வெள்ளி, 19 ஜூன், 2020

☀நாமக்கல் வருவாய் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம் -பரமத்தி ஒன்றியம் -ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்ச கோரிக்கைகள்_ திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் தலையீடும் விரைவு தீர்வும் வேண்டுதல்...

*☀நாமக்கல் வருவாய் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம் -பரமத்தி ஒன்றியம் -ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்ச கோரிக்கைகள்_ திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் தலையீடும் விரைவு தீர்வும் வேண்டுதல்...*

*🌟10, 11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், அரசாணையின் படி தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவு.*

*🌟10, 11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், அரசாணையின் படி தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை  உத்தரவு.*

*🌟நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகளின் படி கணினிவழிக் கல்வியில் ( ICT )ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் சார்பாக உரிய முறையில் விண்ணப்பிக்கலாம்*

*🌟நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  செயல்முறைகளின் படி கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும்  ஆசிரியர்களுக்கு தேசிய  விருது அளித்தல் சாபாக உரிய முறையில்  விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*

*🌐ஜூன் 19,* *வரலாற்றில் இன்று:ராகுல் காந்தி பிறந்த தினம் இன்று (1970).*

ஜூன் 19,
வரலாற்றில் இன்று.

ராகுல் காந்தி பிறந்த தினம் இன்று (1970).

ராகுல் காந்தி ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.

இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் வயநாடு தொகுதி பிரதிநிதி ஆவார். 2019 ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:ஆங் சான் சூகி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

ஆங் சான் சூகி பிறந்த தினம் இன்று.

மக்கள் ஆட்சியே வேண்டும் என்று ஆயுதம் ஏந்தாமல் இன்றும் அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருப்பவர் ஆங் சான் சூகி. 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டதற்காகவே இன்றைக்கும் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

1945-ம் ஆண்டு ஜூன் 19 அன்று பர்மாவில் பிறந்தார் ஆங் சான் சூகி. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதம அமைச்சராக இருந்த அவருடைய தந்தை ஆங் சான், 1947-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஆங் சான் சூகி 1964-ல் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார் . அங்கு, 1972-ல், பூட்டான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த மைகேல் ஏரிஸ் என்ற அறிஞரைச் சந்தித்தார். பிறகு, அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.

2009-ம் ஆண்டு ஆங் சான் சூகியை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கும் முன்னர், நாட்டுக்கு விரோதமான ஒருவரை வீட்டில் இரண்டு நாட்கள் தங்க வைத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், விடுதலைக்குப் பிறகு மீண்டும் வீட்டிலேயே அடைக்கப்பட்டார்.

ஆங் சான் சூகி தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகளை வீட்டுக்காவலில்தான் கழித்தார். 2010-ம் ஆண்டு ராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் அவரது கட்சி 81% பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனாலும், ராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சிப் பீடத்தில் ஏறவிடாது தடுத்தது. அதோடு, ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை மணம் செய்ததால்  அவருக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்றும் அறிவித்தது.

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில ஆலோசகராக அந்நாட்டின் பெரும்புள்ளிகள் அவரை அனுமத்தித்தனர். அப்போது அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவருடைய நோக்கங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.  அமைதியாகவே போராடும் ஆங் சான் சூகி  கடைசி வரை  தன் கொள்கைகளைக் கடைப்பிடிக்க தவற‌ மாட்டார் என்பதும் தெளிவாகியது.

அவரிடம் இருந்து நாம் கற்றுக் கோள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - அமைதி!

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், தத்துவஞானியுமான பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) பிறந்த தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், தத்துவஞானியுமான பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) பிறந்த தினம் இன்று.

பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் (1623) பிறந்தார். 3 வயதில் தாயை இழந்தார். வரி வசூல் அதிகாரியான தந்தை, கணிதத்திலும் அறிவியலிலும் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட, தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தந்தார். பாரம்பரிய மொழிகளையும் கற்பித்தார்.

அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் பாஸ்கலுக்கு கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம். வடிவியல் குறித்த நூல்களைப் படித்து தானாகவே வடிவியலைக் கற்றுத் தேர்ந்தார். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். பல கணித நூல்களை வாங்கிக் கொடுத்து மகனை உற்சாகப்படுத்தினார் தந்தை.

பிற்காலத்தில் பிரான்ஸ் அறிவியல் அகாடமியாக மாறிய ஃபாதர் மெர்ஸீன் விவாதக் கழகத்தில் 14-வது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தன் கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ஜெனரேஷன் ஆஃப் கோனிக் செக்சன்ஸ்’ என்ற தனது முதல் ஆராய்ச்சி நூலை 1639-ல் வெளியிட்டார்.

