திங்கள், 15 ஜனவரி, 2018

சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?


நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. 

மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன.

சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 

இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

WhatsApp ல் வந்தாச்சு மேலும் ஒரு புதிய 'Update'...


பிரபல மெசேஜிங் தளமான  வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை 'டிமோட்' அல்லது 'டிஸ்மிஸ்' செய்யுமாறு புதிய வாட்ஸ்அப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விஷயமொன்றும் உள்ளது. 
டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக 'ஆட்' செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது. 

தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்...


மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 
இந்த மாத இறுதிக்குள், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு, கட்டணம் இல்லாமல் பயிற்சி பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏழை, எளியமாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, கற்றல் குறைபாடுள்ளவர்களின் நிலைமையை மாற்றி அமைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.


கற்றல் குறைபாட்டைதீர்க்கும் வகையில், பில்கேட்ஸ் நிறுவனம் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.