரென உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத கல்வித்துறையை  கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் கவரைபேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  மாணவர்களிடம் 15 நாட்களுக்குள் கல்வி உதவித்தொகை கிடைக்க உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு போராட்டத்தை  கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 இதை பற்றி மாணவர்கள் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி  உதவித்தொகை வழங்குவதில் அலட்சியம் காட்டினால் மற்ற மாணவர்களுடன் இணைந்து பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறுபவர்கள் பட்டியல் தயாரிப்பு - சரிபார்ப்பு பணியில் தலைமையாசிரியர்கள்


தமிழக அரசு உத்தரவால் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு -சமக்ரசிக்ஷா



எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு  
தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இயங்கி வந்த அனைவருக்கும் கல்வி இயக்கம், மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு மத்திய அரசின் திட்டங்களை ஒன்றாக இணைத்து தற்போது சமக்ரசிக்ஷா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டில் தொடக்க கல்விக்காக பராமரிப்பு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புவாரியாக எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதன்பேரில் தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் மாநில திட்ட இயக்குநர் அளிக்கும் புள்ளி விவரங்களை பெற்றுக் கொண்டு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கி வந்தது. நடப்பு ஆண்டுக்கான பராமரிப்பு மானியம் கடந்த செப்டம்பர் மாதம் கிடைத்தது. 
இதற்காக மத்திய அரசுக்கு, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய பட்டியலின்படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து 1 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் கொண்ட 3003 பள்ளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான பராமரிப்பு நிதி பெறுவதற்கான கணக்கெடுப்பை மாநில திட்ட இயக்குநர் நடத்தினார். அதில், தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பணியில் உள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவர்களின் அடாவடியால் நிலைகுலைந்துள்ள ஆசிரியர்கள்

காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை கையை 10ம் வகுப்பு மாணவன் பிடித்து முறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை  ஆங்கிலப் பாடத்திற்கான சிறப்பு வகுப்பினை ஆசிரியை ஹேனா ஜீன் நடத்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் ஆசிரியை அனுமதி   இல்லாமல் வகுப்பை விட்டு வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, உள்ளே போ, என கையை நீட்டிக் கூறியுள்ளார். உடனே, ஆசிரியையை  நோக்கி வந்த மாணவன்  ஆசிரியை ஹேனாஜீன் வலதுகையை பிடித்து முறுக்கி தள்ளிவிட்டு வெளியில் சென்றுள்ளான்.


இதே வகுப்பில் கடந்த வாரம் ஆசிரியர் அமர்வதற்காக கால் உடைந்த சேரைப்  போட்டு  வைத்தி ருந்ததை கவனிக்காமல் அதில் அமர்ந்து கீழே  விழுந்த ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களின் டூவீலர் வாகன இருக்கையை கிழிப்பது, பிரேக்  வயரை துண்டிப்பது, பெட்ரோல் டாங்கில் சர்க்கரை போடுவது , முட்டை வீசுவது, பிளாஸ்டிக் பாம்பை ஆசிரியர் மீது வீசி அலற வைப்பது, ஒருமையில்  பேசுவது, வகுப்பு  நடக்கும் போது கல் வீசுவது, படிக்கட்டில் இறங்கும் பொழுது ஆசிரியர் மீது பிடித்து தள்ளுவது, வகுப்பில் பட்டாசு வெடிப்பது,   போதைப்பொருள்களை சாப்பிட்டு விட்டு வகுப்பில் படுத்து கிடப்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதுகுறித்து இந்த மாதம் முதல் வாரத்தில் குறிப்பிட்ட சில மாணவர்களால் பள்ளியில் பிரச்சனைகள் நடந்து வருகிறது.  பிரச்னையில் ஈடுபடும்  22  மாணவர்களை  பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்  பொதுமக்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மேலும்  மேற்சொன்ன 22 மாணவர்களின் தவறான செயல்களால் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிய்வில்லை . இதனால் சுமார் 1300 மாணவ  மாணவியர்கள் கல்வி பயில முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட 22 மாணவர்களை பள்ளியில் இருந்தது உடனடியாக இடைநீக்கம்  செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்பியிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியை காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு  திரும்பியுள்ளார், மேலும் இதுகுறித்து மாணவன்  மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே மாவட்ட  எஸ்பியிடம் கொடுத்த புகார் மனுமீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அக்கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்,  இப்பள்ளியில் இருபால் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் தவறு செய்யும் மாணவர்கள் மீதும் எதையும் கண்டு  கொள்ளாமல் மாணவர்கள் பிரச்சினை வளர காரணமான தலைமை ஆசிரியரை மாற்றவும் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும், ஆசிரியர்களும்  கோரிக்கை வைத்துள்ளனர்.

