புதன், 21 நவம்பர், 2018

GENERAL ELECTION TO LOK SABHA 2019~Form...

மனிதர்களுக்கு ஆதார் எண் போன்று நிலங்களுக்கு பூதார் எண்...

ஆசிரியர்கள்-மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் - கலெக்டர் அன்பழகன்


கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.


அப்போது அவர் பேசுகையில், “குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை, குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டறிந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் அது பற்றிய தகவல் குறித்து கடிதம் எழுதி, தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தபால் அனுப்பலாம்“ என்றார்.

தொடர்ந்து பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், இடஒதுக்கீடு விவரம் ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் முகவரி அச்சிடப்பட்ட தபால் கடிதம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சு.கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நன்னடத்தை அதிகாரி தேவகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட கல்வி அதிகாரி கனகராஜ், இலவச சட்டப்பணிகள் ஆணைகள் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வேண்டுகோள்


கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புதிட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் குளித்தலை தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், சொக்கலிங்கம் கலந்துகொண்டு பேசுகையில், “குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளி மற்றும் வெளி இடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரவேண்டும். குழந்தைகள் செல்போன் பேசுவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.
குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அனைவருடன் அன்பாக பழக வேண்டும்” என்றார்.

உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் புகைப்பட கண்காட்சி


மாமல்லபுரம், 
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நேற்று முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.


இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புராதன சின்னங்களின் முக்கியத்துவம் மற்றும் புராதன நினைவிடங் களை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இதையொட்டி நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். திரளான பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் வருகை தந்து புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்தனர். இதனால் கடற்கரை கோவில் அருகில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
முதல் நாளான நேற்று கடற்கரை கோவில் அருகில் புராதன சின்னங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
இதில் ஜெர்மனி தூதர் கரின்ஸ்டோல், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பொதுமக்களும் புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இதில் தொல்லியல் உதவி அலுவலர் காயத்ரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பரணிதரன், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

233 பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு



தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டனர். இந்த பகுதிநேர ஆசிரியர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கிடையே பணிக்காக சிலர் போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி அரசு உத்தரவிட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 451 பகுதிநேர ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று பழனி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 100 பேர், வேடசந்தூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 133 பேர் என மொத்தம் 233 ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் கருப்பையா, பிச்சைமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட 9 குழுவினர், பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
இதைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இதுதொடர்பான அறிக்கை வருகிற 28-ந்தேதிக்குள் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்


திடீரென ஏற்படும் நிலநடுக்கத்தை கண்டுபிடித்து நம்மை அலெர்ட் செய்வதற்காகவே மைஷேக் ரன்ஸ் ( MYSHAKE RUNS ) என்றொரு ஆப்பை கண்டுபிடித்துள்ளனர் பெர்க்லே ( berkeley ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.


பெரும்பாலும் எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் என்பது ஒரு உடலுறுப்பு போன்றே ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் பூகம்பம் ஏற்படும் முன் மக்களை காப்பாற்ற ஸ்மார்ட் போனில் தகவல் வந்தால் உயிர்சேதம் தடுக்கப்படும். 

இந்த ஆப் எப்போதும் நமது போனில் சத்தமின்றி ஓடிக் கொண்டிருக்கும். குறைவான பவர் மட்டுமே உபயோகிக்கும். 10 கி.மீ. தொலைவு வரை ஏற்படக்கூடிய நில அதிர்வுகளை கணிக்கவல்லது இந்த ஆப்.
நிலநடுக்கம் ஏற்படும் அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக தகவலை நமது போனுக்கு தெரியப்படுத்தும். பூகம்பத்தை கணிக்கும் கருவியாக நமது போனை மாற்றிவிடுகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்து வரும்முன்பே நம்மை தற்காத்து கொள்ள வந்திருக்கும் இந்த ஆப்பை கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு ‘சல்யூட்’. செய்து வரவேற்கின்றனர்

80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?



வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால்,
நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம் சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில் எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவதில்லை.

வருமான வரிப்பிரிவில் 80 சி பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒன்றரை ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரையாகும்.

நம்முடைய அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதற்காகவே சில ரசீதுகளைக் கேட்பார்கள். குழந்தைகளின் கல்விக்கட்டணம், எல்ஐசி முதலீடுகள், மியூட்சுவல் பண்ட், கட்டுவதற்கான ரசீதுகளை அனுப்பினால் வரி பிடித்தம் குறைவாக இருக்கும். இல்லையெனில் நாம் வாங்கும் சம்பளத்தில் வரி இவ்வளவு கட்ட வேண்டுமா என்று யோசித்தே மண்டை குழம்பிவிடும். வரி சேமிப்புக்கான திட்டங்களை படித்து அதில் முதலீடு செய்யுங்கள்.
நாம் சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவே நமது சேமிப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேசிய ஓய்வூதிய சிஸ்டம் ( என்பிஎஸ்)
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் பங்களிக்க வேண்டும், ஆண்டுக்கு.
குறைந்தது 6000 ரூபாய் பங்களிக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு வைத்திருப்போரின் வசதிக்கேற்ப, சேர்த்து வைத்த பணத்தை நிறுவன கடனாக, சமபங்காக, அரச பத்திரங்களாக மாற்றிக்கொள்ளலாம். ஓய்வூதிய திட்டத்தில் பணம் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டம் 80 சியின் படி ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும்.


