வியாழன், 23 ஜனவரி, 2020

GoNo:19_Higher education 14.01.2020


GO No:20_Higher education 14.01.2020

2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமான வரிப் படிவம் ( Income tax Statement )தயார் செய்ய கீழே உள்ள இணைப்பை தொடர்க..

அரசு தேர்வுகள் இயக்ககம் _பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் 2020 - 75%வருகைப் பதிவு இல்லாத பள்ளி மாணவர்கள் விவரம் கோருதல் சார்ந்து தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் செயல்முறை 22.01.2020


மாநிலத்திட்ட இயக்குநரின் 21.01.2020 ஆம் நாள் கூட்ட வழிகாட்டல்கள்

தொடக்கக்கல்வி -பள்ளிகளின் பழுதடைந்த சுற்றுச்சுவர் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் செயல்முறை



*🌷DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.*


*26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும்.*

*பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும்.*

*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.*

*கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.*

*மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

             *தொடக்கக் கல்வி இயக்குநர்*

தொடக்கக்கல்வி_பள்ளிகளில் குடியரசு தின விழா 26.01.2020 காலை 9.00மணிக்கு கொடி ஏற்றி பிளாஸ்டிக் இல்லாத வகையில் கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


பள்ளிக்கல்வி_கணினி பயிற்றுனர் நிலை1 பணியிடங்கள் தோற்றுவித்தல்_திருந்திய சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை 21.01.2020









மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்_உபரி காலிப்பணியிடங்களை இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தலை ஏற்பளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 10.01.2020

சிறைச்செம்மல்களே! வேலைநிறுத்தப்போராளிகளே! ஊதிய வெட்டுக்கு ஆளான மறவர்களே!மறத்தியர்களே! கோடானுகோடி பாராட்டு மாலைகளை - படைக்கிறேன்...



ஆசிரியர் மன்றத்தின் மானமிகு
மறவரே!மறத்தியரே!தங்களுக்கு என் வீரவணக்கம்.

சனவரி 22,2019இல் தொடங்கியகால வரையற்ற வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈந்துள்ள
தங்களின் அளப்பரிய தியாகம் என்றும்  வீண்போகாது. தங்களின் தியாகம் விதைக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பூத்துக்காய்த்து கனிந்து எல்லோருக்கும் பலனும்,பயனும் பெருமளவில் வாரிவழங்கும்.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்  வர்க்க எதிரிகளாக, விரோதிகளாக, துரோகிகளாக, கருங்காலிகளாக
சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே
 பலனும்,பயனும் பெற்றுத்தரும் வல்லமைமிக்கவர்கள் தாங்கள்.

இத்தகு  வசந்தகாலத்திற்காக  தாங்கள் எல்லோரும் அடைந்துள்ள இன்னல்கள்
சொல்லிமாளதவைகளாகும்.

 தங்களுக்கும்,
தங்களது  குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ ., அவர்களின்  சார்பில்   என் சிரம் தாழ்த்தி இருகரம் குவித்து தங்களுக்கு  கோடானுகோடி வாழ்த்தும் -பாராட்டும் நிறைந்த மலர்ஆரங்களை சூட்டுகிறேன்.
தங்களின்பாதக் கமலங்களில் கோடானுகோடி நன்றிமலர்களை காணிக்கையாக்கி படைக்கிறேன்.

 நாம் நிச்சயம் வெல்வோம்! நம்பிக்கையோடு களமாடுங்கள்!
பள்ளிக்கல்விப் பணிகளையும், ஆசிரியர்மன்றப் பணிகளையும் அரசியல் சித்தாந்தத்தோடு ஆர்வமுடன்ஆற்றுங்கள்!

 தங்களோடு ஆசிரியர்மன்றம் முப்பொழுதும் உற்றத்துணைவனாக என்றும் உடன் நிற்கும்.
#நாளைநமதே!
-முருகசெல்வராசன்.
ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.


ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று (2004).

நல்ல நாள் என்று நாள் குறிக்கப்பட்டு கொடூர நாள் ஆன தினம் அது!

