சனி, 8 ஆகஸ்ட், 2020

*🎤தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். - முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு:*

*🎤தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? முதலமைச்சர் பழனிசாமி  பதில்*

*பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.*

*கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.*

 *முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும்.*

*நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.*

 *நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.*

🔴அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மே 2020 தேர்வில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் வழங்குதல் சார்ந்து சுற்றறிக்கை.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மே 2020 தேர்வில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் வழங்குதல் சார்ந்து சுற்றறிக்கை.

*🇮🇳தொடக்கக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக அரசு முதன்மைச் செயலாளர்,அரசு துணைச் செயலாளர் சுற்றறிக்கைகள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..*

*🇮🇳தொடக்கக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக அரசு முதன்மைச் செயலாளர்,அரசு துணைச் செயலாளர் சுற்றறிக்கைகள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..*

*✍️ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- குப்பையில்லாத கிராமம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது சார்பாக மாநில திட்ட இயக்குநர் மற்றும் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை வழங்குதல் சார்பு.*

*✍️ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- குப்பையில்லாத கிராமம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது  சார்பாக  மாநில திட்ட இயக்குநர் மற்றும் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  அறிவுரை வழங்குதல் சார்பு.*

தாய்மொழியை பலிகொடுத்துவிடாதீர்!தாய்மொழியை அழிவின் விளிம்பில் நிறுத்திவிடாதீர்!தாய்மொழியை பழிச்சொல்லுக்கும்,இழிநிலைக்கும் உள்ளாக்கி விடாதீர்!நல்லதொரு வேண்டுகோள்!கீழ்க்கண்ட தகவல்தொகுப்பில்! நன்றி:ஆ.பகலவன்.

தாய்மொழியை பலிகொடுத்து
விடாதீர்!
தாய்மொழியை  அழிவின் விளிம்பில் நிறுத்திவிடாதீர்!
தாய்மொழியை 
பழிச்சொல்லுக்கும்,
இழிநிலைக்கும் உள்ளாக்கி விடாதீர்!
நல்லதொரு வேண்டுகோள்!
கீழ்க்கண்ட தகவல்தொகுப்பில்! 

நன்றி:ஆ.பகலவன்
------------------------------------------


இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்களேன்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி

ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,

மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி,ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி
ஆட்சி மொழி இந்தி

மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி
வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன

பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா

நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான சர்வாதிகாரம் அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய. கல்விக் கொள்கை வாயிலாக ...

- தோழர் ஆ. பகலவன்

*🖥️தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*  

*நாமக்கல் மாவட்டம்*
 *(கிளை)*

*********************
 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின்
*விரைவு மாவட்ட செயற்குழுக்*
*கூட்டம்* இணையவழியில்
07.08.2020 ( வெள்ளி) பிற்பகல் 04.30 மணி முதல் பி.ப 06.00 மணி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி
தலைமை தாங்கினார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் பாவலர்.திரு.க.மீ. அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 15 இல் அனைத்து ஒன்றியங்களிலும்  
பாவலர் அவர்களின் படத்திறப்பு மற்றும் இயக்க கொடியேற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கிடுவது என்று முடிவாற்றப்பட்டது.

2.தேசிய கல்வி கொள்கை 2020-ஐ தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.


இக்கூட்டத்தில் 
மாநிலத்தலைவர் மன்றம் திரு. நா.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகளை 
 மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.பாலமுரளி, மாவட்டத் துணைத் தலைவர்
திரு.வெ.ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் திரு.வெ.வடிவேல், திருமதி.து.லதா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர்
 திருமதி.கு.பாரதி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.பொன்.திலகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ், 
 பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்
ஒன்றியச் செயலாளர்கள்
திரு.சி.கார்த்திக் (திருச்செங்கோடு)
 திரு.க.சேகர் (பரமத்தி ) திரு.அ.ஜெயக்குமார் (நாமக்கல்) 
திரு.ப.சிவக்குமார் (எலச்சிபாளையம்)
திரு.இர.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்)
திரு.கா.சுந்தரம் (சேந்தமங்கலம்) திரு.கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்) திரு.சி.மோகன்குமார் (நாமகிரிப்பேட்டை) திரு.இரா.செல்வராசு (எருமப்பட்டி) 
திருமதி.கு.லட்சுமி (இராசிபுரம்) ஆகியோர் பங்கேற்றனர்.



மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)