சனி, 1 டிசம்பர், 2018

ஜாக்டோ ஜியோ -திசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் _பத்திரிக்கைச் செய்தி



முக்கிய செய்தி -திசம்பர் 2018 முதல் PAN card ல் 5புதிய விதிகள் பின்பற்றபடும் -Income tax


Alert! 5 new PAN card rules to come into effect from Dec 5

In a bid to avert tax evasion cases, the Income Tax (IT) department has made some alterations in Permanent Account Number (PAN) card rules taking effect from December 5, 2018. According to a recent notification issued by the Central Board Direct Taxes (CBDT), it is must to apply for PAN card on or before May 31, 2018, for all entities with a turnover of doing business worth Rs 2.5 lakh or more in a financial year. It is mandatory only for those entities  whohave not been allotted any PAN yet.

This is a new amendment in Income Tax Rules, 1962. In the exercise of the powers conferred by Section 139A read with Section 295 of the Income-tax Act, 1961 (43 of 1961), the Central Board of Direct Taxes 9CBDT) made the following rules to amend the Income-tax Rules, 1962, the CBDT notification said.

Here are 5things to know about the new PAN card rules:

1. The CBDT has made it mandatory for a person, being a resident, other than an individual, who makes the financial transaction of two lakh fifty thousand rupees or more in one financial year to apply for PAN card. The application has to be filed on or before May 31 of the assessment year for which such income is assessable, the central tax body said.

2. Under the new rule, it is mandatory for all resident entities to obtain PAN card even if the total sales or turnover or gross receipts have not or are not likely to exceed Rs 5 lakh in a financial year. "This will help the income tax department track financial transactions, broaden its tax base and prevent tax evasion," Suraj Nangia, Partner, Nangia Advisors LLP told news agency PTI.

3. The new notification also stated that in the case of a person, who is the managing director, director, partner, trustee, author, founder, Karta, chief executive officer, principal officer or office-bearer or any person competent to act on behalf of the person and who has not been allotted any permanent account number, should also apply for a PAN card on or before May 31, 2019.

4. Individual taxpayers, who are not associated with such entities, need not worry about the new income tax notification.

5. Quoting of father's name in PAN application forms will not be mandatory in cases where the mother of the applicant is a single parent. Even if a PAN applicants father is deceased or separated, the applicant can prefer not to mention his/ her fathers name at all in the form.

திட்டமிட்டபடி வரும் 4 ஆம் தேதி வேலை நிறுத்தம்~ ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…

மருத்துவ காப்பீடு ₹5 லட்சமாக உயர்வு~தமிழக அரசு அறிவிப்பு...

குறைவான உணவு உண்வோருக்கு கலோரி பாதிப்பு ஏற்படும் -தகவல்பலகை


அரசு பள்ளிகளில் LKG வகுப்புகளுக்கு மார்ச்சில் அட்மிஷன்


தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிகளில், 'கே.ஜி.,' வகுப்புகள், 2019 ஜூனில் துவங்க உள்ளதால், மார்ச்சில், குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



அனைத்து தரப்பு குழந்தைகளும், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., படிக்க வைக்க தேவையான வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மேற்கண்ட வகுப்புகள் துவங்கும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட பின் அட்மிஷன், ஆசிரியர் நியமனம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்க, தரமான கல்வியை அளிக்க, சமீபத்தில், 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு மாதிரி பள்ளி தேர்வு செய்யப்பட்டது. பள்ளிக்கு, 50 லட்சம் வீதம், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019 ஜூனில், வகுப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான அட்மிஷன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைக்க அரசாணை வெளியீடு


 


தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கால்நடைகள் மற்றும் விலங்குகள் நலன் பேணுவதற்கென என தனியாக வாரியம் அமைக்கப்படாமல் இருந்தது. மத்திய விலங்குகள் நல வாரியமே இத்தகைய விஷயங்களை  கவனித்துக் கொள்ளும் அமைப்பாக இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் உருவாக்கப்படவுள்ள விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக முதல்வர் பழனிசாமியும், துணைத் தலைவராகி மாநில கால்நடைத் துறை அமைச்சரும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


CPS to Old Pension Scheme _ மீளாய்வு செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு...

ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் நடத்திய தமிழக அரசின் பேச்சு தோல்வி: வரும் 4ம் தேதி திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடத்த ஊழியர்கள் தீவிரம்

 ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பள முரண்பாடு களைதல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்று இணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும், அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 வரும் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர். இந்த போராட்டத்தை முடக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமா? என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.  மேலும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், என்ஜிஓ, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் அழைத்து பேசினார்.

பேச்சுவார்த்தை முடிவில் இந்த 4 சங்கங்களும், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர். ஆனால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வருகிற 4ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்து அழைப்பு விடுத்தது. அரசின் அழைப்பை ஏற்று, நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிதித்துறை செயலாளர் சண்முகம், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சுவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு சங்க நிர்வாகிகள் 20 பேர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர், ஏதாவது ஒரு உறுதிமொழியாவது ருவார் என்று எதிர்பார்த்தோம். எந்த உறுதிமொழியும் அவர் தரவில்லை. நீங்கள் பேசியதையெல்லாம் முதல்வரிடம் சென்று நான் விவரிக்கிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்.  நாளையதினம் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு எல்லோரும் மிகவும் வேகத்தோடு வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மீண்டும் மீண்டும் அமைச்சரிடம் வற்புறுத்தி சொல்லியும்கூட எந்த வாக்குறுதியும் தரவில்லை.

எங்களுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த அரசு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. எங்கள் கோரிக்கை மீது அரசு எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. எல்லாவற்றையும் முதல்வரிடம் தெரிவிக்கிறோம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். எனவே எங்களது நியாயமான கோரிக்கைகள் எதையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். திட்டமிட்டபடி 4 ம் தேதி ஸ்டிரைக் செய்ய அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தீவிரமாக உள்ளனர்.

கோரிக்கைகள் என்னென்ன?
* புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
* அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்கு பிறகு, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
* சத்துணவு பணியாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* எதிர்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்ற அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும்.
* 2003-04ம் ஆண்டில் தொகுப்பு ஊதியத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளை மூடக்கூடாது.