புதன், 21 அக்டோபர், 2020

முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் 20.10.2020 நினைவேந்தல் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  மாநிலத் தலைவர் திரு .நா.சண்முகநாதன் ,மாநிலச்செயலாளர் திருமுருகசெல்வராசன்,மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.சீனி. சின்னசாமி, புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திரு .கே.செல்வராசன், தேனி மாவட்ட செயலாளர் திரு ராஜவேல் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சிவகங்கை திருச்சி மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 20.10.2020அன்று முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயாரின்திருமதி .
இராசாமணி தங்கபாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

🌟ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.*

NCTE பொதுக்குழு கூட்ட முடிவுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

அக்டோபர் 21,வரலாற்றில் இன்று.உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று.


உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று. 
 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் பிறந்தார் (1833). தந்தை கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியியலாளர். இதனால் இயல்பாகவே இவருக்கும் பொறியியலில் குறிப்பாக வெடிபொருட்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தது. ராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இவருக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

தந்தையுடன் இணைந்து ஆய்வகத்தில் பரிசோதனைகளில் உதவினார். இவரது தந்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாகத் திகழ்ந்தார். எனவே தன் மகனை தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்களிடம் அனுப்ப முடிந்தது.

இதனால், வேதியியல் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மற்றும் ரஷ்ய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1850-ல் பாரீஸ் சென்றார். 18 வயதில் கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் என்பவரின் கீழ் சிறிது காலம் பணிபுரிந்தார். அமெரிக்காவில் 4 ஆண்டுகள் வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த தனது கண்டுபிடிப்புகளுக்கான முதல் காப்புரிமையை பெற்றார். குடும்பம் மீண்டும் ஸ்வீடன் திரும்பியது. இவர் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் முழு மூச்சாக ஈடுபட்டார். குறிப்பாக நைட்ரோகிளிசரினின் பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பல சிறிய பெரிய விபத்துகளை சந்தித்தாலும் மனம் கலங்காமல் தன் கண்டுபிடிப்புகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த தொழிற்சாலைகளை உருவாக்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரினை விட எளிதாகக் கையாளக் கூடிய மற்றும் பாதுகாப்பான டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார்.

இதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். 1875-ல் டைனமைட்டை விட மேலும் ஸ்திரத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார். ஆயுதத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

இவரது கண்டுபிடிப்புகள் மூலம் அளவற்ற செல்வத்தை ஈட்டினார். போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ததன் மூலமும் ஏராளமான செல்வத்தை குவித்தார்.

 சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சமாதானத்தைப் பெரிதும் விரும்புபவராக இருந்தாலும், இவரது மரணத்துக்கு முன் 90 ஆயுத தொழிற்சாலைகளை நிறுவினார். இதனால் இவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று கூட பலர் குறிப்பிட்டனர். 1884-ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார்.

இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் 1896-ல் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக 63ஆவது வயதில் காலமானார்.

அக்டோபர் 21,வரலாற்றில் இன்று உலக ஆப்பிள் தினம் இன்று.

அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று 

உலக ஆப்பிள் தினம் இன்று.


 அந்தவகையில் ஆப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.

உலகளாவியரீதியில் 7500க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன.

வாழைப்பழங்கள்,  திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது ஆப்பிள் பழங்கள் ஆகும்.

கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் ஆப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிள் மரங்கள், ஒரு ஆப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.

ஆப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.

புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக ஆப்பிள் விளங்கியது.

ஆப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

ஆப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"

ஆப்பிள் மரங்கள் 4 – 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.

தூய ஆப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் ஆப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.

ஆப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.

நடுத்தர அளவினை உடைய ஒரு ஆப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.

உலகில் அதிகளவில் ஆப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% ) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க ஆப்பிள் பழங்களே காரணமாகும். 

"தினசரி ஒரு ஆப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவிய
ரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களினை ஆப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.