புதன், 28 நவம்பர், 2018

SCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



கஜா புயலால் பாதிப்பு ஏதுமில்லையெனில் இன்மை அறிக்கையினை ஒப்படைத்தல் சார்பு ~ மாவட்டக்கல்வி அலுவலர் திருச்செங்கோடு…

நீட் தேர்வுக்கு புதிய செயலி பள்ளி மாணவி கண்டுபிடிப்பு



நீட் தேர்வுக்கு புதிய செயலி!



இன்றைய கல்வி யுகத்தில் பள்ளிப் படிப்பை மாணவர்கள் பலரும் சுமையாகவும், கடினமானதாகவும் நினைக்கும் மனப்போக்கு உள்ளது. அதிலும் 12-ஆம் வகுப்புக்கு வந்துவிட்டால் மருத்துவம், ஐஐடி, ஐஐஎம், சட்டம் போன்ற உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அழுத்தமும் மாணவர்களைத் தொற்றிக் கொண்டுவிடுகிறது. இதற்காக தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்வது முதல் செயலி மூலம் படிப்பது வரை, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஒருபுறம் பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு, மறுபுறம் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக நீட் தேர்வு பயிற்சிக்கான செல்லிடப்பேசி செயலியையும் உருவாக்கியிருக்கிறார் ஒரு மாணவி. அவர் இனியாள் கண்ணன். 
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தில்லி காவல் துறையின் போலீஸ் பயிற்சிப் பிரிவின் இணை ஆணையருமான கண்ணன் ஜெகதீசனின் மூத்த மகள்தான் இனியாள் கண்ணன். 

கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவையும், "நீட்'டையும் இணைக்கும் வகையில் "அனீடா' (ANEETA) என்ற பெயரில் ஒரு செயலியை இனியாள் உருவாக்கி இருக்கிறார். தில்லியில் சன்ஸ்கிருதி பள்ளியில் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் இம்மாணவி, இச்செயலியை உருவாக்கி இருப்பதைப் பற்றி நம்மிடம் கூறியதாவது: 
"தந்தையின் பணியிட மாற்றல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் புதுச்சேரியில் இருந்து தில்லி வந்தோம். அப்போது, மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. 
மாணவி அனிதா பிளஸ் டூவில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்பது மிகவும் வேதனையை அளித்தது. அப்போதுதான், நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
தற்போது செல்லிடப்பேசிகள் அனைவரிடமும் இருப்பதால், அந்த செயலி மூலம் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பயனடைய முடியும் என எண்ணினேன். இதையடுத்து, செயலியை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதற்கு ஆறு மாதங்கள் ஆகின.
இந்த செயலியில் சில ஆண்டுகளுக்கான 180 கேள்வித்தாள்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இதை நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி செய்தால் தேர்வு குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். கேள்விக்கான விடையை அளித்து நாம் நம்மையே மதிப்பீடு செய்து கொள்ளலாம். 
அனாலிசிஸ் கிராஃப் மூலம் எந்த பாடத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இது முற்றிலும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் இல்லாத இந்த செயலி, ஒரு மாதம் முன்புதான் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்குள் 5 ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தற்போது வரை இந்த செயலியை நான் மட்டுமே நிர்வகித்து வருகிறேன். பள்ளி இறுதித் தேர்வில் கவனம் செலுத்தி வருவதால், யாராவது தானாக முன்வந்து உதவ விரும்பினால், அவர்களும் இந்தச் செயலியில் நீட் தொடர்பான கேள்விகள், பதில்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள்ஆகியோருக்கு என்னைவிட அதிகமாகவே தெரியும் என்பதால் அவர்களும் பங்களிப்புச் செய்ய முன்வரலாம். ஒருவர் பதிவேற்றம் செய்தால் அது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிக்க முடியும் என்பதை இச்செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் உணர்கிறேன். நூலகத்தில் கூட நீட் தேர்வு போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் இருக்காது. இதனால், செயலி மூலம் இக்குறையைப் போக்க முயற்சி செய்துள்ளேன்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு கணினி பொறியாளராக எண்ணி உள்ளேன். இந்த செயலிக்கு முன்பு ஸொட்டீரியா (SOTERIA) எனும் பெண்கள் பாதுகாப்பு செயலியையும் உருவாக்கி உள்ளேன். 
நார்மலாக பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய செயலிகளில் ஆபத்து காலங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசிகளுக்கும், காவல் அதிகாரிகளுக்கு மட்டுமே அலர்ட் போகும். 

