சனி, 19 டிசம்பர், 2020

பர்கூர் அருகே 600 ஆண்டுக்கு முந்தைய விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு...

ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை - யுனிசெஃப் வலியுறுத்தல்...

ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை - யுனிசெஃப் வலியுறுத்தல்...


ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யலாம்.


சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ஸ்மார்ட் வகுப்பறை: செங்கோட்டையன்*

*7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ஸ்மார்ட் வகுப்பறை: செங்கோட்டையன்*

*தமிழகத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.*

*திருச்சியில் இன்று நடைபெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:*

*வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும்.*

 *கரும்பலகைகள் இல்லாமல் செய்திட 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் பலகைகள் ஏற்படுத்தப்படும்.*

 *7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்படும்.*

*6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும் என்றார் அவர்.*

*இந்த நிகழ்ச்சியில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.*

*பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:*

*பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். மருத்துவக் குழுவினர், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை கேட்டு தேவைப்படும் நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்.*

*இந்தாண்டு 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களும், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீத பாடங்கள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*இந்த பாடங்களில்தான் இறுதித் தேர்வுக்கான கேள்விகளும் இடம்பெறும் என்றார்.*