புதன், 23 ஜனவரி, 2019

சனவரி 26 பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்



அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு என் வேண்டுகோள்...

*தொடக்கக்கல்வித்
துறையில்  வேலைநிறுத்தத்தை வலுப்படுத்துங்கள்.

*பள்ளிக்கல்வித்துறையில் தீவிரப்படுத்துங்கள்.

* அரசுத்துறையின் பல்வேறு  அலுவலகங்களில் கவனம் செலுத்துங்கள்.

*தேவையின் அடிப்படையில், காலத்தின்  கட்டளையை ஏற்றுக்கொண்டு் கூட்டுப்பரப்புரைக்கும்,குழுச்செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை தந்து கடைமையாற்றுங்கள்.

*வெற்றிமுகம் நோக்கி பயணம் தொடருங்கள்.

*போராட்டக்களத்தில் வெஞ்சினத்தோடு சமர்புரியும் மன்றத்தின் மறவர்,மறத்தியர் அனைவரையும்  மாவட்ட அமைப்பு பாராட்டுகிறது;
வாழ்த்துகிறது. 

           ~முருகசெல்வராசன்.
               💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼

மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்~நாளிதழ் செய்தி...

School Education - Service Associations of State Government employees - Indefinite Strike called for by certain recognized / Un recognized associations from 22.1.2O19 Participation of state Government Employees /Teachers - Instructions - Issued-regarding...

ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு...

பள்ளிக்கல்வித்துறை-ஆசிரியர் சங்கங்கள் 22.01.2019 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துதல்~பள்ளிகள் தடையில்லாமல் இயங்க ஏற்பாடுகள் செய்தல்-சார்பு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மைய எல்கேசி,யூகேசி., வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரிக்கப்படுகிறது.

*23/1/19  வழக்கு விசாரணை.

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
பொதுச்செயலாளர்
பாவலர் 
க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரணைக்கு வருகிறது.

*அங்கன்வாடிக்கு
இடைநிலை
ஆசிரியர்களை
மாறுதல் வழங்குவதற்கு
தடைகோரிய வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம் 38 வதுகோர்ட்டில் 13 ஆவது  வழக்காக விசாரனைக்கு வருகிறது.

*ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திரு. ஜி.சங்கரன் அவர்கள் இவ்வழக்கில் வாதங்களை  முன்வைக்கிறார்.



தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் ~ ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்பு...

ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது...

@ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி.

 @ஆகஸ்ட் 22 இல் ஒருநாள்  அடையாள வேலைநிறுத்தம்.

 @செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம்.

@நீதிமன்றத்தில்  தலைமைச்செயலாளர்.

 @இதன் விளைவாகவே  தமிழக அரசு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தியது.

@இப்போது நாம் மாதம்மாதம் பெறும் ஊதியம் இந்தப் போராட்டங்களினால்,ஜாக்டோ-ஜியோவால் வந்ததே, கிடைத்ததே. 

@இன்று போர்க்களம் புகுந்திடுங்கள்.
போராளியாக நின்றிடுங்கள். வரலாறு போற்றும். வரும் தலைமுறை வாழ்த்தும். நம் வாழ்க்கைத் தரமுயரும்.

*வாருங்கள், வெல்லலாம்*
அன்போடு அழைக்கிறது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.