ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

How to Seal control unit After mockpoll in Tamil.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு 
முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு  இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது. மேற்கண்ட 07.04.2021ஆம்  நாளுக்கும் ஊதியம் வழங்கிடுமாறும் வேண்டி உள்ளது.  இக்கோரிக்கைகள் கொண்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்,
தேர்தல் ஆணையத்திடம்  அளித்துள்ளது.
பரமத்தி-வேலூரில் மற்றும் இராசீபுரத்தில் நடைபெற்ற ஆசிரியர் மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.
இக்கோரிக்கைகள் மற்றும் கூட்டத் தீர்மானங்கள் 
நாமக்கல் மாவட்டத்தின் நாளேடுகளில் வெளியாகி உள்ளது.

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு!

இவண்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).