வெள்ளி, 16 அக்டோபர், 2020

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799)

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.

 வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797இல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.
1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

அக்டோபர் 16,வரலாற்றில் இன்று."உலக உணவு தினம்" இன்று.

அக்டோபர் 16,
வரலாற்றில் இன்று.

"உலக உணவு தினம்" இன்று.

ஐக்கிய நாடுகளின் "உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு" தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் 1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.