சனி, 7 மார்ச், 2020

SPD proceedings_ ஒருங்கிணைந்த பள்ளி கல்வி_மொழி திருவிழா நடத்த நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த இயக்குநர் செயல்முறை

இனமானப் பேராசிரியர் மறைவுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா அவர்களின் இரங்கல் செய்தி




தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து-பொதுச்செயலாளர்


08.03.2020(ஞாயிறு) நாமக்கல் நகரில் நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைப்பு- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு
------------------------------
தமிழ்நாட்டின் மேனாள் கல்வி-நிதிஅமைச்சர் ,
சுயமரியாதைச் செம்மல்,
திராவிட இயக்க முன்னோடி,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், இனமானப் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனார் அவர்களின் மறைவிற்கு இன்று (07.03.2020) கூடிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட  முப்பெரும் விழாக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருவாரக் காலத்திற்கு  துக்கம் கடைப் பிடிக்குமாறும், ஒன்றியத் தலைநகரில் புகழஞ்சலி  கூட்டங்கள் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறது. மேலும்,
08.03.2020 ஆம் நாள் அன்று  நாமக்கல்லில் நடைபெற இருந்த  முப்பெரும் விழாவினை ஒத்திவைத்து அறிவிக்கிறது.

-முருகசெல்வராசன் ,
விழாக்குழுத் தலைவர்
மற்றும்
மெ.சங்கர்,
விழாக்குழுச் செயலாளர்.

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:



திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர்,தமிழகத்தின் மேனாள் கல்வி அமைச்சர்,
தமிழகத்தின் மேனாள் நிதி அமைச்சர் , சட்டமன்ற மேலவை உறுப்பினர்
,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றுக்கொண்டுள்ள  பொறுப்புகளில் எல்லாம்  திறம்படப் பணியாற்றியவர் இனமானப்பேராசிரியர் திரு.க.அன்பழகனார் அவர்கள்.

 தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்,
எழுத்தாளர்,
இதழாளர்,
 தமிழ்-தமிழர் சார்ந்து மிக வலுவான கருத்தாளர்- செயற்பாட்டாளர்,
சுயமரியாதைச் செம்மல்  மறைந்த திரு.க.அன்பழகனார் அவர்கள் ஆவார்.

இனமானப் பேராசிரியர் எனச் அழைக்கப்படுபவர்,
சிறப்பிக்கப்படுபவர்  மறைந்த திரு. க.அன்பழகனார் அவர்கள்.

உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்,பெரு வணக்கத்திற்கும்  உரியவர் திரு.க.அன்பழகனார்அவர்கள் .

திரு. க.அன்பழகனார் உடல் நலக்குறைவின் காரணமாகவும், வயோதிகம்  காரணமாகவும் மருத்துவச் சிகிச்சைகள் பலனின்றி மரணம் அடைந்தார்  என்பது மிகுந்த வேதனையை.
தீராத் துயரத்தை,
பெருத்த கவலையைத் தருகிறது.

தமிழர்களின்-
தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறைக் காட்டி , சுற்றிச் சுழன்று செயலாற்றிய
இனமானப் பேராசிரியருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனமானப் பேராசிரியர் பெருந்தகைக்கு புகழஞ்சலி - புகழ் வணக்கம் செலுத்துகிறேன்.  இனமானப் பேராசிரியர் காட்டிய நல்வழியில்  பயணிக்க திடமான உறுதிகொள்கிறேன்.
-முருகசெல்வராசன்.