புதன், 8 ஜூலை, 2020

ஒருவரின் பத்திரம் உண்மையாகேவே யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திலேயே பார்க்கலாம்

Click here....

*📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்- கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் - சார்பு.*

*📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்- கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் - சார்பு.*

*📘ஜூலை மாதம் ஆண்டு ஊதிய உயர்வு மாதம்* *Pay matrix மற்றும் வீட்டு வாடகைப்படி அட்டவணை.*



*📘ஜூலை மாதம் ஆண்டு ஊதிய உயர்வு மாதம்*

*Pay matrix மற்றும் வீட்டு வாடகைப்படி அட்டவணை.*

*🥇பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது 2019 விண்ணப்பிக்கும் இறுதி தேதி நீட்டிப்பு*

*🥇பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது 2019 விண்ணப்பிக்கும் இறுதி தேதி நீட்டிப்பு*

*Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.*

*Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி!*

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு  வரும்
13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்பு எஞ்சியுள்ள தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*🖥️தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்!* *பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின்* *மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு நடவடிக்கைகள்!*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்!
பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின்
மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு நடவடிக்கைகள்!

*🌐ஜூலை 8, வரலாற்றில் இன்று:ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம் இன்று.*

ஜூலை 8, வரலாற்றில் இன்று.

ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம் இன்று.

ஷெல்லி 1792 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி  அயர்லாந்து குடும்பத்தில் பிறந்தார். ஷெல்லி பரம்பரையான பிரபுக் குடும்பத்தில் செல்வ சிறப்புடன் பிறந்தார்.இவரது  தந்தை  திமோதி ஷெல்லி ஒரு பெரிய நிலப்பிரபு.பிரிட்டனில் இவரது தந்தை பிரிட்டனில் விக் கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்.

ஷெல்லி சிறுவயதில் ஸியான் ஹவுஸ் அகாடமி  பள்ளியில் கல்விக் கற்றார். ஷெல்லி செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் பிறவியிலே மனிதாபிமானமும் கருணை உள்ளமும் கொண்டவர்.இவர் தமது எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுதினார்.பின்னர் 1805 ஆம்  ஆண்டில் ஈட்டநிலுள்ள உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.

ஷெல்லிக்கு வகுப்பறையில்  பாடம் கேட்பதைவிட, புத்தகம் வாசிப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஷெல்லி. தனது 17வது அகவையில் முதல் படைப்பான ஜாஸ்ட் டேராஸி எனும் ஜெர்மனி மக்கள் பற்றிய நாவலில் அக்கதையின் வில்லன் மூலமாக தனது நாத்திகக் கருத்தினைப் பரப்பினார். ஷெல்லி ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனைப் பெயரில் எழுதினார். இரண்டாவது நாவலை வெளியிடும்போது நாத்திகத்தின் தேவை   எனும் தலைப்பிலான ஒரு கட்டுரைப் பிரசுரத்தினை வெளியிட்டார்.இந்தக் கட்டுரையினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் தனது நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தார்.

இந்த கட்டுரை அன்றைய பிரபுக்களுக்கும் பாதிரிமார்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.இதில் கோபமுற்ற கல்லூரி நிர்வாகம் ஷெல்லியை அழைத்து ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனைப் பெயரில்   இந்தப் புத்தகமும் நான் எழுதியதல்ல என்று கூறிவிடு என்று கல்லூரி  நிர்வாகம் கூறியது. ஆனால் ஷெல்லி மறுத்துவிட்டார். நாத்திகத்தைப் பரப்பியதற்கு ஷெல்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இத்துடன் இவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது.

தனது மகன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்து தலையிட்ட ஷெல்லியின் தந்தையார், மீண்டும் கல்லூரியில் தனது மகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிர்வாகமோ கட்டுரை பற்றிய கருத்தினை மாற்றிக்கொண்டால், மன்னிப்புக் கோரினால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேரலாம் என கூறியது. நாத்திகக் கருத்தினை மாற்றிக்கொண்டு தனது கல்வியைத் தொடரவேண்டிய அவசியமில்லை என்று கூறி பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார்.

ஷெல்லியின் இந்த செயலால் ஷெல்லியின் தந்தை மிகவும் கோபம் கொண்டார்.இதனால் ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார். உணவு உடையும் இல்லாமல் வறுமையின் பிடியில் வாழ்ந்தார்.இவரின் தாத்தாவின் மறைவிற்கு பின்பு இவரின் சொத்து இவருக்கு கிடைத்தது.ஆனால் தன் சொத்து முழுவதும் பிறருக்கு கொடுத்தார்.வில்லியம் காட்வின் என்பவரையே ஷெல்லி குருவாக
கொண்டிருந்தார்.

