சனி, 8 ஆகஸ்ட், 2020

*🖥️தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*  

*நாமக்கல் மாவட்டம்*
 *(கிளை)*

*********************
 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின்
*விரைவு மாவட்ட செயற்குழுக்*
*கூட்டம்* இணையவழியில்
07.08.2020 ( வெள்ளி) பிற்பகல் 04.30 மணி முதல் பி.ப 06.00 மணி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி
தலைமை தாங்கினார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் பாவலர்.திரு.க.மீ. அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 15 இல் அனைத்து ஒன்றியங்களிலும்  
பாவலர் அவர்களின் படத்திறப்பு மற்றும் இயக்க கொடியேற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கிடுவது என்று முடிவாற்றப்பட்டது.

2.தேசிய கல்வி கொள்கை 2020-ஐ தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.


இக்கூட்டத்தில் 
மாநிலத்தலைவர் மன்றம் திரு. நா.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகளை 
 மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.பாலமுரளி, மாவட்டத் துணைத் தலைவர்
திரு.வெ.ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் திரு.வெ.வடிவேல், திருமதி.து.லதா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர்
 திருமதி.கு.பாரதி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.பொன்.திலகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ், 
 பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்
ஒன்றியச் செயலாளர்கள்
திரு.சி.கார்த்திக் (திருச்செங்கோடு)
 திரு.க.சேகர் (பரமத்தி ) திரு.அ.ஜெயக்குமார் (நாமக்கல்) 
திரு.ப.சிவக்குமார் (எலச்சிபாளையம்)
திரு.இர.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்)
திரு.கா.சுந்தரம் (சேந்தமங்கலம்) திரு.கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்) திரு.சி.மோகன்குமார் (நாமகிரிப்பேட்டை) திரு.இரா.செல்வராசு (எருமப்பட்டி) 
திருமதி.கு.லட்சுமி (இராசிபுரம்) ஆகியோர் பங்கேற்றனர்.



மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)

1 கருத்து: