வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -பள்ளிபாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் (22/12/17)~நிகழ்வுகள்...

CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு...

நிதி உதவி பெறும் பள்ளிகள்- மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த நிதி உதவி பள்ளிக்கு திரும்ப உத்தரவு - சேலம் DEEO செயல்முறைகள்...



EMIS Android Application's News...

அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis Android Application" வெளியிடப்பட்டுள்ளது.

1.இணையதளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.

2.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

3.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

4.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.

5.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

6.செயலியை Playstore ல்
டவுன்லோடு செய்துகொள்ளவும்.

Facebook ல் அறிமுகமாகும் புதிய வசதி!



ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.

'போட்டோ ரிவ்யூவ்' எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம், உங்கள் அனுமதியின்றி உங்கள் புகைப்படங்களை யாரேனும் அப்லோடு செய்தால் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும். உங்களுக்கு விருப்பமிருந்தால் அந்தப் புகைப்படத்தில் உங்களை டேக் செய்து கொள்ளலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபரிடம் கூறி அதை நீக்கச் சொல்லலாம் அல்லது ஃபேஸ்புக்கிடம் புகார் அளிக்கலாம்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயந்திர கற்றல் பிரிவின் தயாரிப்பு மேலாளர் நிபுன் மேத்தர் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியும். இந்த அம்சம் மக்களுக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் பயனர்கள் தங்கள் பாதுகாப்பை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரே புகைப்படத்தில் பல ஃபேக் ஐடிகள் இயங்கிவருவதை நாம் பார்த்திருப்போம். இனிமேல் இதுபோன்ற ஐடிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு...

இடைநிலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு...

அன்பானவர்களே!
வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின்
பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு குமாரபாளையம் நகராட்சி மேற்குகாலனி நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர்  மதிப்புமிகு.டெசுமா.பி.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
ஒன்றியச்செயலாளர் மதிப்புமிகு.சகோதரர்.சி.இளையராசா அவர்கள் கூட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டம் அதிமுக்கியத்துவம்கொண்டதாகும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை மனதினில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள் மற்றும் மன்றமுன்னோடிகள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று இக்கிளைக்கு ஆதரவினை நல்குமாறு
 அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
           ~முருகசெல்வராசன்.

DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு, கடிதம் நாள்: 21.12.2017.

தொடக்கக் கல்வி அலுவலகச் செய்தி...

                              
*இயக்குநர் அவர்களின்
விடுமுறைப் பட்டியல்படி
வரும் 23.12.17 சனிக்கிழமை
பள்ளி வேலைநாள் ஆகும்.                    
*24.12.17 முதல் 1.1.18 முடிய
இரண்டாம் பருவத்தேர்வு
விடுமுறை ஆகும்.

*மீண்டும் பள்ளி
2.1.18  (செவ்வாய்)அன்று
திறக்கப்படும்.                           
*பள்ளி திறந்த(2.1.18)அன்றே
மூன்றாம் பருவ புத்தகம் மற்றும்
குறிப்பேடுகளை வழங்கி
மாணவர்களிடம் கையொப்பம்
பெற்றிருக்க வேண்டும்.

//தகவல்பகிர்வு:
முருகசெல்வராசன்//