வெள்ளி, 5 ஜனவரி, 2018

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! , பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி...


வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.

பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மாவட்டத்திற்கு ஆறு கனவு ஆசிரியர் விருது வழங்குதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

இந்திய நிதி அமைச்சகத்தின் வருமானவரி சார்ந்த சுற்றறிக்கை...

தொழில்வரி விலக்கு அளிக்கப்பட்டோர் விபரம்...

பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர் கால்குலேட்டர் அனுமதி...


பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர்
கால்குலேட்டர் கொண்டு வரலாம் என 
அருவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர், பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. 

பிளஸ் 2 மாணவர்களில் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் 'லாக்ரதம் டேபிள்' புத்தகம் கொண்டுவர வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதுவோர் முழு கிராப் பேப்பரும் கொண்டுவர வேண்டும். புள்ளியியல் தேர்வு எழுதும் மாணவர்கள் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண 'கால்குலேட்டரும்', இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு 'லாக்ரதம் டேபிள்' புத்தகமும் கொண்டு வர வேண்டும். 

அதேபோல் வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுவரை மாணவர்கள் தேர்வறைக்குள் கால்குலேட்டர் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

06.01.18~நாமக்கல்~ஜாக்டோ-ஜியோவின் தொடர்முழக்கப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்...


ஜாக்டோ-ஜியோவின் நாமக்கல் மாவட்டக்கூட்டம்
 (04.01.18-வியாழன்)பிற்பகல் 05.00மணிக்கு நாமக்கல் எஸ்.பி.எம்.,மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்றத்தின் மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் ப.இராசேந்திரன்(சேந்தமங்கலம்),
மாநிலத்தீர்ப்புக்குழு உறுப்பினர் இரா.பன்னீர்செல்வம்(புதுச்சத்திரம்),
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் இரா.இரவிக்குமார்
(கபிலர்மலை),மாவட்டத்துணைச்செயலாளர் வெ.வடிவேல்(பள்ளிப்பாளையம்),நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.ஜெயக்குமார்,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் த.தண்டபாணி ஆகியோர்பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் வரும் (06.01.18-சனிக்கிழமை)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலந்தழுவியதொடர்முழக்கப்போராட்டம்
மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.

இக்கூட்ட முடிவினை வெற்றிகரமாக்குமாறும்,போராட்டக்களத்தில் முழு வீச்சுடன் செயலாற்றுமாறும்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிப்பொறுப்பாளர்களை,இயக்க முன்னோடிகளை,மன்ற ஆசிரியப்பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
~முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்விஅலுவலரை 04.1.18 பிற்பகல் 05.30மணி அளவில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து,வாழ்த்துப்பெறும் இனிய மகிழ்வான சந்திப்பின் படக்காட்சிகள்.இச்சந்திப்பில் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம் (04.01.18)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம்
04.01.18(வியாழன்)பிற்பகல் 05.45மணிக்கு திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர் இரா.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்
முருகசெல்வராசன்,
மாவட்டப்பொருளாளர்
ப.ஹரிஹரன்,
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் அ.ஜெயப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இயக்க உரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில்
ஜாக்டோ-ஜியோ நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில்  
எதிர்வரும்
06.01.18(சனி)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெறும்  மாநிலந்தழுவிய
தொடர்முழக்கப்போராட்டத்தில் திருச்செங்கோடு ஒன்றியத்திலிருந்து 200 மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதென முடிவாற்றப்பட்டது.