வெள்ளி, 6 டிசம்பர், 2019

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழல் முறைகேடு - நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வலியுறுத்தல்

அன்பானவர்களே! வணக்கம். எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில்
பல லட்சக்கணக்கான ரூபாய் அளவில் கையாடல்கள் , முறைகேடுகள் பல்லாண்டு்
காலமாகவே நடைபெற்று வருகிறது.
இன்றும் நின்றபாடில்லை. சரி் செய்துக்கொள்கிறோம் எனும் சமாதானமும் ,
பசப்பு வார்த்தைகளுமே வெளிவருகிறது.
குறைகளை,
கறைகளை இன்றும்
களைந்த பாடில்லை.  எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கூட்டுறவு சங்கத்தில்
ஆளும் அரசியல் தலையீடுகளும் -செல்வாக்குகளும், நிர்பந்தங்களும் அளவுக்கு அதிகமாவே செலுத்தப்படுகிறது.
இத்தகு அதிகார அத்துமீறல்கள் மற்றும் அதிகார  வரம்புமீறல்களின் அழுத்தங்களை புறந்தள்ளி
இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும், கூட்டுறவுத்துறை விதிகளின் கீழும் தவறிழைத்தோர் மீது நேர்மைமிகு  நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!கூட்டுறவுத்துறை மாண்புகளை பாதுகாத்திடுக! கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்  மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.

TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகை ஒரே APP இல் பதிவு செய்யும் வசதி...

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்...


JIO "NEW ALL-IN-ONE" PLANS...