வடிவியலில் பெரிய சாதனையான கூம்புவெட்டுகள் பற்றி 16-வது வயதில் நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம் ‘பாஸ்கல் தேற்றம்’ என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதில் உதவுவதற்காக, 3 ஆண்டுகள் கடுமையாக முயன்று கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி அவருக்கு பரிசாகத் தந்தார். முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். இதற்காக அவர் 50 வேறுபட்ட மாதிரிகளை உருவாக்கி, இறுதியில் வெற்றி கண்டார். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 20 கூட்டல் இயந்திரங்களை உருவாக்கினார்.

திடப் பொருட்களின் கன அளவு, வட்ட வடிவப் பொருட்களின் பண்புகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி கட்டுரைகள் எழுதினார். நவீன பொருளாதாரம், சமூக அறிவியல் வளர்ச்சியை கணிக்க நிகழ்தகவு கோட்பாட்டை உருவாக்கினார்.

எண்கணித முக்கோணங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். நீரின் குணங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். நீரின் அழுத்தம் மற்றும் வெற்றிடப் பண்புகளை நிரூபித்தார். 1653-ல் நீரின் அழுத்த விதியைக் கண்டறிந்து, வெளியிட்டார். இது ‘பாஸ்கல் விதி’ எனப்படுகிறது.

வாயு மற்றும் திரவவியலைக் குறிக்கும் பாய்ம இயக்கவியலில் அழுத்தம் பற்றிய இவரது விதி உலகப் புகழ்பெற்றது. இவரது இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான கருவிகள் உருவாக்கப்பட்டன. இவர் கண்டறிந்த கணித சாதனங்கள் வணிக ரீதியாகவும் தயாரித்து விற்கப்பட்டன. அழுத்தம் ‘பாஸ்கல்’ என்ற அலகால் குறிக்கப்படுகிறது.

ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர். 1654-ல் ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தை தொடர்ந்து விஞ்ஞானம், கணித ஆய்வுகளை விட்டு, தத்துவம், மத விஷயங்களில் கவனம் செலுத்தினார். அதுபற்றியும் பல கட்டுரைகள் எழுதினார்.

சிறு வயதுமுதலே அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர், நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். எதையும் விடா முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியும் நெஞ்சுரமும் படைத்த பிளைஸ் பாஸ்கல் 39ஆவது வயதில் (1662) காலமானார்.

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:சர்வதேச அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

சர்வதேச  அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.
( International  Sickle Cell Day )

இது ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் நோயாகும், இது பரம்பரை மற்றும் பெற்றொரிடமிருந்து பரவுவதாக கூறப்படுகிறது.

இவற்றின் அறிகுறி -   தோல், நகங்கள், கண்ணின் உள்புறம், நாக்கு போன்ற பகுதிகள் வெளிறி இருக்கும், இவற்றை நம்பத்தகுந்த அறிகுறிகளாகக் கொள்ள முடியாது. Hemolytic anemia வில் குருதிச் சிவப்பணுக்கள் அழிவடைவதால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். மேலும் எலும்புகளில் அமைப்பு மாற்றம், இரும்புச்சத்து குறைபாட்டினால் உணவற்ற சில பதார்த்தங்களை உண்ண ஆரம்பிப்பர். காகிதம், மெழுகு, சமைக்கப்படாத அரிசி, அழுக்கு, புல், தலைமுடி, கரி போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அறிகுறியாகக் கொண்டிருப்பார்கள்.

இவை ரத்தச்சோகை இல்லாதவர்கள் சிலரிலும் காணப்படும். நாட்பட்ட ரத்தசோகை ஏற்படும்போது, குழந்தைகளின் நடத்தையில் குழப்பம் ஏற்பட்டு, சில நரம்பியல் தொடர்பான விரும்பத்தகாத விருத்தி நிலைகளால் தமது கல்வியில் பின் தங்கியவர்களாக மாறிவிடுவர். இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் ரத்தச்சோகையில் கால்களில் தளர்வும், அமைதியற்ற நிலையும் காணப்படும்.

மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகளாவன: கால், கைகளில் வீக்கம், தொடர்ந்த இதயவலி, வாந்தி, அதிக வியர்வை, மலத்துடன்  ரத்தம் வெளியாகும்.

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:"உவமைக் கவிஞர்" சுரதா நினைவு தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

"உவமைக் கவிஞர்" சுரதா நினைவு தினம் இன்று.

கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன்.

பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

"இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.

1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது.

பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.

"உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.

சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.

புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது.

அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்.

"மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.

சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.

1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.

சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.

ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.

மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.