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மணமகன் குருராஜ் உட்பட திருமணத்துக்கு வந்திருந்த 64 பேர் எரிந்து கரிக்கட்டையான கொடூரம் அது.


2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி. ஸ்ரீரங்கம், ரெங்க நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபம். பெங்களூரைச் சோந்த குருராஜ் - ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜோடி திருமண சடங்குகளுக்காக மண்டபத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர் மந்திரங்கள் ஓதிய போது, திடீரென பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள், மாடியில் இருந்த ஒரே ஒரு சிறிய படிக்கட்டு வழியாக தப்பிக்க முயன்று, நெரிசலில் சிக்கினர். அந்தக் களேபரத்தில் தப்பிக்க முடியாமல் சிக்கி, தீயின் கோர தாண்டவத்துக்கு 64 பேர் பலியானார்கள். 33 பேர் காயம் அடைந்தனர். 'வீடியோ கேமரா லைட்டில் இருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமராமேன் பயன்படுத்திய மின் வயர்கள் வழியே மின்கசிவு ஏற்பட்டும் தீ விபத்து நடந்தது’ என தெரிய வந்தது
ஜனவரி 23, வரலாற்றில் இன்று.

முத்துராமலிங்க சேதுபதி நினைவு தினம் இன்று.

வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கிய முத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்

இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 30.3.1760இல் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தவர் அவர்.
அவர் பிறந்த 72 ஆம்நாளிலேயே அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.1772 மே திங்களில் ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் இணைந்து இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்- கணக்கான வீர மறவர்கள் மடிந்தார்கள்.

12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது அன்னையாரும், சகோதரிகளும் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை
வைக்கப்பட்டார்கள்.அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில் தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782இல் இளவரசர் சேதுபதி 22 வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, இராமநாதபுரம் மன்னராகப் பொறுப்பேற்றார்.

சேது நாட்டை ஆக்கிரமித்து, தன்னையும், தனது குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையிலடைத்த ஆர்க்காடு நவாப்பையும்,
ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த இளஞ்சிங்கம் சேதுபதி, டச்சுக் காரர்களின் உதவியுடன், இராமநாதபுரத்திற்கு அருகிலே இருந்த காட்டுப்பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார்;

அதன் மூலம் தனது படைபலத்தையும் பெருக்கினார்.அந்நிலையில் ஆற்காடு நவாபிடம் இருந்து தென்பாண்டிச் சீமையில் வரி வசூலிக்கும் உரிமை பெற்ற கும்பெனியார் சேதுபதி மன்னரிடம் ஆதிக்கம் செலுத்த முனைந்தார்கள்.மறவர் சீமை கைத்தறித்துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கியதால் அங்கு உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் தமக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று கும்பெனியார் வைத்த கோரிக்கையை சேதுபதி மன்னர் ஏற்க மறுத்து விட்டார்!

அதேபோலச் சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க சேதுபதி மறுத்துவிட்டார்!ஆங்கிலேய வணிகக் கப்பல்கள் தூத்துக்குடிதுறைமுகத்திலிருந்து கைத்தறித் துணிகளையும், மிளகு போன்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகத்திற்குச் சேதுபதி மன்னருக்கு உரிமையான பாம்பன் நீர் வழியே செல்லும்போது; அந்தக் கப்பல்களை வரிசையில் நிறுத்தி, சுங்கச் சோதனை செய்வதையும், அதற்குச் சுங்கவரி விதிப்பதையும் நீக்க வேண்டுமென்ற வெள்ளைக்காரர்களின் கோரிக்கையையும் நிராகரித்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர்.

இப்படி ஆங்கிலேயர் விடுத்த கோரிக்கைகளை அனைத்தையும் மறுத்த முத்துராமலிங்க சேதுபதி அவர்களை, விசாரணைக்கு வருமாறு
திருநெல்வேலியில் இருந்த கலெக்டர் பவுனி சம்மன் அனுப்பினார்.வாணிகம் செய்து பிழைக்க வந்தவர்கள் தனக்கு ஆணையிடுவதா எனக் கொதித்த சேதுபதி அந்த ஆணையைப் புறக்கணித்தார்.

