திங்கள், 11 அக்டோபர், 2021

அமைச்சர்கள் மற்றும் இயக்குநர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்த நிகழ்வு!

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்களுடன் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்களும், பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன்அவர்களும்....





🌹👉அமைச்சர்கள் மற்றும் இயக்குநர்களை சந்தித்த நிகழ்வு:- 🌹👉தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் அவர்களும், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று 11.10.2021 (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், மாண்புமிகு விளையாட்டு,இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களையும், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களையும் சந்தித்தனர். 🌹👉மேலும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திருமிகு. அறிவொளி அவர்களையும், இணை இயக்குனர் உதவிபெறும் பள்ளிகள் திருமதி சாந்தி அவர்களையும், அரசு தேர்வுத் துறை இயக்குனர் திரு. செல்வகுமார் அவர்களையும் DPI ஐ யில் சந்தித்த நிகழ்வு. 👇👇👇👇👇👇👇👇👇👇



 

தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு ஆசிரியர்‌மன்றம் நிதிஅளிப்பு: *************************** மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌ அவர்களின் தலைமையில் இன்று (11.10.2021)தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ரூபாய் ஒரு கோடியே இருபத்து எட்டு இலட்சம் மட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌வழங்கியது. இந்நிதிஅளிப்பு நிகழ்வில் மாநில,மாவட்டப் பொறுப்பாளர்களுடன்‌ நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் பங்கேற்று உள்ளார்கள்