ஞாயிறு, 11 நவம்பர், 2018

டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர்


டிசம்பர் 9ம் தேதி மருத்துவ
பணியாளர் தேர்வாணையத்தால் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருதய நோய் தாக்கம் உள்ளவர்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறார்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் 416 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 720 பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவக் குழுக்களும், செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும், 25 ஆயிரத்து 899 சிறார்களுக்கு ரூ.200 கோடி செலவில் இருதய ஓட்டை, இருதய வால்வு போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைப் பிரசவத்திற்கு முன்பே கூறும் மருத்துவமனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கூறும் மருத்துவ மனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் டிசம்பர் 9ம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால், 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் மூலம் மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பற்றாக்குறையே இல்லை என்ற நிலை உருவாகும்' என்றார்

கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் இனி ஆஃப்லைனிலும் யூஸ் பண்ணலாம்.



செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. 


மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில்
கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும்.
மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.


ஆன்ட்ராய்டு மற்றும் IOS செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும்.

ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல்

பொதுமக்களும் பதிவை பார்க்கும் வகையில், இரட்டை திரை சிஸ்டம் நடைமுறை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 30ல் செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும், டோக்கன் சிஸ்டம் நடைமுறையும் டிசம்பர் 31க்குள் முழுவதுமாக அமல்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின்போது, சில நேரங்களில் விரல் ரேகை பதியவில்லை, புகைப்படம் சரியாக விழவில்லை என்று சிறு காரணங்களை கூறி பத்திரம் பதியாமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. மேலும், சார்பதிவாளர்கள் விரல் ரேகை பதிவை கேட்கும் போது பொதுமக்களுக்கும் பல நேரங்களில் சந்தேகங்கள் ஏற்படுகிறது.




இதை தவிர்க்கவும் பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மை இருக்கும் வகையில், பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும், ஆவண பதிவை தெரி ந்து கொள்ளும் வகையில் இரட்டை திரை சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னையில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த இரட்டை திரை சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சிஸ்டம் நவம்பர் 30ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.




அவர் மேலும், கூறுகையில், வங்கிகளை போல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் முன்பதிவு ெசய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 51 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த டோக்கன் சிஸ்டம் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

*ஆசிரியர் மன்றம்_ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்*




மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு சலுகைகள் பற்றி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கணும் - அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு


தேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை, அனுப்ப பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.




லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விபரம், எண்ணிக்கை குறித்து விபரங்களை அனுப்ப, உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுற்றிக்கை விடப்பட்டுள்ளது

பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தேர்தலின் போது, ஓட்டுச் சாவடி மைய அலுவலர், நிலை 1,2 அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். இதற்கான விபரங்கள் சேகரிக்க, கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன


அனைத்து ஆசிரியர்களும் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்




மேலும், நவ., மாதத்தில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளதாக தலைமையாசிரியரின் கடித ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது


CPT- (சென்னை துறைமுகம்) Chennai Port Trust Recruitment Senior Deputy Director Posts


Chennai Port Trust Recruitment 2018-2019, Chennai Port Trust invites Application for the post of 01 Senior Deputy Director (EDP) Posts. Application through Official website www.chennaiport.gov.in. CPT-Chennai Port Trust Recruitment Senior Deputy Director Posts Opening Date and time for Submission of Application is 09.11.2018 and end up by 24.12.2018. You can check here Chennai Port Trust Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Chennai Port Trust Selection Process, How to Apply, Chennai Port Trust Syllabus, Chennai Port Trust Question Paper, Chennai Port Trust Admit Date Release Date, Chennai Port Trust Exam Date, Chennai Port Trust Result Release Date & other rules are given below…



CPT–Chennai Port TrustRecruitment Senior Deputy Director Posts
Highlights for Chennai Port Trust Recruitment 2018 Notification:
Organization Name: Chennai Port Trust
Job Category: Central Govt Jobs
Official Website: www.chennaiport.gov.in
Name of the Posts: Senior Deputy Director (EDP) & Various Post
No. of Posts: 01 Vacancies
Qualification: Engineering degree
Salary Details: Rs.24,900- 50,500/-pm
Job Location: Chennai
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Starting Date: 09.11.2018
Last Date: 24.12.2018
 
Chennai Port Trust Recruitment 2018 Vacancy Detailed:
Name of the Post & No of Vacancies:
Senior Deputy Director (EDP): 01 post
Eligibility Criteria for Chennai Port Trust Senior Deputy Director (EDP):
As per the recent Chennai Port Trust notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Senior Deputy Director (EDP) job has given below.