மியூட்சுவல் பண்ட் ( இஎல்எஸ்எஸ்)
மியூட்சுவல் பண்ட் எனப்படும் இதிலும் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது லாக் இன் காலமாகும். இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம் குறைவு


தேசிய சேமிப்பு பத்திரம் ( என்எஸ்சி)
.
தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்)
பொது வருங்கால வைப்பு நிதியில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது.
சுகன்யா சம்ரிதி யோஜனா ( எஸ்எஸ்ஒய்)
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தபால் நிலையங்களில் தொடங்கலாம். 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 21 வயதுவரை சேமிக்க வேண்டும். ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பணம் முதிர்வடைந்த பின்னர் வட்டிக்கு வரி கிடையாது.

வங்கி, போஸ்ட் ஆபிஸ் வைப்பு நிதி
பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்பவர்கள் வங்கிகளில் ஐந்து வருடம் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒன்றரை லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.
.
..
யூலிப் (யுனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டம்)
ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. 5ஆண்டு காலம் லாக் இன் செய்ய வேண்டும். நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

IAF-Indian Air Force Tirunelveli Rally Recruitment 2018


Indian Air Force Tamilnadu Rally 2018 2019 | Indian Air Force invites Application for the post of Airmen in Group “Y” (Non-Technical) Posts. Indian Air Force offers opportunities for UNMARRIED MALE INDIAN/NEPALESE CITIZENS from designated Districts of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) to join as Airmen. The Recruitment Test for Group „Y‟ (Non-Technical) {Indian Air Force (Security) [IAF(S)]} Trade will be held at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu as per the Selection Programme given below. Candidates (from designated districts of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) fulfilling the domicile requirements and eligibility conditions reporting up to 10 AM on 09 December 2018 and 12 December 2018 at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu (Rally venue) shall only be permitted to appear in the Recruitment Test.


Indian Air Force Recruitment 2018Notification Highlights – Apply Now

Organization Name: 

Indian Air Force Tamilnadu Rally 2018 2019 | Indian Air Force invites Application for the post of Airmen in Group “Y” (Non-Technical) Posts. Indian Air Force offers opportunities for UNMARRIED MALE INDIAN/NEPALESE CITIZENS from designated Districts of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) to join as Airmen. The Recruitment Test for Group „Y‟ (Non-Technical) {Indian Air Force (Security) [IAF(S)]} Trade will be held at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu as per the Selection Programme given below. Candidates (from designated districts of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) fulfilling the domicile requirements and eligibility conditions reporting up to 10 AM on 09 December 2018 and 12 December 2018 at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu (Rally venue) shall only be permitted to appear in the Recruitment Test.

Indian Air Force Recruitment 2018Notification Highlights – Apply Now

Organization Name: Indian Air Force
Job Category: Central Govt Jobs
Official Website:https://airmenselection.cdac.in/
No. of Posts: Vacancies
Name of the Posts: Airmen in Group “Y” (Non-Technical) & Various Posts
Job Location: All Over India
Selection Procedure: Written Test, Adaptability Test1, Adaptability Test2 & Dynamic Factor Test (DFT)
Rally important Dates: 09 December 2018 to 12 December 2018
Application Apply Mode: Offline

Name of the Post & No of Vacancies:

Airmen in Group “Y” (Non-Technical) & Various Posts

Eligibility Criteria for Indian Air Force Airmen in Group “Y” (Non-Technical):

Candidate should have passed Intermediate / 10+2 / Equivalent Examination in any stream/subjects approved by Central / State Education Boards with minimum 50% marks in aggregate and 50% marks in English.
Note – 1: Education Boards listed in Council of Boards for School Education (COBSE) website as members, shall only be permitted.
Note – 2: Exact aggregate % of marks before decimal as written in the marks sheet of 10+2/Intermediate/Equivalent OR calculated as per the rules of concerned Education Board shall only be considered (For example 49.99% should be taken as 49% and not to be rounded off to 50%).
Domicile Requirement.

