ஞாயிறு, 11 நவம்பர், 2018

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்புகள்- பாதுகாவலர் பணியிடம்- 10ம் வகுப்பு தேர்ச்சி


இந்திய ரிசர்வ் வங்கி 

வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Guards
காலியிடங்கள்: 270 (சென்னை 19)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/FADVTSG0911201800C8D6B502AE4328AAB79D0777A33777.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.