ஞாயிறு, 24 ஜூன், 2018

SSA-SPD PROCEEDINGS-Attendance Apps- Launching in all Districts of Tamilnadu-Reg...

CEO Portal என்னும் Mobile App - தினசரி வருகைப் பதிவேடு -அனைத்து வகையான பள்ளிகளில் உள்ள தலைமையாசியர்கள் மற்றும் ஆசியர்கள் பயன்படுத்தும் நிரந்தரமான Whatsapp நம்பர் வட்டார வாளமையத்தில் ஒப்படைத்தல்-சார்பு...

திங்களன்று(25-06-18) நாமக்கல்லில் கண்டன ஆர்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

திங்களன்று நாமக்கல்லில் கண்டன ஆர்பாட்டம்
***********************
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் 25.06.2018( திங்கள்) பிற்பகல் 05 .00 மணியளவில் நாமக்கல் பூங்காசாலையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது...

நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள், ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
                  ~முருகசெல்வராசன்.

TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசனில் நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?


மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது. 

அதற்கு...

1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும். 

2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password   பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும். 

3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும்​ monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும். 

4. Student attendance என்ற பகுதியை​ தொட்டால் வகுப்புகள் வரும். 

5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும். 

6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில்​ P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும். 

7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும். 

9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால்  அந்த வகுப்பு attendance online ல் ok. 

10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது. 

11. அடுத்து monthly report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும். 

12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும். 

13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க. 

Click here for App.... 

BHARAT RATNA DR. A.P.J.ABDUL KALAM AWARD – APPLICATIONS INVITED – LAST DATE 10TH JULY 2018!

அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

விஞ்ஞான
வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 'அப்துல் கலாம் விருது' வழங்கப்படுகிறது.

இவ்விருது, சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும். விருது பெறுபவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காசோலை, எட்டு கிராம் தங்கப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் தரப்படும்.

விருது பெற விரும்புவோர், சுயவிபரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்,
அரசு முதன்மை செயலர், உயர் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 600009.
என்ற முகவரிக்கு ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.'

விருது பெற தகுதியான நபரை, தமிழக அரசு நியமித்துள்ள தேர்வுக் குழு முடிவு செய்யும்' என, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனீல் பாலீவால் அறிவித்துள்ளார்.

ENGLISH READING MATERIAL FOR SLOW BLOOMING STUDENTS...

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செல்போன் மூலமாகவே எளிமையாக இணைக்கலாம்!


இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தி வைத்துள்ளது.

 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. 

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்து கொடுத்தது.
அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
அந்த இணைப்பில் வருமான வரி செலுத்துவோர் சென்று, தங்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே போதுமானது. சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றில் உள்ள சிறிய பெயர் மாற்றங்களும் இதில் தாமாக சரிசெய்யப்பட்டு விடும்.
Link:

குறுஞ்செய்தி வசதி: 

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, செல்லிடப்பேசியில்UIDPAN என்று டைப் செய்து இடைவேளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவேளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணைஇணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு...


 பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்து விடலாம். இல்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறகு இது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜூன் 30ம் தேதிக்குள் நிச்சயமாக இணைத்து விடுங்கள். இதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.

இவ்விரண்டு எண்களையும் இணைக்காமல் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது. மத்திய நேரடி வரி வருவாய்த் துறையின் அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அப்போதுதான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.