நான் உருவாக்கிய செயலியில் ஆபத்தில் உள்ள ஒருவர் அலர்ட் அனுப்பியவுடன், இதே செயலியைப் பயன்படுத்தும் அருகில் உள்ள பிறருக்கும் அலர்ட் சென்றுவிடும். காரணம், ஆபத்து வரும்போது அருகில் உள்ளவர்கள்தான் உடனடியாக உதவ முடியும். 
இதுபோன்று செயலியை உருவாக்கும் பணியை எனது பாடப் படிப்புடன் சேர்ந்து ஆர்வமாகச் செய்து வருகிறேன். சொல்லப்போனால் இதன் மூலம் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கிறது. 
இந்த "அனீடா' செயலியை உருவாக்க தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் ஊக்குவிப்பாக இருந்தனர். நீட் தொடர்பான கேள்விகளை எளிது, நடுத்தரம், கடினமானது என வகைப்படுத்துவதற்கு நிறைய ஆலோசனை அளித்தனர்.
எனது தந்தை கண்ணன்ஜெகதீசன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். அவரது குடும்பத்திலேயே முதல் தலைமுறை பட்டதாரி அவர்தான் என்பதால், கல்வியின் மூலம் எத்தகைய மாற்றத்தையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் என்பதை நன்கு தெரிந்தவர். இதனால், என்னையும், எனது சகோதரி ஓவியாளையும் கல்வியுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் விஷயங்களிலும் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்'' என்று முகமலர்ச்சியுடன் கூறுகிறார் இனியாள் கண்ணன்.
-வே.சுந்தரேஸ்வரன்

HSS HM Panel...

தனியார் நிறுவன அமைப்பினர் பள்ளியில் மாணவர்களை சந்திக்க தடை - CEO சுற்றறிக்கை!


தமிழ்நாடு மேனிலைக் கல்விப்பணி- தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான-பதவி உயர்வு கலந்தாய்வு-இணையதள வழியாக - நடத்திடுதல் - சார்ந்து...

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 3ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி




சென்னை: குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 3ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் (2015-16, 2016-17, 2017-18 ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடந்தது. இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கடந்த ஜூலை  30ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும்  காலிப்பணியிடம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ~ பள்ளிமானியம் 1-14 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு விடுவித்தல்-சார்பு...

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் விண்ணில் நாளை பாய்கிறது


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.
பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (புதன்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்குகிறது. மேற்கண்ட தகவலை விஞ்ஞானிகள் கூறினார்கள்.