To be eligible to appear in the rally at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu the candidates shall be required to satisfy the following conditions:
(a) The School / College / Institute from where candidates have passed the qualifying examination should be within the geographical / administrative limits of designated Districts (as specified in Paragraph 2 above) of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts). If the name of District is not mentioned with the name of Institution in the certificate / marks sheet of qualifying examination, the candidates shall produce „Domicile Certificate‟ issued by Taluk Tehsildar or any official authorized by the State Government of Tamil Nadu and Tehsildar/SDM/DM or any official authorized by the Government of UT of Puducherry.
(b) Permanent Domicile of designated Districts (as specified in Paragraph 2 above) of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) who have passed the qualifying examination from anywhere in India shall produce the Domicile Certificate prior to commencement of examination from appropriate authority as given in sub-paragraph 5(a) above.
(c) Sons of serving Air Force personnel {Officer/Airmen/NCs(E) and Unit cadre Civilians paid from Defence Estimates} whose father/mother is presently serving in any Air Force Unit/any other Organisation located in the designated Districts (as specified in Paragraph 2 above) of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) irrespective of their domicile status, shall be permitted to appear in the rally subject to production of latest SOAFP (Son of Air Force Personnel) Certificate (format available at CASB site on AFNET).
(d) Sons of Air Force personnel {Officers/Airmen/NCs(E) and Unit Cadre Civilians paid from Defence Estimates} whose father/mother is Retired/ Discharged/ Deceased and they are residing in the designated Districts (as specified in Paragraph 2 above) of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) shall be permitted to appear in the rally subject to production of proof of minimum stay of one year along with original and photocopy of Service Book/Discharge Book/Casualty Service Certificate/Service Particular Certificate (issued from DPO-3/DAV, as applicable) in case of Officers/Airmen/NCs(E) and a Certificate duly signed by OIC Civil Admin and countersigned by CO/C Adm O of the last served unit, in case of Civilians.

Age Limit:

For Gen/ UR Candidates – Candidates born between 14 July 1998 and 26 June 2002 (both days inclusive) are eligible to appear in the Recruitment Rally.
Go through Indian Air Force official Notification 2018 for more reference

Indian Air Force Airmen in Group “Y” (Non-Technical) Selection Procedure:

Written Test

Adaptability Test1

Adaptability Test 2

Dynamic Factor Test (DFT)

How to apply Indian Air Force Airmen in Group “Y” (Non-Technical) Vacancy?

The Recruitment Test shall be conducted from 6 AM onwards as per the details given below. Candidates (from designated districts of State of Tamil Nadu and UT of Puducherry (Puducherry & Karaikal Districts) fulfilling the domicile requirements and eligibility conditions reporting up to 10 AM on 09 December 2018 and 12 December 2018 at Anna Stadium, Tirunelveli, Tamil Nadu (Rally venue) shall only be permitted to appear in the Recruitment Test.

Note: The Recruitment Test is not for selection as Commissioned Officers/ Pilots/Navigators.

DATEACTIVITIESDISTRICTS TO BE COVERED09 December 2018Physical Fitness Test & Written TestChennai, Coimbatore, Dindigul, Kancheepuram,Karur, Krishnagiri, Madurai, Nagapattinam, Pudukottai, Sivagangai, Thanjavur, Thiruvallur, Thiruvarur, Thiruvannamalai,Tiruppur, Vellore, Villupuram districts of State of Tamil Nadu10 December 2018Adaptability Test – I, Adaptability Test II & Dynamic Factor Test (DFT)11 December 2018Reserve Day12 December 2018Physical Fitness Test & Written TestAriyalur, Cuddalore, Dharmapuri, Erode, Kanyakumari, Namakkal, Perambalur, Ramanathapuram, Salem, The Nilgiris, Theni, Tirunelveli, Trichy, Tuticorin, Virudhunagar districts of State of Tamil Nadu and Puducherry, Karaikal districts of UT of Puducherry.13 December 2018Adaptability Test – I, Adaptability Test II & Dynamic Factor Test (DFT)14 December 2018Reserve Day
Offline Application & Official Notification Links:



Apply Mode: Online

 Air Force
 Category: Central Govt Jobs







இளநீரை வெறும்வயிற்றில் அருந்தலாமா? - உடல்நல மருத்துவம்

நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். கிராமப்புறங்களில் சர்வசாதரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.


தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.




அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.




ஜிம்முக்கு செல்பவர்கள், அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும்.

மதிய உணவுக்கு முன்/பின்

மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படுகிற. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் பவர் இளநீருக்கு உண்டு.

இரவு படுக்கைக்கு முன்:

இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.




"பூலோகக் கற்பக விருட்சம்' என்று இளநீர் சித்தமருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதில் A,B,C,K போன்ற வைட்டமின்களும்,

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்.

உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது"




பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை - வருமான வரித் துறை


பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை என்று வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பான் அட்டை கோரி விண்ணப்பிப்பவர் தாயால் மட்டும் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் இது தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி பான் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவர் என்றால், அவர் தனது தாயின் பெயரை மட்டும் பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம். தந்தையின் பெயரைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் புதிய விதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே இருந்த விதிகளின்படி பான் அட்டை பெற தந்தையின் பெயரைத் தெரிவிப்பது கட்டாயமாக இருந்தது.

நாட்டில் பெண்களின் உரிமையைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. முன்னதாக, பான் அட்டையில் தங்கள் தந்தை பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்டு தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு, தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தனர்.