அடுத்து, சென்னை கோட்டையிலிருந்த கும்பெனி கவர்னர், கலெக்டர் அனுப்பும் கடிதப்படி அவர்முன் சென்று ஆஜராகும்படி சேதுபதி
மன்னருக்கு ஆணையிட்டார். அதையும் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை.

இவை காரணமாக – எரிச்சலடைந்த ஆங்கிலேயர், அவரை “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” எனக் கோபத்துடன் கூறத்தொடங்கினர். அவரை அடக்கி, மறவர் சீமையை கைப்பற்றத் திட்டமிட்டர்கள்.

இத்திட்டப்படி 1795 பிப்ரவரி 8ஆம் நாள், இராமநாதபுரம் அரண்மனையைக் கும்பெனிப் படை முற்றுகையிட்டு, சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சியிலும், பின்னர் இங்கே சென்னைக் கோட்டையிலும் சிறையிலடைத்தது.  அதனைத் தொடர்ந்து, மறவர் சீமையில் எழுந்த கிளர்ச்சிகளையெல்லாம் அடக்கியது, சேதுபதிமன்னரை விசாரணை எதுவுமின்றி 13 ஆண்டு காலம் சிறையிலேயே வைத்திருந்தது.
அடங்காத விடுதலை வேட்கையோடு சிறைக் கூடத்தில் அடைபட்டிருந்த நிலையில், 23.1.1809 அன்று தன்னுடைய 49ஆம் வயதில் சேதுபதி மன்னர் உலக வாழ்வை நீத்தார்.

தாயகத்து உரிமையை மதித்து அதனை நிலைநாட்ட முனைந்ததற்காக 49 ஆண்டுகால வாழ்வில் ஏறத்தாழ சரிபாதி 24 ஆண்டுகளை, அந்நியர் சிறையில் கழித்து மறைந்த வீரத் தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் அஞ்சல் தலையை  அரசு வெளியிட்டது.
ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இன்று.



போர் சூழலில் நேதாஜியின் வியூகங்களும், தாக்கும் முறைகளும் நேர்த்தியானவை, தந்திரம் மிக்கவை. இவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது, ஓடி ஒளிந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் பிறந்தார். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இவருடைய குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர்தான் சுபாஷ் சந்திரபோஸ். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்
தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.

எனினும் அக்காலத்தில் இந்தியாவின் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட நேதாஜியின் சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஆனாலும் தாய் நாட்டின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பிற்காலத்தில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரானர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பினார்.

அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது. துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட வைத்தது.

போர் சூழலில் நேதாஜியின் வியூகங்களும், தாக்கும் முறைகளும் நேர்த்தியானவை, தந்திரம் மிக்கவை. இவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது, ஓடி ஒளிந்தது. ஆனாலும் உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் இன்னும் மர்மாகவே நீடிக்கிறது.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் இன்றும் இவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" எனும் இவர் பெயரை இன்னமும் உச்சரிக்கும் போதெல்லாம் உடம்பெல்லாம் சிலிர்க்கத்தான் செய்கிறது.

நேதாஜியின் இறுதி உரை  

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகஸ்ட் 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதில்

"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"
ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.

தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1957).



1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான "தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்" சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆட்சி மொழி என்றால் என்ன.?

அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழி சட்டம்:

தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது தமிழ். எனவே தமிழ்நாட்டில் (அப்போது சென்னை மாகாணம்) தமிழ் தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தச் சட்டம் 1957ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவுப்படி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் தான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

ஆட்சிமொழிக் குழு அமைப்பு:

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசால், ஆட்சிமொழிக் குழு 1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ் வளர்ச்சித் துறை:

அரசு அலுவலகங்களில் விதிகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் உருவானது. எனவே தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறை அமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள்:

தமிழ் வளர்ச்சித் துறையின் மிக முக்கிய பணி தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே, சோதனை முறையில் 1951-ஆம் ஆண்டிலேயே திருச்சி நகராட்சியில் ஆட்சி மொழியாக தமிழ் பயன்படுத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.

