வெள்ளி, 7 ஜூன், 2019

*திருச்செங்கோடு மன்றத்தின் ஒன்றிய துணைச்செயலாளர் திரு.சிற்றரசு-வனிதாமணி திருமணவரவேற்பு விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பு நிகழ்வுகள்*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர்மன்றம்,திருச்செங்கோடு ஒன்றிய துணைச்செயலாளர் திரு.சிற்றரசு-வனிதாமணி திருமண வரவேற்புவிழா 06.06.2019 பிற்பகல் 7 மணிமுதல் 10 மணிவரை திருச்செங்கோடு ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு முருக செல்வராசன் வரவேற்புரையாற்றினார்.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும்,பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K.S மூர்த்தி அவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசி மணமக்களுக்கு நூலினை  பரிசாக வழங்கினார்.மேலும் மாநில பொதுச்செயலாளக்கு நூல் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.திருச்செங்கோடு,பள்ளிபாளையம்,மல்லசமுத்திரம் தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விதிமுறைக்குழு உறுப்பினர் திரு.ராஜேந்திரன்,மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.வெ.பாலமுரளி,நாமக்கல் மாவட்டத்தலைவர் திரு.ஆசைத்தம்பி,சேலம் மாவட்டச் செயலாளர் திரு.முருகவேள்,மாநில தலைமைநிலையச் செயலாளர் திரு.பெ.பழனிசாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப்பேசினார்கள்,அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் மாநில/மாவட்ட/திருச்செங்கோடு ஒன்றிய பொறுப்பாளர்களால் மரியாதை செய்யப்பட்டது.மாவட்ட மகளிரணி அமைப்பாளர்,மாவட்ட துணைச்செயலாளர்கள்,மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

   நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.A.K.P சின்ராசு அவர்கள் மணமக்களை வாழ்த்திப்பேசினார்.அன்னாருக்கு மாநிலபொதுக்குழு உறுப்பினர் பொன்னாடை அணிவித்து நூல் பரிசாக வழங்கினார்.அன்னார் அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்களும்,பொதுச்செயலாளர் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் மரியாதை செய்தனர்.மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் உடனிருந்தார்.நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு சங்ககிரி ஒன்றிய மன்ற மறவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.கொங்குநாடு மக்கள் தேசிய ட்சியின் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு மன்றத்தின் மாவட்ட துணைச்செயலாளர் மரியாதை செய்தார்.மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் பாவலர் ஐயா அவர்களுக்கு நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல் பரிசளித்தார்.பாவலர் ஐயா மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.பாவலர் ஐயா அவர்களுக்கு மல்லசமுத்திரம் ஒன்றியப் பொறுப்பாளர்களும்,அயோத்தியப்பட்டினம் ஒன்றிய பொறுப்பாளர்களும் பொன்னாடை அணிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.பல்வேறு  ஒன்றியங்களைச் சேர்ந்த மாநில/மாவட்ட/ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீ அவர்கள் மணமக்களுக்கு பொன்னாடை அணிவித்து நூல் பரிசளித்து நீண்ட நெடியதொரு அருமையான வாழ்த்துரையினை வழங்கினார்.திருச்செங்கோடு ஒன்றிய பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.கார்த்திக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.*





































புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையினை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும். பொதுமக்கள் கருத்து தெரிவித்திட 6 மாதகாலம் அவகாசம் அளித்திட வேண்டும் என ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் வேண்டுகோள்



பெண்குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் (BBBP) தங்கமகள் விருது வழங்கும் விழாவிற்கு தகுதியுள்ள திறமை படைத்த பெண் குழந்தைகளின் பெயர்ப்பட்டியலை கோருதல் சார்பு...



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் க.மீ . அவர்கள் விடுத்துள்ள செய்தியறிக்கை..



டிஎன்பிஎஸ்சி~அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு சான்று சரிபார்ப்பு , நேர்காணல் நடக்கிறது…


டிஎன்பிஎஸ்சி~அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு சான்று சரிபார்ப்பு , நேர்காணல் நடக்கிறது…

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் ~ ஆவணம் சமர்ப்பிக்க 30ம் தேதி கடைசி…

அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட கோரிக்கை...



TN SCERT YouTube Channel ~ Video Lesson...