வியாழன், 1 நவம்பர், 2018

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த இடி.. வீடு புகுந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, பல லட்சக்கணக்கான கார்களை வீடு புகுந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதனால் பீதியடைந்துள்ள மக்கள், அடிமாட்டு விலைக்கு தங்கள் கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உடனடியாக மாறுவதில் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களைதான் மக்கள் தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்தியாவிலேயே காற்று மிகவும் மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region-NCR) விளங்குகிறது. தேசிய தலைநகர் பகுதி என்பது, டெல்லி, ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில முக்கியமான நகரங்களை உள்ளடக்கியதாகும்.

டெல்லி, நொய்டா, மீரட், குர்கான், காசியாபாத், பரிதாபாத், ரோஹ்டக் உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பகுதியின் கீழ் வருகின்றன. இங்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதன்படி இந்த வழக்கு நேற்று முன் தினம் (அக்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தலைநகர் பகுதியில் பயணிக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே மேற்குறிப்பிட்ட கார்களை அதிரடியாக பறிமுதல் செய்யும் பணிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்கியுள்ளனர்.

தேசிய தலைநகர் பகுதியில் உள்ள சாலைகளில் இனி 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்கள் பயணித்தால் உடனே பறிமுதல் செய்யப்படும். இதுதவிர வீடு புகுந்து கார்களை பறிமுதல் செய்யவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்பின் அந்த கார்களினுடைய உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை பறிமுதல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதனால் சம்பந்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

 இதில், பெரும்பாலானோர், மிக அவசர அவசரமாக தங்கள் கார்களை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிடைத்த வரை லாபம் என்பது மட்டுமே அவர்களின் எண்ணமாக உள்ளது.

எனவே ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற அதிக விலை கொண்ட லக்ஸரி கார்கள் கூட மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளர்கள் பலரும் தற்போது தேசிய தலைநகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து அரசாணை 227 வெளியீடு



கரூர்-சேலம் சிறப்பு ரயில் மேலும் 3 மாதம் நீட்டிப்பு...

ஆளை கொல்லும் அஞ்சாலை சுறா...

வாட்ஸ்அப் பில் வதந்தி பரப்புவோரை கண்டுபிடிக்கும் வசதி விரைவில் செயல்படுத்தப்படும்- வாட்ஸ்அப் நிறுவனம்



வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களைi அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.



இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.


இந்த நிலையில், சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், சில அப்பாவிகள் பலியாகினர். 
இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாக பரவாமல் இருக்க, ஒருவர் ஒரே நேரத்தில் வாட்சப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்தது.


மேலும், வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்த உடன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 
மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அணைத்து தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பி.எட் படிப்பில் சேர்க்கக்கூடாது ~கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை உத்தரவு…

தமிழகத்தில்அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு வரன்முறை செய்ய நவம்பர் 3 தேதி கடைசி நாள்...

80 வயதை கடந்தவர்களுக்கு இனி முதியோர் ஓய்வூதியம் வீடு தேடி வரும்~தமிழக அரசு உத்தரவு…

மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நகைச்சுவை கதைகள்

வெளிநாடுகளில் தவழும் தமிழர் பண்பாடு

SBI-State Bank India Recruitment Specialist Officers Posts MBA, MCA, CA


SBI Recruitment 2018-2019, SBI invites Online Application for the post of 47 Analytics Translators, Sector Credit Specialists, Portfolio Management Specialists, Sector Risk Specialists Posts. SBI-State Bank India Recruitment Specialist Officers Posts MBA, MCA, CA, Opening Date and time for Submission of Application is 30.10.2018 and end up by 22.11.2018. You can check here SBI Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, SBI Selection Process, How to apply, SBI Syllabus, SBI Question Paper, SBI Admit Date Release Date, SBI Exam Date, SBI Result Release Date & other rules are given below…
SBI-State Bank India Recruitment Specialist Officers Posts MBA, MCA, CA
Highlights for SBI Recruitment 2018 Notification:
Organization Name: State Bank of India
Job Category: Central Govt Jobs
Official Website: www.sbi.co.in
No. of Posts: 47 Vacancies
Educational Qualification: B.E/B.Tech, MBA, MCA, CA/ICWA
Name of the Posts: Various Posts
Job Location: Mumbai (Maharashtra)
Selection Procedure: Short listing, Interview
Application Apply Mode: Online
Starting Date: 30.10.2018
Last Date: 22.11.2018
SBI Recruitment 2018 Vacancy Details:
Name of the Post & No of Vacancies:
Analytics Translators: 04
Sector Credit Specialists: 19
Portfolio Management Specialists: 04
Sector Risk Specialists: 20
Eligibility Criteria for SBI Specialist Cadre Officers:
As per the recent SBI notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Specialist Cadre Officers job has given below.
Educational Qualification:
Analytics Translators:
B. Tech/ B. E. (Computer Sciences)/ MCA/ MBA (Business Analytics)/ M. Stat. (ISI Kolkata)
Sector Credit Specialists:
Charted Accountant / MBA (Finance))/ Master in Finance Control/ Master in Management Studies/ PGDM (Finance) + MMGS-III: Minimum 5 years & SMGS-IV: Minimum 8 years Experience In Banks/ PSUs/ Corporates in High Value Credit / Analysis
Portfolio Management Specialists:
Chartered Accountant / MBA (Finance) + MMGS-III: Minimum 5 years & SMGS-IV: Minimum 8 years Experience in Portfolio Management in Banks/ Financial Institutions for optimum return.
Sector Risk Specialists:
Chartered Accountant / MBA (Finance) / ICWA/ CFA Other Qualifications (Preferred): Financial Risk Manager (FRM) Certification by Global Association of Risk Professional (GARP)
Age Limit (As on 30.09.2018):
For Gen/ UR Candidates Be between 25 years to 35 Years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through SBI official Notification 2018 for more reference
Salary Details:
MMGS-III: Rs. 42020-1310/5-48570-1460/2-51490/-
SBI Specialist Cadre Officers Selection Procedure:
Short listing
Interview
Application Fee/Exam Fee:
Gen/ OBC: Rs.600/-
ST/SC/Ex-s/PWD: Rs.100
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply SBI Specialist Cadre Officers Vacancy:
Log on to SBI Careers Page at official website to www.sbi.co.in
Eligible candidates are advised to open Notification
Read the Advertisement carefully to be sure about your eligibility
Click on “Click here for New Registration”, if you are a new user.
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Complete the Registration & Click on “Submit” & Make Payments
Take a print out of online application for future use.
Important Dates:
Starting Date for Submission of Application: 30.10.2018
Last date for Submission of Application: 22.11.2018
Online Application & Official Notification Links:
SBI Official Notification PDF: Click Here

SBI Online Application Form: Click Here


பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவம் குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம்


தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் , உதவி தொடக்கக்கல்வி மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் செயல்படும் இடம் -அரசாங்க நிலங்களை ":Tamil Nilam" தரவு தளத்தில் பதிவு செய்ய -இயக்குநர் உத்தரவு


மனித உடலின் இரகசியம்

*இதுதான் மனித உடல்.!!!!*

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

 மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.

 உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

#உடலின்_மொழி..
****************************
1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு
நம் உள்உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.


ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கிறது - கல்வித்துறை

விடுமுறையின் போது போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 15 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான (நீட் மற்றும் ஜேஇஇ) பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மையத்தில் 180 பேரும், ஓ.சி.பி.எம். பள்ளி மையத்தில் 200 பேர் வரையிலும் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி வகுப்புகளை நடத்த மையத்துக்கு தலா 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் வரவில்லை என்ற புகார் எழுந்தது. போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு ஆசிரியர்களை வரவழைப்பதற்கு ஆசிரியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், கடந்த காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் வரவில்லை. இதனால் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
 தற்போது காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது போட்டித் தேர்வுகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி மதுரை மாவட்டத்தில் 50 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நோட்டீஸுக்கு உரிய பதிலை ஆசிரியர்கள் வழங்காவிடில் விதிமுறைப்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ONE TOUCH VIDEO SOCIAL SCIENCE

நவம்பர் 2018~பள்ளி நாட்காட்டி…

எளிதில் கிடைக்கக்கூடிய பப்பாளியில் உள்ள மருத்துவ குணங்கள்

பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.


எளிதில் கிடக்கக்கூடிய பப்பாளி கல்லீரலை பலப்படுத்துவதோடு, நோயை தடுக்கும் மருந்தாக அமைகிறது. பப்பாளியில் உள்ள வேதிப்பொருள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.


சாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.



பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.




பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்..

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு


Jio 5G சேவை திட்டம்


வருமான வரி விதிகளில் திருத்தம் - கருத்து கேட்கிறது வருமானவரித்துறை


இந்தியாவில் மீண்டும் கலக்க வரும் ஜாவா மோட்டார் பைக்