சனி, 26 செப்டம்பர், 2020

*🖥️2020-2021 ஆம் ஆண்டுக்கான E-Filing செய்தல் மற்றும் E-Pay tax கட்டுதல் பற்றிய ஒரு விளக்கம்.

*🌟ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*


*🖥️2020-2021 ஆம் ஆண்டுக்கான E-Filing செய்தல் மற்றும் E-Pay tax கட்டுதல் பற்றிய ஒரு விளக்கம்.

*வருமானவரி E-Filing  செய்யும்போது முன்பு அனைத்து வருமானவரி தாக்கல் செய்யும்முறைகளுக்கும்(1)ஆதார் OTP, 2)EVC முறை மற்றும் 3) centralized processing centre,Income tax department Bengaluru க்கு  Post செய்தல்)வருமானவரி கணக்கு  submit செய்தவுடன் Acknowledgement generate ஆகும்.*

*ஆனால் இவ்வாண்டு கொரோனா பேரிடர் காரணமாக ஆதார் லிங்க்   OTP கொடுத்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது..மற்ற முறைகளுக்கு Acknowledgement generate ஆவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.*

*வருமானவரி தாக்கல்  செய்யும்போது ஆதார் லிங்கினை தேர்வுசெய்து ஓடிபி(OTP)பதிவிட்டு Submit செய்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது.அத்துடன் வருமானவரி அலுவலகத்திற்கு   Acknowledgement அனுப்பத்தேவையில்லை என்பது அனைவரும் அறிந்ததே...அதற்கான Acknowledgement ல் எவ்வித மாற்றமும் இல்லை.*

*Centrelized processing centre,Income tax department,Bengaluru ஐ தேர்வு செய்து Submit செய்தால் Acknowledgement வராது.அதற்குப் பதில் Income tax E-verification form generate ஆகும்.அதில் கையொப்பமிட்டு Centrelized processing centre,Income tax department,Bengaluru 560500 முகவரிக்கு சாதாரண தபாலில் அல்லது விரைவஞ்சலில் அனுப்பி வைத்தால் return verification முடிந்து அதன் பிறகே Acknowledgement Generate ஆகும்.*

*ஆதார் லிங்க்  முறையினை தேர்வு செய்ய இயலாதவர்கள் உடனடியாக வருமானவரி கணக்குடையவர் ஆதார் எண்ணையும்,பான் எண்ணையும் இணையுங்கள்..அல்லது  உங்கள் பழைய அலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அதற்குப்பதிலாக புதிய எண்ணை ஆதாருடன் இணையுங்கள்...அதன் பிறகு வருமானவரி கணக்கு Return தாக்கல் செய்யும் போது ஆதார் லிங்க் முறையினை தேர்வு செய்தீர்களானால் உடனடியாக Acknowledgement generate ஆவதோடு Bengaluru வருமானவரி அலுவலகத்திற்கு Acknowledgement அனுப்பத் தேவையில்லை.*

கீழே *Acknowledment மாதிரி*
*Income tax E-verification form மாதிரி உள்ளது.*
E-Verification Form


*🖥️E-Pay tax பற்றிய விளக்கம்.*

*மார்ச்சு மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 12 மாதங்களில் வருமானவரி 100% பிடித்தம் செய்திருப்பீர்கள்.ஒருவேளை வருமானவரி செலுத்துபவர், ஊதியம் பெற்று  வழங்கும் அலுவலர்  ஆகியோரால் வருமானவரி தவறுதலாக குறைவாக கட்டப்பட்டிருந்தால் அதற்கு வட்டியுடன்  சேர்த்து E-pay tax E-Filing செய்யும் போது கட்ட வேண்டும்.*

*ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதர வருமானம் பெறும்போது உங்கள் பான் எண் மூலம் சம்பளம் தவிர வரும் வருமானத்திற்கு  E-Filing மூலம் Interest ஆக கலத்தில் காட்டப்பட்டு E-Pay Tax ஆக காட்டப்படும்.அந்த E-Pay Tax ஐ கிளிக் செய்தால் Challan எண் 280 ஐ கிளிக் செய்து Tax applicable ல் 021 Other than companies ஐ தேர்வு செய்து Type of payment ல் 300 Self assessment Tax ஐ கிளிக் செய்து  உங்கள் வங்கியின் Net banking மூலமாகவோ அல்லது Debit card (Atm card)மூலமாகவோ வருமானவரியினை கட்டலாம்.*

*E-pay tax கிளிக் செய்தால் வரக்கூடிய வருமானவரி Challan 280 கீழே*

*E-Pay tax கட்டியபிறகு வரும் Challan எண் மற்றும் E-Pay tax கட்டிய  தொகை,தேதி உள்ளிட்ட விபரங்களை E-Filing செய்யும் போது Details advance tax or Regular tax assessment என்ற கலத்தில் கட்டாயமாக குறிப்பிட்டு E-Filing செய்ய வேண்டும்.*

*🌟தன்பங்கேற்பு ஓய்வூதியம் 2020-21 ஆம் ஆண்டுக்கான வட்டிவிகிதம் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*

*🌟தன்பங்கேற்பு ஓய்வூதியம் 2020-21 ஆம் ஆண்டுக்கான வட்டிவிகிதம்  அறிவித்து தமிழக அரசு  அரசாணை வெளியீடு.*

மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள்!

மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள்!


10–12 மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை அறிவித்துவிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வருகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், பாடத்திட்டக் குறைப்பு குறித்து முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்!

அரசாணை வெளியிடும் முன்னரே பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசிக்கவில்லையா? பள்ளிகளைத் திறப்பதில் ஏன் இந்த அவசரம்?

மாணவர்கள் உயிர்ப் பாதுகாப்பைப் பெற்றோர் தலையில் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்காமல் அரசே உறுதி செய்ய முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் ஆதங்கம்!

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் ஆதங்கம்!

என்னதான் சார் பண்ணப் போறீங்க?😡

அக்டோபர் 1 ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன் லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.

“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு  இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு” சொல்றீங்க . அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’  போடறீங்க.

அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி. ஓ போட்டுட்டு  நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா?
இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க? 

இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது?

ஈரோட்டில் ஒரு அறிவிப்பு ; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு.

‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே?

உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?

*🌟31.3.2020 க்குப் பிறகு ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்*

*🌟31.3.2020 க்குப் பிறகு ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்*