ஷெல்லி லண்டன் சென்று அங்கு வாழ்ந்தார்.அங்கு Harriet Westbrook என்ற  பெண்ணை மணந்தார்.மூன்றாண்டுகளில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.இருவரும் பிரிந்தனர்.. பி்ன்னர் மேரியை சந்தித்தார்.மேரியும் முற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தார்.1814ல் ஷெல்லியும் மேரியும் ஐரோப்பாவிற்கு சென்று வாழ்ந்தார்கள். தனது முதல் மனைவி   நீரில் மூழ்கி இறக்கும் வரை, வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை அனுப்பினார்.முதல் மனைவி இறந்த பின்னரே  மேரியை  மணந்து கொண்டார்.ஷெல்லி தனது இறுதிக் காலம் வரை மேரி உடனே வாழ்ந்தார்.ஷெல்லி மேரியோடு இத்தாலிக்கே சென்று வாழ்ந்தார்.

தனது இளம்வயதிலேயே கவிதை எழுத தொடங்கியவர். அனைத்துத் துறைகளிலும் தனது கவிதையை எழுதினார். உலகை சீரமைக்கும் உன்னத  படைப்புகளை தம் கவிதையில் எழுதினார்.
உலகின் பொதுக் கோட்பாடுகளையும், மனித உரிமைக் கோட்பாடுகளையும் எடுத்து இயம்பியவர்.சுதந்திர வேட்கையும் சீர்திருத்த எண்ணங்களும் தனது கவிதைகளின் கூறியவர்.

ஷெல்லியின் கவிதைகள் விழிப்புணர்வு கவிதைகளாகும். கவிதைகளையும், சமுதாய மாற்றங்களுக்கான தனது அரசியல் எண்ணங்களையும் இணைந்தே எழுதினார். அடிமைத்தனம், கொடுங்கோன்மை என்ற இரண்டும் இரட்டைஎதிரிகள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டியவர்.மக்களைத் தூண்டி விடக் கூடிய  கவிதைகளை உருவாக்கினார். அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற செய்ய கவிதைப் பாலம் அமைத்தவர். சுதந்திர வேட்கையை, முடியாட்சிக்கெதிரான உணர்வுகளை  தனது கவிதையின் மூலம்  முழக்கமிட்டவர்.

சுதந்திரத்திற்கான பாட்டு என்ற  கவிதையில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் விடுதலைக்காக நடத்திய வீரமிக்க போராட்டங்களையும், அவற்றின் உன்னதங்களையும், அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெருமைகளையும் கவிதைகளாக எழுதினார்.பெண் விடுதலைக்கான பொறுப்பு பெண்களிடம்தான் உள்ளது என்று கூறினார்.தனது சீர்திருத்தக் கருத்துக்களைத் துண்டறிக்கைகளாக்கிபல வழிகளைக் கையாண்டு பரப்பினார். முதன் முதலாக மனித உரிமைகளைப்பிரகடனப்படுத்தியவர் ஷெல்லி. கருத்துக்களைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்குண்டு என முழங்கியதோடு நில்லாமல் தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியவர்.

தனது கவிதை வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்களாட்சி முறைக்கு ஆதரவாளனாகவும்,
முடியாட்சிக்குத் எதிர்ப்பாளனாகவும்,
மதத்தின் பொய் முகங்களை அகற்றும் போராளியாகவும்,
சமத்துவ சமுதாயம் உருவாக  தன்னை அர்ப்பணித்துக் கொண்டு படைப்புகள் செய்தவர் ஷெல்லி.

1822 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி படகு விபத்தில் தனது  30ஆவது வயதில் ஷெல்லி காலமானார்.

இவரது கவிதைகள் இவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து  இவரது மனைவியால் வெளியிடப்பட்டன.
இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்பட
வில்லை.

எந்த ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் ஷெல்லிக்கு கல்வி  அளிக்க மறுத்ததோ அதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஷெல்லியின் கவிதை வரிகளை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகப் போதித்தது. இன்றும் போதித்து வருகிறது.

*🌐ஜூலை 8,* *வரலாற்றில் இன்று:உலகின் முதல் கோடீஸ்வரரான ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 8,
வரலாற்றில் இன்று.


உலகின் முதல் கோடீஸ்வரரான ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று.




உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதில் பலத்த போட்டியுடன் கோடீஸ்வரர்கள் முன்னேற்றமும், பின்னடைவும் கண்டுவருகிறார்கள். பில்கேட்ஸ் உலக கோடீஸ்வரராக நீண்டகாலமாக முன்னிலை வகிக்கிறார். இருந்தாலும் தற்போதைய நிலையில் முதலிடத்தில் இருப்பவர் ஜெப் பெஸோஸ் ஆவார். இவர் அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இன்று இந்த நிலை இருந்தாலும், உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜான் டி ராக்பெல்லர். இவர் 1839ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி நியூயார்க் நகரின் ரிச்சோர்டு பகுதியில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தார்.

