திங்கள், 7 அக்டோபர், 2019

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்? - ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் கேள்வி

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்?

ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டுமல்ல, 
அமைச்சர்களின்,
உயரதிகாரிகளின் குழந்தைகள்  முதல் அடிப்படை ஊழியரின் குழந்தைகள் வரை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி  சேர்க்கவேண்டும்... அந்தநிலையில் தான் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் தனியார் பள்ளிகளை விஞ்சும்!
 டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் பேட்டி...

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும், தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறையால் வெளியீடப்பட்டுள்ளது



நாமக்கல்லில் 10ம் தேதி போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி துவக்கம்...

*அக்டோபர் 7- வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 7, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*1.கவியரசு முடியரசன் பிறந்த தினம்.*

*2.கவிஞர்.ஞானக்கூத்தன் பிறந்ததினம்*

*3.ரால்ப் வெச்வுட் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்றதினம்.*

*4.சோவியத்யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம்.*
--------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------

*🌷கவியரசு முடியரசன் பிறந்த தினம் இன்று.*

*கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.*

 *தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920இல் பிறந்தவர்.*

 *துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.*

 *காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.*

----------------------------------------------

*🌷ஞானக்கூத்தன் பிறந்த தினம் இன்று.*

*ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைபெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.*

*இராமகிருஷ்ணன்,*
*சா. கந்தசாமி,*
*ந. கிருஷ்ணமூர்த்தி* *ஆகியோரோடு இணைந்து* *ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'.*
*'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.*
*'ழ' இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.*

*அவர் இயற்றிய*
*கவிதை நூல்கள்*

*அன்று வேறு கிழமை*
*சூரியனுக்குப் பின்பக்கம்*
*கடற்கரையில் சில மரங்கள்*
*மீண்டும் அவர்கள்*
*பென்சில் படங்கள்*
*ஞானக்கூத்தன் கவிதைகள்*
*என் உளம் நிற்றி நீ*
*இம்பர் உலகம்*
*கட்டுரை நூல்கள்*

*கவிதைக்காக*
*கவிதைகளுடன் ஒரு சம்வாதம்*
*பிற படைப்புகள்*
*கனவு பல காட்டல்*
*நம்மை அது தப்பாதோ?*
*சொன்னதை கேட்ட* *ஜன்னல் கதவு*
*அலைகள் இழுத்த பூமாலை*
*விருதுகள்*

*கவிஞர் ஞானக்கூத்தன் 2016 ஜூலை 27இல் தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்*

----------------------------------------------


*🌷ரால்ஃப் வெச்வூட்*
*பிரதி எடுக்க உதவும் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று (1806).*

 *இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது!*

*1806 அக்டோபர் 7இல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.*
--------------------------------------------


*🌷சோவியத் யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம் இன்று (1959).*


*லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.*

 *அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.*

*அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தின நல்வாழ்த்துக்ககள்.*