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை : அமைச்சர் விஜயபாஸ்கர்


புதுடெல்லி,

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9–வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் முதலிடத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரிகள் அஷ்வின்குமார் சவுவே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உறுப்பு தானத்துக்காக ஏற்கனவே 3 முறை தமிழக அரசு விருது பெற்று இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக 4–வது முறையாக விருது பெற்றதில் பெருமைப்படுகிறோம்.
உறுப்பு தானத்தில் 1,198 கொடையாளர்கள் மூலம் 6,886 பேர் மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள். இருதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகமாக மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

உலக அளவில் சொற்பமாக நடைபெறக்கூடிய கைகள் மாற்று அறுவை சிகிச்சையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கைகள் பொருத்தப்பட்டன. இதையெல்லாம் இந்த விழாவில் மத்திய மந்திரிகள் பாராட்டினர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 2,165 பேருக்கும், 1,113 பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையும், 467 பேருக்கு இருதய மாற்று சிகிச்சையும், 357 பேருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக திறமையான டாக்டர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவ குழுவினர் தமிழகத்தில் உள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்–அமைச்சர் காப்பீட்டில் இருந்து ரூ.35 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்லாது, மதுரை, சேலம், கோவை, திருச்சி போன்ற 2–வது பெரிய நகரங்களிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரிவுபடுத்தி இருக்கிறோம்.

இந்த சிகிச்சையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தற்போது தமிழ்நாட்டில் 4,674 பேர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கிறார்கள். 416 பேர் கல்லீரல் மாற்றுக்காகவும், 40 பேர் இருதய மாற்றுக்காகவும், 33 பேர் நுரையீரல் மாற்றுக்காகவும் காத்திருக்கிறார்கள். 2 கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 பேர் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். உறுப்புகள் தானம் அதிகமாகும்போது, உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்த முடியும். உறுப்புதானம் செய்ய முன்வருபவர்களை அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கிறோம். அவர்களை வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை பட்டியலில் கொண்டுவரவும் ஒரு திட்டம் உள்ளது. இது உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை (கடைசி தேதி நவம்பர் 30–ந்தேதி) நீட்டிக்க கோருவீர்களா? என்ற கேள்விக்கு, அதுபற்றி ‘‘முதல்–அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்’’ என்று பதில் அளித்தார்.
தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேட்டதற்கு, ‘‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். அதற்கான நிதி ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது. ஏற்கனவே கூறியபடி, மந்திரிசபை ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’’ என அமைச்சர் கூறினார்.


அற்புத மருத்துவ குணங்கள் அடங்கிய சித்தரத்தை - உடல் நல மருத்துவம்


அற்புத மருத்துவ குணங்கள் அடங்கிய சித்தரத்தை..!

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி  இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும்  விலகிவிடும்.



ஆஸ்துமா குணப்படுத்த: சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி  வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.




எலும்புகள் பலம் பெற :இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து  தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு  நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும்.



உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு  இருமலை தணிக்கும்.

மத்திய அரசு பணி - BNPMIPL Recruitment 2018 Notification


BNPMIPL Recruitment 2018 2019 | BNPMIPL invites Application for the post of 21 Environmental Engineer, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I (Driver cum Logistics Attendant) Posts. BNPMIPL Environmental Engineer, Industrial Workmen Jobs Notification 2018 Released. Candidates are requested to Download Application through Official website www.bnpmindia.com. Opening Date and time for Submission of Application is 15.11.2018 and end up by 10.12.2018. You can check here BNPMIPL Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, BNPMIPL Selection Process, How to Apply, BNPMIPL Syllabus, BNPMIPL Question Paper, BNPMIPL Admit Date Release Date, BNPMIPL Exam Date, BNPMIPL Result Release Date & other rules are given below.

BNPMIPL Recruitment 2018 Notification Highlights – Apply Now

Organization Name: Bank Note Paper Mill India Private Limited
Job Category: Central Govt Jobs
No. of Posts: 21 Vacancies
Name of the Posts: Environmental Engineer, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I, Industrial Workmen Grade – I (Driver cum Logistics Attendant) & Various Posts
Qualification: 10th, ITI, Diploma, B.E/B.Tech
Job Location: Mysore (Karnataka)
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Offline
Official Website: www.bnpmindia.com
Starting Date: 15.11.2018
Last Date: 10.12.2018

Age Limit:

For Gen/ UR Candidates – be between (For Post 1 – 21 Years to 30 Years), (For Post 2 – 18 Years to 25 Years), (For Post 3 – 18 years to 30 Years)
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through BNPMIPL official Notification 2018 for more reference

Salary Details:

Engineer/Officer – Rs. 52,000/-

Industrial Workmen – Grade -I – Rs. 24,500/-

BNPMIPL Environmental Engineer, Industrial Workmen Selection Procedure:

Written Exam

Interview

Application Fee/Exam Fee:

Gen/ OBC – Rs.600/-

ST/SC/Ex-s/PWD- Rs.200/-
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline

How to apply BNPMIPL Environmental Engineer, Industrial Workmen Vacancy?

Step 1: Log on to BNPMIPL Careers Page at official website to www.bnpmindia.com
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Applications, complete in all respects along with enclosures should be sent only to the following address by Ordinary/Speed post so as to reach on or before 10.12.2018 The envelope should be superscribed as Application for the Post of ________________________________
Application for the Post of ________________________________ Ref : A d v t .No . 01/2018-19 dt.15.11.2018 The Managing Director Bank Note Paper Mill India Private Limited, Administration Building Paper Mill compound Note Mudran Nagar Mysuru -570003 BNPM will not be responsible for Postal delay or loss/ Non-delivery thereof. No correspondence in this regard will be entertained.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 15.11.2018
Last date for Submission of Application: 10.12.2018
Last Date for Payment of Application Fees:10.12.2018
Date of Examination: Jan/Feb 2019

BNPMIPL Important Links:




Apply Mode: Online


செவ்வாய், 27 நவம்பர், 2018

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்புகள் 2018


NHAI Recruitment 2018-2019, NHAI invites Online Application for the post of 70 Young Professional (Finance) Posts. NHAI-National Highway Authority Of India Recruitment 2018 Opening Date and time for Submission of Application is 26.11.2018 and end up by 11.12.2018. You can check here NHAI Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, NHAI Selection Process, How to apply, NHAI Syllabus, NHAI Question Paper, NHAI Admit Date Release Date, NHAI Exam Date, NHAI Result Release Date & other rules are given below…

NHAI-National Highway Authority Of India Recruitment 2018

Highlights for NHAI Recruitment 2018 Notification:

Organisation Name: National Highway Authority Of India
Official Website: www.nhai.org
Job Category: Central Govt Jobs
No. of Posts: 70 Vacancies
Qualification: Commerce/ Accounts
Name of the Posts: Young Professional (Finance) & Various Posts
Job Location: Across India
Selection Procedure: Short Listing, Interview
Salary: Rs.60,000/-pm
Application Apply Mode: Online
Starting Date: 26.11.2018
Last Date: 11.12.2018



NHAI Recruitment 2018 Vacancy Details:

Name of the Post & No of Vacancies:

Young Professional (Finance): 70 Posts

Eligibility Criteria for NHAI Young Professional (Finance):

Educational Qualification:

Degree in Commerce/ Accounts from a recognized university or ICAI/ ICWAI/ MBA Finance) from a recognized University/ Institute.

Experience
Experience in Financial Accounting/ Budgeting/ Internal/ Audit/ Contract Management/ Fund Management/ Disbursement in Central Government or State Government or Union Territories or Public Sector Undertakings or Semi Government or Statutory or Autonomous Organizations and other Government Bodies preferred.

