சனி, 7 மார்ச், 2020

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:



திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர்,தமிழகத்தின் மேனாள் கல்வி அமைச்சர்,
தமிழகத்தின் மேனாள் நிதி அமைச்சர் , சட்டமன்ற மேலவை உறுப்பினர்
,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றுக்கொண்டுள்ள  பொறுப்புகளில் எல்லாம்  திறம்படப் பணியாற்றியவர் இனமானப்பேராசிரியர் திரு.க.அன்பழகனார் அவர்கள்.

 தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்,
எழுத்தாளர்,
இதழாளர்,
 தமிழ்-தமிழர் சார்ந்து மிக வலுவான கருத்தாளர்- செயற்பாட்டாளர்,
சுயமரியாதைச் செம்மல்  மறைந்த திரு.க.அன்பழகனார் அவர்கள் ஆவார்.

இனமானப் பேராசிரியர் எனச் அழைக்கப்படுபவர்,
சிறப்பிக்கப்படுபவர்  மறைந்த திரு. க.அன்பழகனார் அவர்கள்.

உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்,பெரு வணக்கத்திற்கும்  உரியவர் திரு.க.அன்பழகனார்அவர்கள் .

திரு. க.அன்பழகனார் உடல் நலக்குறைவின் காரணமாகவும், வயோதிகம்  காரணமாகவும் மருத்துவச் சிகிச்சைகள் பலனின்றி மரணம் அடைந்தார்  என்பது மிகுந்த வேதனையை.
தீராத் துயரத்தை,
பெருத்த கவலையைத் தருகிறது.

தமிழர்களின்-
தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறைக் காட்டி , சுற்றிச் சுழன்று செயலாற்றிய
இனமானப் பேராசிரியருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனமானப் பேராசிரியர் பெருந்தகைக்கு புகழஞ்சலி - புகழ் வணக்கம் செலுத்துகிறேன்.  இனமானப் பேராசிரியர் காட்டிய நல்வழியில்  பயணிக்க திடமான உறுதிகொள்கிறேன்.
-முருகசெல்வராசன்.