திங்கள், 15 ஜூன், 2026
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -தொடக்கக் கல்வி மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் -கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டம்- 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ஊக்கத் தொகையில் உள்ள இடையூறு நிவர்த்தி செய்தல் மற்றும் 2026-2027 ஆம் நிதியாண்டில் செம்மையாக செயல்படுத்துதல் குறித்து அறிவுரை வழங்குதல் தொடர்பாக.
கிராமப்புற பெண் குழந்தைகள் ஊக்கத்தொகை திட்டம் – அவசர அறிவிப்பு
🏫 2025-2026 கல்வியாண்டு
✅ EMIS-ல் ஆதார் எண் சரியாக பதிவிடப்படாத 7,834 மாணவியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
✅ NPCI Inactive நிலையில் உள்ள 10,132 மாணவியர்களின் வங்கி கணக்குகள் NPCI Active ஆக மாற்றப்பட வேண்டும்.
✅ மாணவியரின்:
ஆதார் எண்
ஆதார் சீடிங் (Aadhaar Seeding)
வங்கி கணக்கு விவரங்கள்
ஆகியவை EMIS-ல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
⏰ கடைசி நாள் : 19.06.2026
⚠️ மேற்கண்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🏢 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் 📅 13.06.2026
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் ( கிளை) - மாவட்டச் செயற்குழு கூட்டம் 13.06.2026
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் - திருச்செங்கோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மலையடிவாரம் பள்ளியில் 13.06.2026 சனிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு ஆ. ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு.மெ. சங்கர் அவர்கள் செயல் அறிக்கை வாசித்தார் .மாவட்ட பொருளாளர் திரு சு.பிரபு அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)