Age Limit (As on 11.12.2018)

For Gen/ UR Candidates: 32 Years

Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through NHAI official Notification 2018 for more reference

Salary Details:

Young Professional (Finance): Rs.60,000 per month

NHAI Selection Procedure:

NHAI may follow the following process to select the candidates.

Short Listing

Interview

How to apply NHAI Young Professional (Finance) Jobs:

Log on to NHAI Careers Page at official website to www.nhai.org

Eligible candidates are advised to open Notification

Read the Advertisement carefully to be sure about your eligibility

Click on “Click here for New Registration”, if you are a new user.

Fill your Academic Qualification & Other Related Information as per the instructions

Ensure the information provided is correct

Complete the Registration & Click on “Submit”

Take a print out of online application for future use.

Important Dates:

Starting Date for Submission of Application: 26.11.2018

Last date for Submission of Application: 11.12.2018

NHAI Online Application & Official Notification Links:

NHAI Detail Advertisement PDF: Click Here
Clarification to Guidelines for EP & YP: Click Here
Policy Guidelines: Click Here
NHAI Online Application: Click Here


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு AE பணியிடங்கள்


TNPSC Recruitment 2018 2019 | TNPSC invites Online Application for the post of 41 Assistant Engineer (Industries), Principal Posts. TNPSC AE (Industries) Jobs Notification 2018 Released. TNPSC invites online applications for appointment in following AE (Industries) post in Tamil Nadu Public Service Commission. Opening Date and time for Submission of Application is 26.11.2018 and end up by 24.12.2018. You can check here TNPSC Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TNPSC Selection Process, How to apply, TNPSC Syllabus, TNPSC Question Paper, TNPSC Admit Date Release Date, TNPSC Exam Date, TNPSC Result Release Date & other rules are given below.


TNPSC Recruitment 2018Notification Highlights – Apply Now Online

Organization Name: Tamil Nadu Public Service Commission
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 41 Vacancies
Name of the Posts: Assistant Engineer (Industries), Principal & Various Posts
Job Location: Tamilnadu
Selection Procedure: Written Examination, Interview
Application Apply Mode: Online
Official Website: http://www.tnpsc.gov.in
Starting Date: 26.11.2018
Last Date: 24.12.2018



Name of the Post & No of Vacancies:

Principal, Industrial Training Institute / Assistant Director of Training (Post Code No.1729) (2010-2011, 2011-2012 & 2016-2017)) – 09 Posts

Assistant Engineer (Industries) (Post Code No. 1900) (2013-2014 & 2018-2019) – 32 Posts

Eligibility Criteria for TNPSC AE (Industries):

Principal – (i) A degree in any branch of Engineering or Technology of any recognised University or Institution under the purview of All India Council for Technical Education (AICTE) AND (ii) Practical experience in a workshop or factory for a period of not less than three years.

Assistant Engineer (Industries) – (i) Must possess a Bachelor of Engineering or Bachelor of Technology degree of any discipline except Civil Engineering and Architectural Engineering of any University recognized by the University Grants Commission or Institution recognized by the All India Council for Technical Education. AND
(ii) Practical experience in General purpose Engineering Workshop or in an Engineering Industry or in a recognized concern for a period of not less than six months
(OR)
Practical experience in a supervisory or operative capacity connected with production of goods or material or operation and maintenance of machinery and equipments in a recognized concern for a period of not less than six months.

Salary Details:

Principal – Rs.56100 -177500 (Level 22) as per the Tamil Nadu Revised Pay Rules, 2017

Assistant Engineer (Industries) – Rs.37700 – 119500 (Level 20) as per Tamil Nadu Revised Pay Rules 2017

TNPSC AE (Industries) Selection Procedure:

Written Examination

Interview

How to apply TNPSC AE (Industries) Vacancy?

Step 1: Log on to TNPSC Careers Page at official website to http://www.tnpsc.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 26.11.2018
Last date for Submission of Application: 24.12.2018
Last date for payment of fee through Bank (State Bank of India or Indian Bank): 27.12.2018

Online Application & Official Notification Links:




Apply Mode: Online