Educational Qualification:
Degree in Computer Engineering / Computer Sciences from a recognized university / institution.
OR
Degree in Maths/ Statistics / Operational Research / Economics with Post Graduate Diploma in Computer Application / Computer Science / Information Technology from a recognized university / institution.
OR
Degree in Engineering with Post Graduate Diploma in Computer Application/ Computer Science/ Information Technology from a recognized university /institution.
Age Limit:
For Gen/ UR Candidates: 40 Years
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Chennai Port Trust official Notification 2018 for more reference
Salary Details:
Senior Deputy Director (EDP): Rs.24,900- 50,500 Per month
Chennai Port Trust Senior Deputy Director (EDP) Selection Procedure:
Interview
How to apply Chennai Port Trust Senior Deputy Director Jobs:
Log on to Chennai Port Trust Careers Page at official website to www.chennaiport.gov.in
Eligible candidates are advised to open Notification & Application Form
Read the Advertisement carefully to be sure about your eligibility
Take a print out of application form
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “Chennai Port Trust, Tamil Nadu” by post so as to reach us by 24.12.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates:
Starting Date for Submission of Application: 09.11.2018
Last date for Submission of Application: 24.12.2018
Chennai Port Trust Important Links:
Chennai Port Trust Official Notification & Application Form: Click Here


தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் வேலை -டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பதவி: DRAUGHTSMAN, GRADE-III
காலியிடங்கள்: 53
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.17.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகளை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
தகுதி: நகர திட்டமிடல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது கட்டடக்கலை துறையில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தமிழ்மொழியில் போதுமான அளவில் அறிவு பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது. 
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2018
மேலும் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pd

தமிழ்நாடு சுற்றுலா துறையில் கணிணி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள்



தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள உதவி நிரலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



பதவி:  ASSISTANT PROGRAMMER
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில், ஐடி, கணினி அறிவியல்  போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ., ஐடி, கணினி அறிவியல் பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் 

முறை: http://www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman and Managing Director Tamilnadu Tourism Development Corporation Ltd. Tourism Complex, No.2, Wallajah Road, Chennai 600 002
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadutourism.org/pdf/AsstProgrammerAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.11.2018

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்புகள்




தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: M.V. Mechanic (Skilled) - 06
பதவி: Copper & Tinsmith (Skilled) - 02
பதவி: M.V. Electrician (Skilled) - 01
பதவி: Tyreman (Skilled) - 02 
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: 8 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் 

முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Manager, Mail Motor Service, No.37, (Old No.16/1), Greams
Road, Chennai – 600 006.”
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/SkilledArtisan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2018

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்புகள் Grade - 4




தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில காலியாக எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: EXECUTIVE OFFICER, GRADE-IV
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் புலவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் 

முறை:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_32_notyfn_EOGrade_IV.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை Grade 3 காலிபணியிடங்கள்



தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில காலியாக எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: EEXECUTIVE OFFICER, GRADE-III
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.20.600 - 65,500
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்புகள்- பாதுகாவலர் பணியிடம்- 10ம் வகுப்பு தேர்ச்சி


இந்திய ரிசர்வ் வங்கி 

வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Guards
காலியிடங்கள்: 270 (சென்னை 19)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/FADVTSG0911201800C8D6B502AE4328AAB79D0777A33777.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்ப்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?

கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில் அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது 
மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்கு தான் அந்த மானியம் வரும்.

ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை
ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அதனை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்
 முதலில் நீங்கள் www.mylpg.inவெப்சைட்டில் செல்ல வேண்டும்,
அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.
உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும, 

அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.


மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,

மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள். 




அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது...


தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டு முதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், 'சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல் சார்ந்து...

வாட்ஸ்ஆப்-ல் நீங்கள் பேசினால் எழுத்துக்களாக மாற்றும் முறை...

உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் ரோபோக்கள்~ சீனவில் அறிமுகம்…

உலகத்திலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
" இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் " என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.