திங்கள், 28 அக்டோபர், 2019

டெங்கு காய்ச்சல் எதிரொலி ~ பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் ~ பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு…

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அற்ற ஆழ்துளைக் கிணறுகளை பற்றி தகவல் தர நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
 *ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் பிறந்த தினம் இன்று.*

*அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்,*
*நியூயார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950களில் உலகம் முழுவதும்* *’போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.*

*குறிப்பாக, 1952ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர்.* *இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.*
 *21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த*) *நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போயினர்.*

*இந்த அவலநிலையை கண்டு கொதித்துப் போன டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்* *மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும், பகலும் மூழ்கிப் போனார்.*
*10 ஆண்டு கால கடும் உழைப்பின் பலனாக, 1955ஆம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.*

*அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம்* *பள்ளி* *ஊழியர்கள், சுமார்*
*2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர்,* *அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசார முகாமினை தொடங்கினர்.*

*இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகதான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளய சமுதாயத்தை பார்க்க முடிகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட் ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.*

*அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், மிகப்பரந்த பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார்.*

*அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா...?*

*‘அடப்போங்க... சார்! சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா..? அதேபோன்றது தான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் அவர் பதில் அளித்தார்.*

*அவர் மட்டும் இந்த மருந்தினை பொதுவுடமை ஆக்கியிராதிருந்தால்... கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், 23-06-1995 அன்று தனது 80வது வயதில் காலமானார்.*

*பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடும் உலக ஊடகங்கள், டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் என்ற இந்த ‘மாமனிதர்’ மனித குலத்துக்கு ஆற்றிய மகத்தான சேவையை இருட்டடிப்பு செய்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.*

*தனது இறுதி மூச்சு வரை உயிர்க் கொல்லி நோயான எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க். தனது இலக்கினை எட்டாமலேயே இறந்துப் போனது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*ஜெர்மன் அறிஞர் பெட்ரிக் மாக்ஸ் முல்லர்*
*(Friedrich Max Muller)*
*நினைவு தினம் இன்று.*

*இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர். அவரது நண்பர் மலபாரி, அவரை இந்தியாவுக்கு வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கு மாக்ஸ் முல்லர், "நான் வருவதற்கில்லை! ஏனெனில், புராதனமான பண்பாடு நிறைந்த, முனிவர்கள் வாழ்ந்த இந்தியாவிலேயே அவர்களது உன்னதத் தத்துவ நூல்கள் மூலம் வாழ்ந்துவிட்டேன். நான் அங்கே வந்தால் மீண்டும் ஜெர்மன் திரும்ப முடியாது" என்று கூறி மறுத்துவிட்டார்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சர்வதேச அனிமேஷன் தினம் இன்று.*

*அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், தற்போது அனைத்துலக மக்களின் விருப்ப தேர்வில் ஒன்றாக திகழ்கிறது.*
*வெகு வேகமாக வளர்ந்து வரும் 3D தொழில்நுட்பமும், அனிமேஷன் துறையை சார்ந்தது தான். இந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.*

*1892இல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.*
*சமீப காலங்களாக இந்நாள் 50க்கும் மேற்பட்ட நாடுகளால் கொண்டாடப்*
*படுகின்றன. UNESCOவின் ஒரு அங்கமான சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம்(International Animated Film Association-* *ASIFA), 2002இல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.*
*இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.*