சனவரி 22 ~ சனவரி 22,2019 ஆம் ஆண்டு நாள் மறக்க முடியாத நாள்...

சூலை 2, 2003 ஆம் ஆண்டு நாள்(டெசுமா) போன்று தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர் அமைப்புகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள் இந்த சனவரி22,2019 ஆம் ஆண்டுநாள்.

2019சனவரி 22 இல் தொடங்கிய ஜாக்டோ-ஜியோ  காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தின் முதலாம் ஆண்டு நாள்.

ஓராண்டு காலத்திற்கு முன் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கிய நாளில் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசூழியர்களின் கோரிக்கைகள் என்னவாக இருந்ததோ?!எவ்வளவாக இருந்ததோ ?!அவைகள்
அதே நிலையில்,
அதே அளவில்,
அதே வகையில் அப்படியாகவே தான் இன்றும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்,
போராட்டத்திற்கு பிந்தையகாலத்தில் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது எனலாம்.

போராட்டக்காலக் கோரிக்கைகள் அப்படியே
நிலை மாறாது,
நிறம் மாறாது இருப்பதற்கு யார்காரணம்?!எவர் காரணம்?!எது காரணம் ?!என்பது மில்லியன் டாலர் கேள்வி?!

தமிழகரசா? ஆசிரியர் -அரசூழியர்களா?,ஆசிரியர் -அரசூழியர் அமைப்புகளா?காவல்துறையா?நீதிமன்றமா?
சமூக ஆர்வலர்களா?பொதுமக்களா?அரசியல் தட்பவெப்ப சூழ்நிலையா?என்பதெல்லாம் ஆய்வுக்குரியதாகும்; ஆராயப்படவேண்டியதாகும். 

எவை எப்படி ஆயினும், இக்கால வரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சுயநலவாதிகள் அல்ல;
பொதுநல வாதிகளே!தியாகச்சீலர்களே!

தமிழ்நாட்டின் பொதுக்கல்வி முறை காப்பற்றப்பட வேண்டும்.
கல்வித்துறை சீர்திருத்தங்கள் என்றபெயரில் தொடக்கக்கல்வித்துறையை அழிப்பதைக் கைவிட வேண்டும்.  பள்ளிகள் மூடப்படுவது கைவிடப்பட வேண்டும்.
சத்துணவு மையங்கள் இழுத்து சாத்துவது தடுக்கப்பட வேண்டும்.
வேலைநியமனத் தடைச்சட்டத்திற்கு இணையான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி போராடிய     சமூகப் போராளிகள் தமிழகத்தில்  இவர்களே!

இவைகளோடு   இச்சமூகப் போராளிகளின் போராட்டங்கள், தியாகங்கள் முடிந்துவிட வில்லை.

மக்களாட்சி நாட்டில் மக்களுக்கான கோரிக்கைகளை  வலியுறுத்தி மக்களின் ஒருபகுதியாக ஆசிரியர்-அரசு ஊழியர்கள் போராடியற்காக காவல்துறையின் கைதுநடவடிக்கைகள்,
காவல் துறையின் தேடுதல் வேட்டைகள்,
தலைமறைவு வாழ்க்கைமுறைகள் ,
முன் எச்சரிக்கை கைதுகள், இடமாறுதல் மிரட்டல்  நடவடிக்கைகள், ஒழுங்குநடவடிக்கை எச்சரிக்கைகள், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறச்செய்தல்,
மத்திய சிறைச்சாலையில் கைதி வாழ்க்கை வாழ்தல், தெருப்போராட்டம் நீதிமன்றப் போராட்டமாக திசைமாறி பிணைக்கோரும் நிலையிலான  நடவடிக்கைகள், எந்த அரசிடம் கோரிக்கை வைத்தோமோ ,
எந்த அரசின் முன் நெஞ்சுரத்துடன் போராட்டம் தொடங்கினோமோ அந்த அரசிடமே பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுக!என்று கோரும் செயல்பாடுகள் என்று போராட்டம்  திசைமாறி பள்ளி-அலுவலகம் திறக்கப்பட்டு
முழுவேகத்துடன் செயல்படுவது கூட அறியாது சிறைச்சாலைகளில் வாடி வதங்கிய தியாகச்செம்மல்கள் இவர்கள்!

எல்லாக்கோரிக்கைகளையும் தமிழக அரசின் செயலாளர்களிடம்,துறைத்தலைவர்களிடம்,அமைச்சர் பெருமக்களிடம் எடுத்துரைத்து ,
முதலமைச்சரின் சந்திப்புக்கு
தவமாய் தவமிருந்து இருந்தும் அரசின்,
ஆட்சியாளர்களின் பாராமுகத்துடனே மீளப்பணியமர்வு பெற்று ,
குற்றக்குறிப்பாணைக்கு விளக்கமளித்துக்கொண்டே இன்றுவரையிலும்  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கும் பொறுமைசாலிகள் மட்டுமல்ல  பெருமைக் குரியவர்கள் இவர்களே!

போராட்டக்காலத்திற்கு ஊதிய வெட்டு,
ஆண்டு ஊதிய உயர்வு இழப்பு,
பதவி உயர்வு மறுப்பு,
தேர்வுநிலை-சிறப்பு நிலை பறிப்பு என்று கழுத்துக்கு மேல் தொங்கும் எல்லாக்கத்திகளுக்கும் உழைப்பினை, வியர்வையை, குருதியை என்று தனித்தனியாக சொல்ல முடியாத வகையில் உடல்,பொருள், ஆவி  அனைத்தையும்  போராட்டத் வேள்வியின் அகோரப்பசிக் கொண்ட பெருநெருப்புக்கு படைத்துள்ள தியாகமிகு தேசப்பக்தர்கள் இவர்களே!

இத்தேசப் பக்தர்களும்,
இவர்களது குடும்பத்தினரும் அடைந்துள்ள எல்லா வகையான  இழப்புகளும், சிரமங்களும்,
துன்ப-துயரங்களும்  ஈடுசெய்யமுடியாதவைகளாகும்.

 இத்தகு மனிதப்புனிதர்களால் தான் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் சமுதாயம்
இன்றும் எல்லாவகையான பாதுகாப்புகளுடன் சமூக-அரசியல்-பொருளாதார கெளரவத்துடன், சுயச்சார்போடு ஓரளவிற்கேனும் சிறப்புமிகு வாழ்க்கையில் பயணிக்க முடிகிறது;இயலுகிறது எனலாம்.
இது வெறும் மிகையில்லை.

இத்தியாகச் செம்மல்களின் இழப்புகள் அனைத்தும் மீட்டெடுத்துத் தரப்படவேண்டும்!
இதுவே நம் முன் உள்ள தலையாயக் கடமையாகும்.  போராட்டக்காலக்கோரிக்கைகள் அனைத்திற்கும் அரசாணை பெறப்படுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
இவைகளே!இக்காலவரையற் ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் செலுத்தும் வீரமிகு-பெருமைமிகு அஞ்சலியாகும்!
இத்தியாகிகளின் குடும்பத்தினரின் பெருந்தியாகத்திற்கு  செலுத்தும் நன்றிகடனாகும்;பெரும்மரியாதையாகும்!
#சங்கநாதம் முழங்கட்டும்!
-முருகசெல்வராசன்.

மாண்பமை.நீதியரசர் தலைமையிலான குழுவின் அழைப்பு ~ வரவேற்பும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் கொள்கிறது...


தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தின்  கோரிக்கைகளை குறிப்பாக இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களின் மத்தியரசுபள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்  எனும் கோரிக்கையை மாண்பமை. நீதியரசர் தலைமையிலான குழுவின் முன்
தக்க வாதங்களை
முன் வைத்தும், எடுத்துரைத்தும்,விளக்கியும்
பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் பாவலர்.திரு.க.மீ., அவர்கள் வலியுறுத்துவார்கள்.

தமிழக அரசிடம்
இக்குழு ஆசிரியர் கோரிக்கைகளின்
நியாயங்களை  ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கும்
என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் நம்புகிறது. -முருகசெல்வராசன் .