தன் சிறுவயதில் உருளைக் கிழங்குகளை காய வைத்து, ஒரு மணிக்கு இரண்டு பென்ஸ் கூலி வாங்கி தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது வாலிப பருவத்தின் தொடக்கத்தில் ஒரு வணிகவியல் கல்லூரியில் 3 மாதங்கள் வியாபாரம் பற்றிய பயிற்சி எடுத்துக் கொண்டார். பின்னர் தனது 16ஆவது வயதில் பங்கு மார்க்கெட் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

19ஆவது வயதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிளார்க் என்பவருடன் இணைந்து பங்குச்சந்தையில் பங்குகளை விற்கும் வியாபாரத்தைத் தொடங்கினார். மேலும் பல தொழில்களையும் முயற்சித்துப் பார்த்த அவருக்கு, பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் கைகொடுத்தது. 20ஆவது வயதில் அமெரிக்காவில் எண்ணெய் இருக்கும் இடங்களைத் தேடி, அவற்றை எளிய முறையில் அதிகமாக தோண்டியெடுத்து விற்பனை செய்தார்.

பின்னாளில் அவர் ஸ்டார்ண்டர்டு ஆயில் கம்பெனியை நிறுவினார். இது உலகின் மிகப்பெரிய பெட்ரோல் நிறுவனங்களில் ஒன்றாகும். மண்ணெண்ணெய், பெட்ரோல் உற்பத்தி மற்றும் விற்பனை அவரை, செல்வத்தின் உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றது. பங்குச்சந்தை வணிகமும் கைகொடுத்தது.

அன்று மின்சார பல்புகள் பயன்பாட்டிற்கு வராததால், எண்ணெய் வளமே உலகம் முழுவதும் ஒளியைத் தந்து கொண்டிருந்தது. பின்னாளில் மோட்டார் வாகனங்களும் பெட்ரோலை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் தொடங்கியதால், இவரது வளர்ச்சியும் உயர்ந்து கொண்டே சென்றது.

தொடர்ந்து கடுமையான உழைப்பு பணமும், புகழும் அவரை உச்சிக்கு கொண்டு சென்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தன் பெயரில் “ராக்பெல்லர் அறக்கட்டளை” என்ற அமைப்பை நிறுவி, தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நற்பணிகளுக்காக மக்களுக்கு வழங்கினார். மேலும் உலகிலுள்ள பல தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும்பணத்தை வாரி வழங்கினார்.

அவர் பெரும் கோடீஸ்வரராகத் தன்னை வளர்த்துக் கொண்டபோதிலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தார். அவர் தனக்கென கார் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது போக்குவரத்துக்கு ஒரு வாடகை சாரட் வண்டியையே பயன்படுத்தினார்.

ஒருநாள் அந்த சாரட் வண்டியோட்டி அவரிடம் “ஐயா தாங்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதை நான் அறிவேன். அப்படியிருந்தும் தாங்கள் ஒரு கார் கூட வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தங்கள் மகன் தினமும் காரில் தான் சவாரி செய்கிறார். தாங்கள் ஏன் ஒரு கார் வைத்துக்கொள்ளவில்லை” என்று கேட்டார்.

அதைக் கேட்ட ராக்பெல்லர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.

பின்னர் அவர், “ஐயா என் மகனின் தந்தையான நான் ஒரு கோடீஸ்வரன். அதனால் அவன் காரில் செல்கிறான். ஆனால் என் தந்தை ஓர் ஏழை விவசாயி ஆயிற்றே. அந்த ஏழையின் மகனான நான் எப்படி கார் வாங்க முடியும்? அதனால்தான் தினமும் உங்கள் சாரட் வண்டியில் செல்கிறேன்” என்றார்.

அதைக்கேட்ட சாரட் வண்டிக்காரர் மெய்சிலிர்த்துப் போனாராம். அத்தனை எளிமையாக வாழ்ந்த கோடீஸ்வரர் ராக்பெல்லர், 1937ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தனது 98ஆவது வயதில் ஆர்மாண்ட் என்ற இடத்தில் காலமானார்.

இன்றும் அமெரிக்காவின் செல்வச் செழிப்பான குடும்பங்களில் ஒன்றாக ராக்பெல்லர் வம்சம் விளங்குகிறது.

*🌐ஜூலை 8, வரலாற்றில் இன்று:மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.*

ஜூலை 8, வரலாற்றில் இன்று

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.

மயிலை சீனி. வேங்கடசாமி  (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார்.

 தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றியக் கிளையின் தொடர் நடவடிக்கைகள்! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று உயர் அலுவலர்களுக்கு கடிதம் ! பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று கடிதம்! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றியக் கிளையின் தொடர் நடவடிக்கைகள்!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று
உயர் அலுவலர்களுக்கு கடிதம் !
பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று கடிதம்!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!


1)பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று உயர் அலுவலர்களுக்கு கடிதம்!பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் கடிதம்.

2)பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!