வியாழன், 15 அக்டோபர், 2020

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.

டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

அக்டோபர் 15,
 வரலாற்றில் இன்று.

சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

Global Handwash Day.

முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.

அக்டோபர் 15,வரலாற்றில் இன்று.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 15,
வரலாற்றில் இன்று.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று.


1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.


அப்துல் கலாம்
இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். 

கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


 ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். 

கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்  பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார். சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்பட்டார்.

*🌟ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை எண் 154 நாள்:13.10.2020 வெளியீடு!*

*🌟ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை எண் 154 
நாள்:13.10.2020 வெளியீடு!*

*🌟இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் 65500-க்கு ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளது - RTI பதில் :*

*🌟இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் 65500-க்கு ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளது - RTI பதில் :*