வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு...

அன்பானவர்களே!
வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின்
பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு குமாரபாளையம் நகராட்சி மேற்குகாலனி நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர்  மதிப்புமிகு.டெசுமா.பி.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
ஒன்றியச்செயலாளர் மதிப்புமிகு.சகோதரர்.சி.இளையராசா அவர்கள் கூட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டம் அதிமுக்கியத்துவம்கொண்டதாகும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை மனதினில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள் மற்றும் மன்றமுன்னோடிகள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று இக்கிளைக்கு ஆதரவினை நல்குமாறு
 அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக