வியாழன், 22 அக்டோபர், 2020

அனைத்து வகை ஆசிரியர்கள் -09.03.2020 க்கு முன்னர் உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதியம் பெறாதவர்கள்- விவரங்கள் கோருதல்-திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 22.10.2020..

அனைத்து வகை ஆசிரியர்கள் -09.03.2020 க்கு முன்னர் உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதியம் பெறாதவர்கள்- விவரங்கள் கோருதல்-திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 22.10.2020..

*🌟பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட விபரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் அனைத்து பணவரவு அலுவலர்களுக்கு கடிதம்..*

*🌟பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட விபரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக  நாமக்கல்  மாவட்ட கருவூல அலுவலர் அனைத்து பணவரவு அலுவலர்களுக்கு கடிதம்..*

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர் மன்றம் வலியுறுத்துதல் தொடர்பான கடிதம்.

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண 
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
 ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தல் தொடர்பாக...

அன்பானவர்களே! வணக்கம்!
இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,
சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை கடந்தாண்டே (2019) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தது.
இதன் பின்னர் தலைமைஆசிரியர் கூட்டம் நடத்தி ஆசிரியர்மன்றத்திற்கு  எதிராக சிலரை தூண்டி விட்டு குளிர்காய்ந்துக்கொண்டு , ஆசிரியர் மன்றத்தின் மீது சில அல்லக்கைகளின் துணையை வைத்துக்கொண்டு அவதூறுகளை அள்ளி வீசிப்பார்த்தார்.
ஆனாலும் இவைகள் எதுவும் எடுபடாத நிலையில்,வேறு வழியின்றி மேற்கண்ட அலுவலர் மிகுந்த வீறாப்புடன் தானே (அலுவலக நிர்வாகமே) வருமானவரித் தொகையை இடிடீஎச் (E-TDS) செய்து விடுவதாக உறுதி கூறினார். அப்போதைக்கு இப்பிரச்னையை இத்தகு உறுதிமொழி கூறி முடித்துக்கொண்டார்.
மேற்கண்ட அலுவலர் இந்த உறுதிமொழியை இன்றையவரையிலும் (19.10.2020)வரையிலும் காப்பாற்றிட வில்லை என்றே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்துஉள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரை அலைபேசியில் அழைத்து ஒருவாரக் காலத்திற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
நாமக்கல் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையை அடுத்து தன்னை பாதுக்காத்துக்கொள்ளும் வகையிலும், தனது சில அல்லக்கைகளை காப்பாற்றிடும் நிலையிலும் தானே (அலுவலக நிர்வாகமே) படிவம் 16 பெற்றுத்தருவதாக புலனக்குழுவில் தகவல் பதிவு செய்து உள்ளார்.
தற்காலிகமாக , இப்போதைக்கு இப்பிரச்னையை ஊத்தி மூடுவதற்கும், தனது அல்லக்கைகளின் வழியில் இப்பணியை செலவின்றி  - வருவாயோடு செய்துக்கொள்வதற்கும்   வழிவகைத்தேடிக்கொண்டு உள்ளார் என்றே கருதிட வேண்டி உள்ளது.

மர்மதேசம்-விடாது கருப்பு  சின்னத்திரை தொடர் முடிவுக்கு வந்தாலும் வரும், இப்பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கருதுகிறது.

காரணம் யாதெனில் ,
காசு...பணம்...துட்டு...

பசுந்தோல் போர்த்திய கயவர்களை அம்பலப்படுத்துவோம்!
ஆசிரியப் பெருமக்களின் 
 காசுக்கும்-பணத்திற்கும் 
 நாவில் எச்சில் ஊற காத்திருக்கும் ஓநாய்களை விரட்டியடிப்போம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பீர்!.
நன்றி!
-முருகசெல்வராசன் & மெ.சங்கர்.

அக்டோபர் 22,வரலாற்றில் இன்று.முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா அவர்களின் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 22,
வரலாற்றில் இன்று.

முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 
அவர்களின் நினைவு தினம் இன்று.


திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் மாணவராகத் தேறி, அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியில் 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

உப்பு சுங்க இலாகா தேர்வில் முதலிடம் பெற்றவர், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணி நிமித்தமாக குதிரையில் பல மைல்கள் பயணம் செய்வார். குதிரை சவாரி மிகவும் பிடிக்கும்.

கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி, நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.



இவர் பணியாற்றிய பல ஊர்களில் மருத்துவ வசதி கிடையாது என்பதால், தன் பிள்ளைகளுக்கு இவர்தான் குடும்ப வைத்தியர். மருத்துவப் புத்தகம், முதலுதவிப் பெட்டி, மருந்துகள் எந்நேரமும் அவரது வீட்டில் இருக்குமாம்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.

இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.

 ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.

 ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.



சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.

அக்டோபர் 22,வரலாற்றில் இன்று.இந்தியா நிலவை நோக்கி சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவிய தினம் இன்று(2008).

அக்டோபர் 22,
வரலாற்றில் இன்று.

இந்தியா நிலவை நோக்கி 
சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவிய தினம் இன்று(2008).

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் .மன்றம். திரு.நா.சண்முகநாதன் அவர்களுடன் மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் அஞ்சலி செலுத்துதல்.

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார்  
திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் அவர்களுக்கு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் .மன்றம். திரு.நா.சண்முகநாதன் அவர்களுடன் மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் அஞ்சலி செலுத்துதல்.

பகை உணர்வோடுதமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு அன்றாடம்புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

பகை உணர்வோடு
தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு  அன்றாடம்
புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!

தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் 
காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!

தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்களின் மீதுபழிவாங்கும் வகையில் பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளை ,ஒழுங்கு நடவடிக்கைகளைமுற்றாக திரும்பப்பெறுக!தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்களின் மீது
பழிவாங்கும் வகையில் பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளை ,
ஒழுங்கு நடவடிக்கைகளை
முற்றாக திரும்பப்பெறுக!


தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழக அரசே!உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து வழங்குக!தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழக அரசே!
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை 
ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து வழங்குக!

தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.