வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் க.மீ., அவர்கள் தொடர்ந்த வழக்கு எண் 1634 இன்படி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி ஆசிரியர் பணிஇடத்தில் பணியமர்த்த சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யப்படுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை  இன்று(25-1-19) விசாரணைக்கு வந்தது.

இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில் 2வது லிஸ்டில் 23வது   வழக்காக நமது வழக்கு வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வந்தது.

அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம்,மறியல் போராட்டம் தொடரும்~ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு...

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது~சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

வேலை நிறுத்த நோட்டீசுக்கோ வேலை நிறுத்தத்திற்கோ நாங்கள் தடை விதிக்கவில்லை- நீதிபதிகள் விளக்கம்.


மொழிப்போர் தியாகிகளை நெஞ்சில் ஏற்றுவோம்...

மொழி காப்போம்; 
இனம் காப்போம்; இனத்தின் உரிமை காப்போம்.
மாநிலம் காப்போம்.
மொழிப்போர் நாளில் 
ஆசிரியர்  இனத்தின் உரிமைக்கான போர்களத்தில்  முன்னைவிடவும் வலுவாக 
சமர் புரிவோம்!
சாக்டோ-சியோ பாதையில் பயணிப்போம்!

#நாம்வெல்வோம்
-முருகசெல்வராசன்

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது!

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை,  மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது

24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..

இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்
2வது லிஸ்டில்
23வது வழக்காக  ,வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது...

ஜாக்டோ-ஜியோ மாவட்ட மறியல் (24-01-19)~நாளிதழ் செய்தி...

ஜாக்டோ~ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது…

எங்கள் பணம் ரூ.50 ஆயிரம் கோடி எங்கே? தமிழகம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர் எழுச்சி மறியல் - கைது...

நன்றி : தீக்கதிர் நாளிதழ்

சென்னை, ஜன.23-ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் வட்ட, ஊராட்சி, மாவட்ட தலைநகரங்களில் புதனன்று (ஜன. 23)சாலை மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக சென்னைமாநகராட்சி அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை யில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் மு.அன்பரசு, அ.மாயவன், எஸ்.சங்கர்பெருமாள், ந.ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.டேனியல் ஜெயசிங், வெங்கடேசன், சத்தியநாதன், ஜெ.பட்டாபி, அந்தோணி,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுந்தரம்மாள், அருணா (ஆசிரியர் சங்கம்), டெய்சி (ஐசிடிஎஸ்), சீனிவாசலு, சிவா (செங்கொடி சங்கம்) மற்றும் ஏராளமானஅனைத்துத் துறையைச் சேர்ந்த அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சிஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் ந.ரங்கராஜன், மு.அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். வாழ்வாதாரப் பிரச்சனையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறைதொடர வேண்டும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை வெறும் காகித அறிக்கை யாக இருந்து கொண்டிருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு 6ஆவது, 7ஆவது ஊதியக் குழுவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.15,000 அடிப்படை ஊதியத்தில் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சித்திக் குழு வினுடைய அறிக்கையில் இந்த இழப்பீட்டை சரி செய்வதற்குரிய சாராம்சம் இல்லாமல் நீதிமன்றத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை களிலுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நிலையில், தற்போது இயற்றியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும்.3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதால் தொடக்கக் கல்வி நிர்வாகமே இல்லாதநிலையை ஏற்படுத்தும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. எனவே பள்ளிகளை இணைக் கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

நிதிப் பற்றாக்குறை உண்மையா?

நிதிப்பற்றாக் குறை என அரசு கூறுகிறது. இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரம் பேர் செலுத்தியுள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய். அதைத்தான் கேட்கிறோம். அரசினுடைய பங்களிப்பு25 ஆயிரம் கோடி ரூபாய். அந்த பணம்எங்கே போனது? நிதித்துறை செய லாளர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோரிடம் கேட்டால் இருக் கிறது என்று மட்டும் கூறுகிறார்கள். எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. 21 மாத நிலுவை 50 ஆயிரம் கோடி ரூபாய். 50 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது எனக் கூறத் தயாரா?2 விழுக்காடு ஊதியம் உயர்ந்தால் அரசுக்கு கூடுதல் செலவினம் எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்திய போது அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு என அறிவித்தீர்களா? எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கிய போது அதனால் அரசுக்கு இவ்வளவு கூடுதல் செலவு என தகவல் வெளியிட்டீர்களா? எனவே மேற்கண்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழை த்துப் பேசி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இடைநிலை ஆசிரியர்கள் 98 சதவிகிதம் இதற்கு ஒப்புக் கொண்டுள்ள தாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒருஇடைநிலை ஆசிரியர் கூட அந்த அரசாணையை பெற்று அங்கன்வாடி மையத்திற்கு செல்லவில்லை என்றனர். தேர்வு நேரத்தில் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுமே என்ற கேள்விக்கு, மாணவர்களின் நலன் கருதி விடுமுறைநாட்களில் கூட பாடம் நடத்தி முடிக்கப் பட்டிருக்கிறது. தேர்வு நேரத்தில் எங்களால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சனி ஞாயிறுலும் வகுப்பு எடுக்க தயார் என்கின்றனர் ஆசிரியர்கள் .

அன்பானவர்களே!வணக்கம். 25.01.19 ஜாக்டோ-ஜியோ தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...

25.01.19
தமிழகமெங்கும் மாவட்டத்தலைநகரில் மகத்தான மறியல் போராட்டத்தை நடத்துகிறது.

ஜாக்டோ-ஜியோ சொல்லி, 
ஜாக்டோ-ஜியோ அழைத்து,
கோரிக்கைகளை மனதில் கொண்டு  வேலைநிறுத்தத்திலும்,
மறியலிலும் பங்கேற்று இப்போரட்டத்தை வெற்றி முகம் நோக்கி முன்னேற்றப்பாதையில் வழி நடத்திவரும்
நாம் ,அந்த
 ஜாக்டோ-ஜியோ சொல்லும் வரை, 
அந்த கோரிக்கைகளுக்கு முடிவுகள் தெரியும் வரை
நான் பணிக்கு திரும்பமாட்டேன் என்று திடமான முடிவெடுத்து வேலைநிறுத்தத்தில் நில்லுங்கள்.
வேலைநிறுத்தத்தை ,மாவட்டமறியலை 
வெற்றிகரமாக்குங்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த 
மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாள்ர்கள் ,மன்ற  முன்னோடிகள்,
மன்றத்தின் ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! நாமக்கல் நோக்கி மறியல் படை நடத்துங்கள்!
நாமக்கல் பூங்காச்சாலையை நிறைத்திடுங்கள்!
ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காக ஆசிரியர் மன்றத்தின் அனைத்து உறுப்பினரும் கைதாகி சிறை ஏகினர் என்று பாராட்டத்தக்க முடிவெடுத்து செயலாற்றுங்கள்.

#நாம்வெல்வோம்.
-முருகசெல்வராசன்