வியாழன், 18 ஜனவரி, 2018

EMIS , Aadhar , UDISE தொடர்பான தெளிவுரைகள்...

ஊதிய நிர்ணயம்-ஆசிரியர்களின் விருப்பக் கடிதம்-புதுச்சத்திரம் AEEO அவர்களின் குறிப்பாணை...

EMIS-தங்கள் பள்ளிக்கு தேவையான மாணவரை student pool பகுதிக்கு அனுப்பாத மாணவர்களை admit செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது...


நீங்கள் தேடும் மாணவர் வேறு பள்ளியில் இருந்தால் அம்மாணவனை admit செய்ய raise request என்ற option இருக்கும். 

அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த மாணவனை வெளியேற்றவும் என pending request பகுதியில் காட்டும்.

 3நாட்களுக்குள் வெளியேற்றப்படாத நிலையில் அதை வெளியேற்றும் வாய்ப்பு district userக்கு வரும்.

 Dist userஆல் வெளியேற்றி விடப்படுவர்.
 
2 முதல் 12 ஆம் வகுப்பு புதிய உள்ளீடு செய்யும் வசதி இன்னும் வரவில்லை.

17.1.18(புதன்கிழமை) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்...


📕வரும் 25.1.18 அன்றைய தினத்திற்குள் தங்கள் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களை தவிர வேறு எந்த குழந்தைகளையும் EMIS இல் பதிவேற்றம் செய்து இருந்தால் உடனடியாக அந்த குழந்தைகளை Common Poolற்கு தங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

📕DISE Enrollment படிதான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சில பள்ளிகளில் Duplicate entry செய்ய பட்டுள்ளது என்று SPD அவர்கள் கூறி உள்ளார்.

📕மேலும் SPD அவர்கள் கூறியது யாதெனில் தங்கள் பள்ளியில் உள்ள Original மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும் என்றும் தவறான எண்ணிக்கையை கொடுத்து அதற்கு பின்வரும் காலங்களில் உரிய விளக்கம் தர தவறும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிற்குமாறும் கூறி உள்ளார்.

ஏனெனில் ஒரு சில பள்ளிகளில்  குழந்தைகளின் எண்ணிக்கையை போலியாக பதிவேற்றம் செய்யபட்டுள்ளதை  கண்டறியபட்டுள்ளது என கூறினார்.
 அக்குழந்தைகளுக்கான சரியான Adhaar எண்ணை பதிவேற்றம் செய்ய தவறும் பட்சத்தில் அவை போலியான Entry என்று எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவ்வாறு தவறான தகவல்களை பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களை தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று SPD அவர்கள் எச்சரித்து உள்ளார்.

 📕எனவே தான் சரியான தகவல்களை EMIS ல் வரும் 25.1.18 பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். அதே போல் தங்கள் பள்ளியில் பயிலாத மாணவர்களை Common Pool ற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்..

 📕 26.1.18 அன்று EMIS ல் தங்கள் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் பயலும் மாணவர்கள் என்று கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

📕அவ்வாறு இருக்கும் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

📕ஆதார் பதிவேற்றம் செய்யபடாத காரணத்தை கண்டிப்பாக CEOக்கு HM தெரிய படுத்த வேண்டும்.

📕ஒன்றுக்கும் மேற்பட்ட Repeat ஆதார் entry களை Duplicate entry யாக கணக்கில் கொள்ளப்பட்டு அவை அனைத்தும் Delete செய்யபடும்.

SCERT - English Phonetics Training for Primary & upper primary Teachers- Director Proceedings...

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்~ அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...


அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து 
ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.

அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.

மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

DEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு...


(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்...)

வேலை நிறுத்த நாட்களுக்கு கணினி பயிற்சி மூலம் ஈடுகட்ட வேண்டிய நாட்கள் பற்றிய புதுக்கோட்டை மாவட்ட DEEO அவர்களின் ஆணை...

HRA-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணை...