ஞாயிறு, 31 ஜனவரி, 2021

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*


G.O.No.16, Dated: 25-01-2021

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.. இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுவரை வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... 

இதுகுறித்த 25-01-2021 நாளில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை  இணைக்கப்பட்டுள்ளது....

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

 *Telegram இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய.*

*படத்தில் உள்ளது போல privacy setting களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.*

*Setting - Privacy settings*


*1. Phone number - Nobody என்று வைப்பதால் உங்கள் mobile எண் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்.*


*2.Calls - Nobody என்று வைப்பதால் telegram இல் இருந்து உங்களுக்கு யாரும் கால் செய்து தொல்லை கொடுக்க முடியாது.*
 


*3.Groups- இது மிக முக்கியமான setting ஆகும். இதை My contacts என்று மாற்றி கொள்வதால் உங்கள் அனுமதி இல்லாமல் பல தவறான குழுக்களில் உங்களை யாராலும் இணைக்க முடியாது.*


*4.two-step verification - இதை on செய்து கொள்வதால் உங்கள் account மற்றவர்கள் மூலம் தவறான முறையில் பயன்படுத்த முடியாது.*

*5.Archive and mute - இந்த setting இப்போது சில accountகளுக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதை on செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் pm/dm அனுமதி இல்லாமல் வரும் personal message அனைத்தும் mute & archive ஆகிவிடும்.*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம்  வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*


செய்தியினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி-இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பணியிட மாறுதல் உத்தரவு.*

*தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி-இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பணியிட மாறுதல் உத்தரவு.*

*📘அரசாணை எண்.307, நாள்: 31-01-2021 -இன் படி தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப. நியமனம்...*

*📘அரசாணை எண்.307, நாள்: 31-01-2021 -இன் படி  தமிழக அரசின் புதிய புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்.

மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்தவர்.

நாளை(01.02.2021) காலை 7 மணிக்கு பதவியேற்கிறார்.

தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் நியமனம்.

சனி, 30 ஜனவரி, 2021

*📘மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!*

*📘மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!*

*✍️மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள பணியாளர் சீர்திருத்தத் துறை, அரசாணை எண்.6, நாள்.22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்...*
 

*1.விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.*


*2."A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.*


*3. "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்)  மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.*


*4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.*

*5.மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல், IT statement for FY 2020-2021 Excel sheet calculation (with comparison of old and new method)...

Click here for download...

வியாழன், 28 ஜனவரி, 2021

*🏮தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - MHA Order with Guidelines on Surveillance - containment and caution.*

*🏮தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - MHA Order with Guidelines on Surveillance - containment and caution.*
உத்தரவினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

click here.

*✍️தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டுமா? பணிவரன்முறை செய்ய வேண்டுமெனில் மேற்கண்ட ஆணை வழங்கும் அலுவலர் யார்? தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்...*

*✍️தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டுமா? பணிவரன்முறை செய்ய வேண்டுமெனில் மேற்கண்ட ஆணை வழங்கும் அலுவலர் யார்? தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்...*

புதன், 27 ஜனவரி, 2021

*🏮G.O Ms.No.27 நாள்:20.01.2021 - உத்தரவின்படி கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்- மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான பண வரம்பை மேம்படுத்துதல் - தகுதிக்கான அளவுகோல்களை திருத்துதல்.*

*🏮G.O Ms.No.27 நாள்:20.01.2021 - உத்தரவின்படி  கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்- மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான பண வரம்பை மேம்படுத்துதல் - தகுதிக்கான அளவுகோல்களை திருத்துதல்.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 27/01/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களை சந்தித்து, வெண்ணந்தூர் ஒன்றியம்- திருமதி. கா.பிரபாவதி பட்டதாரி ஆசிரியர்- ஊ.ஒ.ந.நி.பள்ளி குட்டலாடம்பட்டி _ பகுதி நேரப் படிப்பாக உயர்கல்விக்கான முன் அனுமதி ஆணையை திருத்தி வழங்கி வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளித்த நிகழ்வு.

வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 27/01/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களை சந்தித்து, வெண்ணந்தூர் ஒன்றியம்- திருமதி. கா.பிரபாவதி பட்டதாரி ஆசிரியர்- ஊ.ஒ.ந.நி.பள்ளி குட்டலாடம்பட்டி _ பகுதி நேரப் படிப்பாக உயர்கல்விக்கான முன் அனுமதி ஆணையை திருத்தி வழங்கி 
 வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர்,
 மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி ,
 ஒன்றியச் செயலாளர்கள் க.சேகர் (பரமத்தி) சி.கார்த்திக் (திருச்செங்கோடு) 
திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் க.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


/மெ.சங்கர்/

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை மனுவை , 27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களிடம் கோரிக்கை மனு அளித்த நிகழ்வு.

அன்புடையீர்! வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை  மாநாட்டின்  மாவட்ட அளவிலான  15 அம்சக் கோரிக்கை மனுவை ,  27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா)  அவர்களிடம் அளித்து கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது. 


மேலும் , பரமத்தி ஒன்றியம் -  திருமதி.மு.செயந்தி,  இடைநிலை ஆசிரியர் என்பவருக்கு 2020 மார்ச்சு  மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி,
 ஒன்றியச் செயலாளர்கள் க.சேகர் (பரமத்தி)
 சி.கார்த்திக் (திருச்செங்கோடு) திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் க.சிவக்குமார்
ஆகியோர் இச்சந்திப்பில்  பங்கேற்றனர்.

-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.